என் மலர்
நீங்கள் தேடியது "tattoo"
- டாட்டூ வரைந்து கொள்ளும் பழக்கம், இளம் வயதினர் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
- டாட்டூ கலை, முன்பை விட இப்போது ரொம்பவே முன்னேறிவிட்டது.
இன்றைய இளைஞர்கள் அதிகம் விரும்பும் விஷயங்களில், 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்துதலும் ஒன்று. ஸ்டைலுக்காக டாட்டூ போடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருந்தாலும், அதை சிலர் உற்சாக காரணியாகவும் பார்க்கிறார்கள். அதனால்தான், நிறைய இளைஞர்கள் கை, கழுத்து, முதுகு, நெஞ்சு போன்ற உடல் பகுதிகளில், டாட்டூ போட்டுக்கொள்கிறார்கள்.
இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி இருக்கும் டாட்டூ மோகத்தை விரிவாக தெரிந்து கொள்ளவும், 'டாட்டூ' கலையில் மேம்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களை பற்றி அறிந்து கொள்ளவும், சென்னையைச் சேர்ந்த 'டாட்டூ' கலைஞர் லீலா மதியை சந்தித்தோம்.
பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கும் இவர், இளைஞர்களின் டாட்டூ மோகத்தை அறிந்து டாட்டூ கலைஞராக மாறி, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக புதுமையான டாட்டூக்களை வரைந்து வருகிறார். இவர் டாட்டூ குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
* டாட்டூ வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
என்னுடைய குடும்பத்திற்கும், ஓவிய கலைக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பதால், என்னால் வெகு சுலபமாக ஓவியம் வரைய முடிந்தது. அந்த கலையை எப்படி டிரெண்டாக மேம்படுத்தலாம் என்ற யோசனையில்தான், பட்டப் படிப்பை படித்திருந்தும் கூட, சிறப்பு பயிற்சிகள் வாயிலாக, டாட்டூ கலைஞராக மாறினேன். ஏனெனில், இனிவரும் காலங்களில், டாட்டூ கலைக்கு, அதீத வரவேற்பு இருக்கும்.
* சமீபகாலமாக டாட்டூ மீதான மோகம், அதிகரித்திருப்பது ஏன்?
நம்முடைய தாத்தா-பாட்டி காலத்தில், பச்சை குத்தும் பழக்கம் ரொம்பவே அதிகமாக இருந்தது. ஆனால் நம்முடைய அப்பா-அம்மா காலத்தில், டாட்டூ கலாசாரத்திற்கு பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு அரசு வேலையும், ராணுவ பணியும்கூட ஒரு காரண மாக இருக்கலாம். ஆனால் இன்றைய தலை முறையினர், எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்குள்ளும் அடங்காமல், அவர்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே, டாட்டூ கலாசாரம் எதிர்பார்க்காத வகையில் வளர்ந்திருக்கிறது. மேலும், இளைஞர்கள்-இளம் பெண்களின் ஹீரோவாக திகழும் நடிகர்-நடிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் போன்றோரும் டாட்டூ கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, உடல் முழுக்க டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது தாக்கத்தினாலும், டாட்டூ வரைந்து கொள்ளும் பழக்கம், இளம் வயதினர் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
* இந்தியாவில் டாட்டூ மோகம் எந்த அளவிற்கு இருக்கிறது?
நம்முடைய இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 65 சதவிகித மக்கள் டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறார்கள்.
* அன்றும், இன்றும் டாட்டூ எப்படி மாறுபடுகிறது?
டாட்டூ கலை, முன்பை விட இப்போது ரொம்பவே முன்னேறிவிட்டது. பச்சை நிறத்தில் மட்டுமல்ல, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணங்களில், 'டாட்டூ' வரைந்து கொள்வதற்கு ஏற்ப அதன் தொழில்நுட்பம் முன்னேறி இருக்கிறது. உலக நாடுகளில், வண்ண மைகளில் டாட்டூ வரைய அதிக வரவேற்பு இருக்கிறது. நம் இந்தியாவின், மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு பகுதிகளிலும், வண்ண மைகள் புழக்கத்தில் இருக்கின்றன. அதேபோல, தற்போது பயன்படுத்தப்படும் டாட்டூ மை, மிகவும் ஆரோக்கியமானது; பாதுகாப்பானது. ஐசோ பிரோபைல் ஆல்கஹால் இதில் இருப்பதால், நோய் தொற்றுகள் பரவும் அபாயம் மிகக் குறைவு.
