என் மலர்
நீங்கள் தேடியது "Tax"
- காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்து இருந்தது.
- இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.
புதுடெல்லி:
2014 முதல் 2017 வரையிலான வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்து இருந்தது.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு (2017-18, 2018-19, 2019-20, 2020-21) வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மற்றொரு மனுவை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
நீதிபதி யஷ்வந்த் சர்மா, புருஷேந்திரகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வருமான வரித்துறைக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களையும் இன்று தள்ளுபடி செய்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.
- 2024-25-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் வரை, புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகும் வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு உள்ளது.
- புதிய வரி விதிப்பு முறையில் வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளன.
புதுடெல்லி:
மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
புதிய வரி விதிப்பு முறை தொடர்பாக சில சமூக ஊடகத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது கவனத்துக்கு வந்துள்ளது. உண்மையில் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வரி விதிப்பு முறையில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை.
தங்களுக்கு பழைய வரி விதிப்பு முறை பயனளிக்குமா அல்லது புதிய வரி விதிப்பு முறை பயனளிக்குமா? என்பதை சிந்தித்து இரண்டில் ஏதேனும் ஒரு முறையை வரி செலுத்துவோர் தேர்வு செய்யலாம்.
2024-25-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் வரை, புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகும் வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு உள்ளது. வணிக வருமானம் எதுவும் இல்லாத தகுதியான நபர்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்களுக்கு உகந்த வரி விதிப்பு முறையை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நிதியாண்டில் புதிய வரி விதிப்பு முறையையும், மற்றொரு நிதியாண்டில் பழைய வரி விதிப்பு முறையையும் வரி செலுத்துவோர் தேர்வு செய்ய முடியும்.
புதிய வரி விதிப்பு முறையில் வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளன. எனினும் ஊதியத்தில் இருந்து நிலையாக பிடித்தம் செய்யப்படும் ரூ.50,000 குடும்ப ஓய்வூதியத்தில் இருந்து நிலையாக பிடித்தம் செய்யப்படும். ரூ.15,000-ஐ தவிர பழைய வரி விதிப்பு முறையில் உள்ள பிற வரி விலக்குகள் மற்றும் பிடித்தங்களின் பலன்கள் புதிய வரி விதிப்பு முறையில் இல்லை.
புதிய வரி விதிப்பு முறையின்படி, ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவோர் தங்கள் வருமானத்தில் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நவம்பர் 5 நடக்க உள்ள அமரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அதற்கான பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
- நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கும் இருந்தும் அவர்கள் அதிக இறக்குமதி வரியை விதிக்கின்றனர்.
இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா சீனாவை விட அதிக வரிவிதிப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 நடக்க உள்ள அமரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அதற்கான பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
அதன்படி டெட்ராய்ட் நகருக்கு பிரசாரம் சென்ற டிரம்ப் பேசியதாவது, நமது நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்குச் சீனா 200 சதவீதம் வரை வரி விதிக்கிறது, பிரேசிலும் அதிக வரி விதிக்கிறது.
இந்தியா, சீனாவை விட அதிக வரி விதிக்கிறது, அதுவும் சிரித்துக்கொண்டே.. இந்தியா- அமரிக்கா இடையே சிறந்த உறவு இருந்தும், அதுவும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கும் இருந்தும் அவர்கள் அதிக இறக்குமதி வரியை விதிக்கின்றனர்.
நான் தேர்தலில் வென்றால் [அமெரிக்க பொருட்களுக்கு] அதிக இறக்குமதி வரி விதிக்கும் அதுபோன்ற நாடுகளுக்கு நிகராக அந்நாட்டிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை உயர்த்துவேன் என்று பேசியுள்ளார்
- 100 சவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
- அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் 100 சவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அவர் மேலும் எச்சரிக்கை விடுத்தார்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.
அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த பதிவில், "பிரிக்ஸ் நாடுகள் டாலரை தவிர்க்க முயற்சிக்கும் போது நாங்கள் வேடிக்கை பார்த்த காலம் முடிந்து விட்டது. இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் உருவாக்க கூடாது. இதை மீறும் போது 100% கூடுதல் வரிகளை சந்திக்க வேண்டி இருக்கும். இல்லையெனில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெற்று கொள்ளலாம்."
"அவர்கள் மற்றொரு "ஏமாளியை தேடிக் கொள்ளலாம். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பிரிக்ஸ் மாற்றும் வாய்ப்பு இல்லை, இப்படி செய்ய நினைக்கும் நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ளலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் வரைமுறை இல்லை.
- அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி திருத்த சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி சட்டமானது அதில் குறிப்பிட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.
ஆனால் கல்வி நிறுவனம் உள்ளடங்களாக எந்த ஒரு நிறுவனத்தாலும் அனுமதிக்கான கட்டணத்தின் பேரில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது ஏதேனும் பிற நிகழ்ச்சிகள் மீது கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் எந்த ஒரு வரைமுறையும் இல்லை.
எனவே மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கும் அனுமதிக்கான கட்டணம் ஒவ்வொன்றின் மீதும் 10 விழுக்காடு வீதத்தில் கேளிக்கைகள் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் தகுந்தவாறு சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி எந்த ஒரு கல்வி நிறுவனம் அல்லது நிறுவனம் சங்கம், குழுமம் எந்த பெயரிலும் அழைக்கப்படும் நபர்களின் பிற கழகம் ஆகியவை இதில் அடங்கும்.
இதன் வளாகத்தில் அல்லது நுழைவு சீட்டு, பங்களிப்பு, சந்தா எந்த வகையிலும் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் அனுமதிக்கான கட்டணம் வாங்கப்படும் கல்வி நிறுவன இடங்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீத கேளிக்கை வரி உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
- அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும்.
- ஆனால் நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை.
அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் பதவியேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு வரி விதிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்தியா சில அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது. இதனால் அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
"அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால், அவர்களுக்கு அதே அளவு வரி விதிக்கிறோம். அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கிறோம். அனைத்து விதங்களிலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கின்றனர், ஆனால் நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை," என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், "பரஸ்பரம் என்ற சொல் மிக முக்கியமானது. இந்தியா எங்களுக்கு 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால், நாங்களும் அதுபோல் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றோமா? அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் அவர்கள் 100 மற்றும் 200 வசூலிக்கின்றனர்."
"இந்தியா, பிரேசில் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அவர்கள் எங்களுக்கு கட்டணம் விதிக்கின்றனர், அது பரவாயில்லை, ஆனால் நாங்களும் அவர்களுக்கு அதே கட்டணத்தை வசூலிக்க போகிறோம்," என்று தெரிவித்தார்.
- குகேஷ் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மூலமாக ரூ. 11.34 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெற்று இருக்கிறார்.
- குகேஷுக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ் சுமார் ரூ. 11 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார். அதாவது இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி. போட்டியின் விதிமுறைப்படி 13 சுற்றுகளில் யார் முதலில் 6.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுவார்கள். விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வெற்றிக்கும் அந்த வீரருக்கு சுமார் ரூ.1.68 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும்.
அந்த வகையில், குகேஷ் மொத்தம் மூன்று வெற்றிகளைப் பெற்று இருந்த நிலையில் அவருக்கு ரூ.5.04 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. டிங் லிரன் இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில், அவருக்கு ரூ. 3.36 கோடி கிடைத்தது. மீதமுள்ள பரிசுத் தொகை இருவருக்கும் இடையே சரி சமமாகப் பிரித்துத் தரப்பட்டது. இதன் மூலம் குகேஷ் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மூலமாக ரூ. 11.34 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெற்று இருக்கிறார். இந்த முழு தொகை குகேஷுக்கு அப்படியே போகாது என்றும் வரி பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், குகேஷ் பரிசுத் தொகையான ரூ.11 கோடியில் ரூ.4 கோடியை வரியாக செலுத்துகிறார் என்று தகவல் பரவியது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
குகேஷ் பரிசுத் தொகையான ரூ.11.34 கோடியில் ரூ.4 கோடியை வரியாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கியது போல், வரிச்சலுகை வழங்கினால் இளம் வீரர்களை ஊக்குவிப்பதாக அமையும். மேலும் பாராளுமன்றத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷின் சாதனையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சுதா வலியுறத்தி உள்ளார்.
முன்னதாக, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் குகேஷுக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எந்தக் கடவுளும் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, இன்பம் காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை.
- மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடும் ஆகாது.
கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு, பன்மடங்கு வரியை அதிகரித்து வலுக்கட்டாயமாக வசூலிக்கும் தமிழ்நாடு அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அறநிலையத்துறை, கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகள் மற்றும் சிறு கடைகள் அமைத்து, அவற்றையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்கு உதவிடும் நோக்கத்துடன், கருணை அடிப்படையில் மிகக்குறைந்த தொகையில் அறநிலையத்துறையின் சார்பாக கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
அக்கடைகள் மூலம் அன்றாடம் வியாபாரம் நடத்திக் கிடைக்கும் வருமானத்தின் மூலம் வாழ்ந்துவரும் மக்களிடம், தற்போதைய திமுக அரசு இலட்சக்கணக்கில் வரி கட்டச்சொல்லி மிரட்டுவதும், கடைகளைப் பூட்டி முத்திரை வைப்பதும் பெருங்கொடுமையாகும்.
'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்பதே இறைநெறி கூறும் அறநெறியாகும். எந்தக் கடவுளும் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, இன்பம் காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை. மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடும் ஆகாது.
ஆகவே, தமிழ்நாடு அரசு கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையைத் திரும்பப்பெற்று, குறைந்த கட்டணம் வசூலிக்கும் பழைய அரசாணையையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் கூறியுள்ளார்.
- தற்போதைய டிஜிட்டல் உலகில், முக்கிய தகவல்கள் சர்வரில் சேமித்து வைக்கப்படுகின்றன.
- வரி செலுத்தும் சாமானியர்களை குறிவைத்து இந்த அதிகாரம் கொண்டுவரப்படவில்லை.