மேலும் டாட்டூ வரைய உதவும் கருவிகளும் டிஜிட்டல் முறையில் முன்னேறிவிட்டன. டாட்டூ கலைஞர்களுக்கு சவுகரியமான வகையில் கையடக்கமான பல கருவிகள், மார்க்கெட்டில் இருக்கின்றன. இவை முன்பு போல அதிகம் வலியில்லாமல் டாட்டூ வரைய வழிகாட்டுகின்றன.
* முன்பெல்லாம் பெயர்களை பச்சை குத்துவது டிரெண்டாக இருந்தது. இப்போது என்ன டிரெண்டாக இருக்கிறது?
பெற்றோரின் பெயர், கணவன்-மனைவி பெயர், குழந்தைகளின் பெயர்களை டாட்டூ போடுவது, எவர்கிரீன் டிரெண்ட். அதேபோல, பிறந்த தேதி, திருமண தேதி, காதலை வெளிப்படுத்திய தேதி, குழந்தை பிறந்த தேதி, பெற்றோரின் ஓவியம் ஆகியவற்றை டாட்டூ போடும் பழக்கமும் நடை முறையில் இருக்கிறது. ஆனால் பேஷன் துறையில் இருப்பவர்கள், உடல் முழுக்க ஓவியங்களை வரைந்து கொள்வார்கள். அதில் தங்களுக்கு பிடித்தமான தெய்வங்களின் ஓவியங்கள் தொடங்கி, அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய ஓவிய காட்சிகளை வரையச் சொல்வார்கள். ஒருசிலர், பழங்குடியின அடையாளங்களை, டாட்டூவாக உடலில் வரைந்து கொள்வதுண்டு.
* அழகு என்பதை தாண்டி வேறு ஏதாவது வகையிலும் டாட்டூ பயன்படுகிறதா?
ஆம்..! விபத்துகளில் சிக்கியவர்களின் உடலில் மறையாமல் இருக்கும் வடுக்களை, டாட்டூ மூலமாக மறைப்பது உண்டு. அதேபோல, வெண் குஷ்டம் நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்கள்கூட, டாட்டூ மூலமாக முகப்பொலிவை மெருகேற்றுகிறார்கள்.
* டாட்டூ மோகம் யாரிடம் அதிகமாக இருக்கிறது?
இளம் வயதினர், டாட்டு போடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். குறிப்பாக, பெண்கள் ரொம்பவே தீவிரமாக இருக்கிறார்கள்.
* டாட்டூ வரைந்த பிறகு அழிக்க முடியுமா?
முடியும். ஆனால், அதற்கு காஸ்மெட்டாலஜி மருத்துவரை அனுக வேண்டியிருக்கும். அவர் மூலமாகத்தான், லேசர் முறையில் டாட்டூக்களை அகற்ற வேண்டும். அவை, நிறமிழக்க சில காலங்கள் தேவைப்படும்.
* டாட்டூவை போன்று, வேறு என்ன டிரெண்ட் ஆகிறது?
மேற்கத்திய பேஷன் கலாசாரங்களில், பியர்ஸிங் என்பதும் ரொம்ப பிரபலம். அதாவது காது, மூக்கு குத்தி கொள்வதை போல, உதடு, கண் புருவம், காதுகளின் மேல் பகுதிகளில் வளையம் போடும் 'பியர்ஸிங்' கலாசாரமும், தமிழகத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அடுத்த 2 வருடங்களில், நிறைய இளம் வயதினரை 'பியர்ஸிங்' பேஷனில் பார்க்க இருக்கிறோம்.
* டாட்டூ வரைய நினைப்பவர்கள், எந்தெந்த விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்?
சுத்தமான, முன் அனுபவம் உள்ள ஸ்டூடியோக்களை தேர்ந்தெடுப்பது நல்லது. டாட்டூ வரைய உதவும் ஊசிகளை மாற்றுகிறார்களா?, ரத்த சிதறல்கள் தெறிக்காமல் இருக்க பிளாஸ்டிக் ஷீட் மூலம் 'ராப்' செய்கிறார்களா? என்பதை எல்லாம் சோதித்த பிறகே, டாட்டூ போட வேண்டும்.
- மனித கை உள்பட உடல் துண்டுகள் இருப்பதாகவும் மீனவர்கள் கடலோர காவல்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.