புதுடெல்லி:
1961-ம் ஆண்டின் வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக, புதிய வருமானவரி மசோதா-2025 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மசோதாவில், வரி செலுத்துவோரின் இ-மெயில், மற்றும் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் மின்னணு ஆவணங்களின் கடவுச்சொற்களை பெறுவதற்கும், அவற்றை உளவு பார்ப்பதற்கும் வருமானவரி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
அதுகுறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
டிஜிட்டல் கணக்குகளில் இருந்து ஆதாரங்களை சேகரிப்பது வரிஏய்ப்பை நிரூபிப்பதற்கு மட்டுமின்றி, வரிஏய்ப்பு எவ்வளவு நடந்துள்ளது என்று மதிப்பிடுவதற்கும் அவசியம் ஆகும்.
தற்போதைய டிஜிட்டல் உலகில், முக்கிய தகவல்கள் சர்வரில் சேமித்து வைக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் உள்ள சேமிப்பு வசதிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. அவற்றை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது.
அதற்கான ரகசிய எண்ணை வருமானவரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர் அளிப்பது இல்லை. வருமானவரி அதிகாரிகளுடன் ஒத்துழைப்பது இல்லை. இதனால் ஒட்டுமொத்த வருமானவரி சோதனையும் பலனின்றி போய் விடுகிறது. சம்பந்தப்பட்ட நபர் எளிதாக தப்பி விடுகிறார்.
எனவே, வருமானவரி சோதனையின்போது, டிஜிட்டல் வடிவத்தில் உள்ள கணக்குகளை ஆய்வு செய்வதற்காகத்தான் ரகசிய எண் கேட்டுப்பெற வருமானவரி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய 1961-ம் ஆண்டு வருமானவரி சட்டத்தின் 132-வது பிரிவிலேயே இந்த அதிகாரம் ஏற்கனவே உள்ளது. அது, புதிய வருமானவரி மசோதாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வருமானவரி சோதனையின்போது மட்டுமே இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும், சம்பந்தப்பட்ட நபர் எந்த தகவலையும் அளிக்க மறுத்தால் மட்டுமே அந்த அதிகாரம் பயன்படுத்தப்படும்.
மற்றபடி, வருமானவரி ஆய்வில் சிக்கி இருந்தால் கூட ஒருவரது ஆன்லைன் கணக்குகளை ஆய்வு செய்வது எங்கள் நோக்கம் அல்ல. சமூக வலைத்தள கணக்குகளை உளவு பார்க்க மாட்டோம். சமூக வலைத்தள கணக்குகள் மூலம் யாருக்கு எதிராகவும் பின்வாசல் வழியாக செயல்பட மாட்டோம்.
வரி செலுத்தும் சாமானியர்களை குறிவைத்து இந்த அதிகாரம் கொண்டுவரப்படவில்லை. ஆண்டுக்கு 8 கோடியே 79 லட்சம் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அவற்றில் சுமார் 1 சதவீத கணக்குகள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
எனவே, உளவு பார்ப்பதற்காக வருமானவரி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. அச்சத்தை உண்டாக்கும் நோக்கத்தில் பரப்பப்படும் வதந்திகள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரூர் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 11 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- ரூ.10 லட்சம் வரை வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.
கரூர்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம், திண்டுக்கல் ரோடு, மினி பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் வணிக நிறுவனம் மற்றும் மளிகை கடைகள் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கரூர் மினி பஸ் நிலையம் அருகே உள்ள 2 கடைகள், திண்டுக்கல் சாலையில் ஒரு கடை, கரூர் பஸ் நிலையத்தில் 8 கடைகள் என மொத்தம் 11 கடைக்காரர்கள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒரு கடைக்கு தலா ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து 11 கடைக்காரர்களுக்கு மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பியும் பணத்தையும் செலுத்தவில்லையாம்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 11 கடைகளுக்கும் சீல் வைப்பதற்காக மாநகராட்சி ஆய்வாளர், நகர அமைப்பு ஆய்வாளர் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சென்றனர்.
அப்போது கடைகளின் உரிமையாளர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், கரூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்ததாத 11 கடைகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் கரூர் பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆய்வு நடத்தினர்.
- திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
திருப்பூர் :
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆய்வு நடத்தினர். பின்னர் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டம், பொது நிதி, தொகுதி வளர்ச்சி நிதி, 15வது நிதிக்குழு மானியத் திட்டப்பணிகள், வரி உள்ளிட்ட வருவாய் இனம் குறித்த நிலவரம் என அனைத்து பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. குடிநீர் சப்ளை நடைமுறை குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.
மாநகராட்சி நிர்வாகத்தில் வரியினங்கள், வாடகை உள்ளிட்ட கட்டண வசூல் ஆகியன விரைவுபடுத்தி வசூல் பணிகள் மேம்படுத்த வேண்டும். வரி மறு சீரமைப்பு பணிகள் துரிதகதியில் செய்து முடித்து நிலுவையின்றி வசூலிக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகள் குறித்த காலத்துக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பணிகள் தரமாகவும், எந்த புகாருக்கும் இடம் தராத வகையிலும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.சுகாதாரப்பணிகள், குடிநீர் வினியோகம் ஆகியன எந்த தடையுமின்றி பொதுமக்கள் நலன் சார்ந்து மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.