- அது காணாமல் போன பாரியாதான் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது.
அர்ஜென்டினாவை சேர்ந்த 32 வயதான டியாகோ பாரியா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி அன்று காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பாரியாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாரியா, காணாமல் போன அன்று அர்ஜென்டினாவின் தெற்கு சுபுட் மாகாணத்தின் கடற்கரை அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பிறகு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், பாரியாவின் வாகனம் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில், பாரியா காணாமல் போன 10 நாட்களுக்கு பிறகு வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அருகில் மூன்று சுறாக்கள் கிடப்பதாகவும், அவை பிரித்தெடுக்கம்போது, மனித கை உள்பட உடல் துண்டுகள் இருப்பதாகவும் மீனவர்கள் கடலோர காவல்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் பாக துண்டுகளை சேகரித்தனர். பின்னர், சந்தேகமடைந்த போலீசார் இதுகுறித்து பாரியாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், கேகரிக்கப்பட்ட உடல் பாகங்களில் இருந்த கையில் தனித்துவமான டேட்டூ இருப்பதை கண்டு, அது பாரியாதான் என்று அடையாளம் கண்டனர்.
இருப்பினும், அது காணாமல் போன பாரியாதான் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது.
மேலும், பாரிய எப்படி தண்ணீரில் மூழ்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பச்சை குத்துவதால் அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
அக்காலத்தில் பச்சை குத்துவது என்றால் பெண்களுக்கு தான் முதல் இடம். ஏன் என்றால் அவர்கள் தான் பிள்ளைகளை பெற்று தருபவர்கள். அவர்கள் ஆரோக்கியம் தான் ஒரு குடும்பத்தின் அரண். ஆதலால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தம் உடலில் இருந்து மட்டும் அல்லாது பிரபஞ்சத்திடமும் இருந்து அவர்கள் சக்தி பெற வேண்டியது ஆயிற்று. ஆகவேதான் பச்சை குத்திக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது.
பச்சை குத்துதல் என்றாலும் சிலருக்கு பச்சை, கருப்பு கலந்த பச்சையாக மாறும். ஒரு சிலருக்கு கருப்பு நிறத்தில் மாறும். அவரவர் தேகத்தை பொறுத்து நிறம் வேறுபடும். ஆனாலும் பிராதமாக இருப்பது கருப்பு நிறமே. கருப்பு என்பது பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் சக்தி கொண்டது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். பிரபஞ்ச ஆற்றலை சரீரத்தில் பிரவேசிக்க செய்ய நம் முன்னோர்களால் வகுத்த ஓர் அருமையான யுக்தி என்றே பச்சைக் குத்துவதை சொல்லலாம்.
மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்து அரைத்து அதனை ஒரு துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்கி நீர் கலந்து அதனை பசையாக செய்து, பின் கூர்மையான ஊசியினால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி விடவேண்டும். இது எந்நிலையிலும் அழியாது.
பச்சை குத்துவதால் அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
தற்போது டாட்டூ என்ற பெயரில் பச்சை குத்துகிறார்கள். அதில் ரசாயனம் கலந்துள்ளதால் பாதிப்பானதே. மெகந்தி என்று பெண்கள் விசேஷங்களுக்கு போடுவதும் ஆபத்தான செயற்கை ரசாயனமே.
-ஜீ. சரவண குமார்
- இங்கிலாந்தை சேர்ந்த பிரபலம் ஆண் நண்பர் பெயரை நெற்றியில் பச்சை குத்தியுள்ளார்.
- இது பொய் என சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாற்றம்.
ஒரு ஆண் தனது தோழி (காதலி) மீது வைத்திருக்கும் அன்பையும், ஒரு பெண் ஆண் நண்பர் (காதலன்) மீது வைத்துள்ள அன்பையும் பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி வருவதுண்டு. சிலர் மக்கள் கூடியிருக்கும் பொது நிகழ்ச்சி நடைபெறும் இடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த இடம், சிலர் விமான பயணத்தின்போது கூட அன்பை வெளிப்படுத்துவார்கள். தற்போதைய நவீன காலத்தில் செல்போன் மெசேஜ் உள்ளிட்டவைகள் மூலமும் கவரும் வகையில் அன்பை வெளிப்படுத்துவார்கள். உடலில் பல இடங்களிலும் பச்சைக்குத்துவதும் உண்டு.
ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது ஆண் நண்பர் (காதலன்) பெயரை நெற்றியில் பச்சைக்குத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அந்த பிரபலம் அனா ஸ்டான்ஸ்கோவ்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நேர்மறை விமர்சனங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. ஒருவர் இது போலியானது எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அனா ஸ்டான்ஸ்கோவ்ஸ்கி வீடியோவிற்கு கீழ் "எனது முகத்தில் ஆண் நண்பரின் பெயரை பெற்றுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
"இது அந்த பெண் பின்தொடர்பவர்களை அதிகரிக்கச் செய்யவும், டாட்டூ கலைஞர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும் செய்யும் முயற்சி" எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் "டாட்டூ மெஷினில் ஊசி இல்லை எனவும், இது பிராங்க் வீடியோ. ரத்தம் வரவில்லை. அந்த இடம் சிகப்பாக மாறவில்லை" எனத் தெரிவித்துளள்ளார்.
இன்னொருவர் "அதை யாரும் உங்களிடம் சொல்லவில்லையா? உங்கள் காதலரின் பெயரை உங்கள் உடலில் வைத்தால். நீங்கள் பிரிந்து விடுவீர்கள், அது உண்மை" என பதிவிட்டுள்ளார்.
- அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவர் தனது உடலில் அறுவை சிகிச்சை மூலம் கூடுதலாக 4 முலைக்காம்புகளை (Nipple) சேர்த்துக் கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது
- இந்த வகையிலான செயற்கை இம்பிளான்ட்கள் மற்றும் பச்சை குத்துதல் மூலமும் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு தங்களின் உடல் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவர் தனது உடலில் அறுவை சிகிச்சை மூலம் கூடுதலாக 4 முலைக்காம்புகளை (Nipple) சேர்த்துக் கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாரி ஹூஃப்க்ளோப்பன் என்ற அந்த நபருக்குத் தனது உடம்பில் கூடுதலாக நிப்பிள்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என அவர் செயற்கை முறையில் உடலில் மாற்றம் செய்யும் நிபுணரான ஸ்டீவ் ஹாவொர்த்தை அணுகியுள்ளார். அதன்படி ஸ்டீவ் இயற்கையான ஆண் நிப்பிள்களைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நான்கு சிலிகான் நிப்பிள்களை ஹாரியின் உடம்பில் பொருத்த்தியுள்ளார்.
அதன்பின் அறுவை சிகிச்சை காயங்கள் குணமடைந்த பின் கொலராடோவைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஏஞ்சல் என்பவரிடம் சென்ற ஹாரி, தனது உடம்பில் புதிதாக பொறுத்தப்படுத்த சிலிகான் நிப்பில்கள் இயற்கையாகத் தோன்றும் வகையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

ஹாரியின் வீடியோவை பகிர்ந்த டாட்டூ கலைஞர் ஏஞ்சல், இந்த செயல்முறை மிகவும் எளிதான, சிக்கலற்ற முறைதான் என்று விளக்கினார். இது வினோதமாகத் தோன்றினாலும் இந்த வகையிலான செயற்கை இம்பிளான்ட்கள் மற்றும் பச்சை குத்துதல் மூலமும் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு தங்களின் உடல் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இயற்கைக்கு ஹாரியின் உடலில் கூடுதலாக உள்ள 4 நிப்பிள்கள் காண்போருக்கு உறுத்தலாகவே இருந்து வருகிறது.
- 2023 -ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன்.
- ஆனால் அது நடக்கவில்லை. இந்த முறை நாங்கள் அதை செய்து விட்டோம்.
தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற தேதி மற்றும் டி20 கோப்பையை பச்சைக் குத்தி கொள்ள போகிறேன் என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் அதை முன்பே திட்டமிட்டு இருந்தேன். 2023 -ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இந்த முறை நாங்கள் அதை செய்து விட்டோம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு அருமையான தருணம். ஜூன் 29 எனது தங்கையின் பிறந்த நாள் வேறு. நான் தற்போது பச்சைக் குத்திக்கொள்வது அவருக்கும் ஒரு பிறந்த நாள் பரிசாக அமையும். அதோடு இந்த நாள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய நாள் என்றார்.
உலகக் கோப்பையை வென்றது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இது நீண்ட காலமாக நினைவில் இருக்கும். இதைப் பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் உள்ளது. உலகக் கோப்பையை வென்ற நாளை நான் எனது நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்வேன்.
என்று கூறியுள்ளார்.
- ரசிகரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய கருத்துகள் வழியாக வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.
- ‘இதற்குதான் கல்வி மிகவும் முக்கியமானது” உள்ளிட்டவற்றை பதிவிட்டு பெண் பிரபலத்தின் ரசிகரின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.
டெல்லியில் தள்ளுவண்டியில் 'வடாபாவ்' விற்று வந்தவர் சந்திரிகா. யூடியூபர்கள் இவரையும் அவருடைய செய்முறையை தங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு அவரை பிரபலமாக்கினர். இதனால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாசிலும் அவர் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். ஒருபக்கம் புகழ் உச்சியை அடைந்தாலும் அவரின் நடவடிக்கை காரணமாக பலரால் வெறுக்கப்பட்டும் வருகிறார்.
இந்தநிலையில் சந்திரிகாவின் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் தனது முன்னங்கையில் டாட்டூவாக குத்தி உள்ளார். மேலும் பிக்பாஸ் வெற்றியாளர் எனவும் குத்திக்கொண்டு உள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ஆனால் ரசிகரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய கருத்துகள் வழியாக வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.
'இதற்குதான் கல்வி மிகவும் முக்கியமானது" உள்ளிட்டவற்றை பதிவிட்டு பெண் பிரபலத்தின் ரசிகரின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.
- பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் கலைஞர் ரிதேஷ் அகாரியா
- அவரது நெஞ்சில் “F**k the police” என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் "F**k the police" என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் ரிதேஷ் அகாரியா என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவரின் நெஞ்சில் "F**k the police" என்று எழுதப்பட்டிருந்த டாட்டூவை பகிர்ந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது.

இந்த புகைப்படம் வைரலாக நிலையில் போலீசின் கவனத்துக்கும் இது சென்றுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிதேஷ், தனது கடைக்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவரது நெஞ்சில் "F**k the police" என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக டாட்டூ கலைஞர் ரிதேஷ் அகாரியா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 352 இந்த கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது.
- கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு டாட்டூ போடுகின்றனர்.
சென்னை:
விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது.
71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது.
கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு 71 டாட்டூ கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடத்தில் டாட்டூ போடுகின்றனர்.
டாட்டூ போடும் நிகழ்ச்சியை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைக்க உள்ளார்.
- இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் புகார்.
- சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சியில், டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் போன்ற இயற்கைக்கு புறம்பான செயல்கள் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் செய்து வந்தார்.
இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில், டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன், அவரது கடையில் பணியாற்றிவந்த ஜெயராமன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை ஹரிஹரன் செய்து வந்தார்.
- டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில், உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் செய்து வந்தார்.
இளைஞர்கள், மாணவர்களை ஹரிஹரன் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் இது தொடர்பாக புகார் அளித்து வந்தனர்.
இதனையடுத்து, டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன், அவரது கடையில் பணியாற்றிவந்த ஜெயராமன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இவர்களின் மீது 7 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "உடல் உறுப்புகளை மாற்றம் செய்வதற்கான உரிய சான்றிதழை நான் பெறவில்லை. இதை சட்டபூர்வமாக தவறு ஏன்னு சொன்னார்கள். டிஐஜி வருண்குமாரின் ஆலோசனையின்படி எனக்கு கவுன்சிலிங் கொடுத்தார்கள். இதற்கான முறையான சான்றிதழ் பெறாமல் என்னை போல உடல் உறுப்புகளை மாற்றம் செய்யும் வேலையை யாரும் செய்யாதீர்கள். இல்லையென்றால் என்னைப்போல பல விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆதலால் இம்மாதிரி யாரும் செய்யாதீர்கள். இனிமேல் இம்மாதிரியான எவ்வித செயல்களிலும் நான் ஈடுபட மாட்டேன்" என்று ஹரிஹரன் தெரிவித்தார்.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று சென்னையில் நடக்கிறது.
சென்னை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வருண் சக்கரவர்த்தி இன்று சொந்த மண்ணான சென்னையில் இன்று இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாட உள்ளார்.

இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் படத்தை வருண் சக்கரவர்த்தி அவரது கையில் பச்சை குத்தியுள்ளார். தலைவா படத்தில் வரும் பிரபலமான விஜயின் போஸ்-ஐ அவர் பச்சை குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.