என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNEB"

    • மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
    • 7915 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கோடை கால மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    ஏப்ரல் மாதம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 1300 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2610 மெகாவாட், மே மாதத்தில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 650 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 1080 மெகாவாட் கொள்முதல் செய்ய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    • வரும் சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும்.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்.

    மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏப்ரல், மே மாதங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
    • கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும்.

    கோடைக்காலத்தில் தடையின்றி சீரான மின்சார விநியோகம் செய்வது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

    * கோடைக்காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    * கோடைக்காலத்தில் தடையில்லாமல் சீரான மின் விநியோகம் செய்ய ஏற்பாடு.

    * ஏப்ரல், மே மாதங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    * கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும்.

    * தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 78 ஆயிரம் மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.

    * 3-ல் ஒரு பங்கு காலிப்பணியிடங்கள் உள்ளன.

    * மின்சாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் அவசியமான இடங்கள் நிரப்பப்படும்.

    * துணை மின்நிலையங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    * 2030ஆம் ஆண்டுக்குள் மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

    இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    • அதானி குழுமத்துடனான டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் டெண்டர் கோரியது.
    • 6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இந்த முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மின் மீட்டர் அமைப்பதற்கான 2-வது டெண்டரை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

    அதானி குழுமத்துடனான டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி நிறுவனம் பெற்ற டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இந்த முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    • மேலப்பாளையம் உப மின் நிலையத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    • தளவாட பொருட்கள் போதிய அளவில் கையிருப்பு வைத்திட அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை யொட்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம் உப மின் நிலையத்தில் இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அதிக மழைப் பொழிவு மற்றும் பேரிடர் காலங்களில் பாதுகாப்பான முறையில் பணியாளர்கள் பணிபுரியவும், மின் பகிர்ந்தளித்தல் மற்றும் மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்றுவழியில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்திய கூறுகளை பற்றியும் ஆலோசித்தார்.

    பேரிடர் காலத்தில் தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவுடன் இணைந்து மின்தடை ஏற்பட காரணமாக இருக்கும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். தளவாட பொருட்கள் போதிய அளவில் கையிருப்பு வைக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வுக் கூட்டத்தில் நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, சந்திப்பு உபகோட உதவி செயற் பொறியாளர் தங்க முருகன், பெருமாள்புரம் பிரிவு உதவி செயற்பொறியாளர் சின்னசாமி, பழையபேட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு ) சங்கர், உதவி மின் பொறியாளர்கள் உப மின் நிலையம் ஜெயந்தி, அபிராமிநாதன், ரத்தினவேணி, கார்த்திகுமார், வெங்கடேஷ், இளநிலை மின் பொறியாளர் செய்யதுஅலி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறைய அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
    • மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்

    கோவை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. ஆதார் இணைப்பு தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மின் வாரியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆதார் எண் இணைப்பு என்பது முக்கியம். மின் கட்டண விவகாரத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறைய அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம். அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் செலுத்தலாம். தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

    ஆதார் எண் கொடுப்பது நல்லது. மின் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். யார் பேரில் மின் இணைப்பு இருக்கிறதோ அந்த நபர் இறந்திருக்கும் பட்சத்தில் அதற்கான அவகாசங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன. தங்கள் மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெற இருக்கின்றன. ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். மின்சார துறையை சீர்திருத்தம் செய்யும் போது ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்சார வாரியத்தை புதிய பரிணாமத்தோடு மேம்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    பண்டிகை தினங்கள் தவிர, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

    • கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர்.
    • மின் கட்டண வசூல் மையங்களில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 9.75 லட்சம் குடிசை வீடுகள், 1.65 லட்சம் விசைத்தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பொதுமக்கள் சிரமத்தை போக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்படைந்துள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள்.

    சென்னையில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், வடபழனி என பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கட்டண வசூல் மையங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கவுண்டர்களில் வரிசையில் நின்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தனர்.

    தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர். கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர்.

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் தொடங்கிய முதல் நாளான நேற்று பல அலுவலகங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சென்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர்.

    மற்ற அலுவலகங்களில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். தமிழகம் முழுவதுமே நேற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.

    மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பொதுமக்கள் மின் கட்டண அட்டை, ஆதார் அட்டை, ஓ.டி.பி. வருவதற்கான செல்போன் ஆகியவற்றை கையோடு கொண்டு வர வேண்டும். சிலர் வீடுகளில் மற்றவர்கள் பயன்படுத்தும் செல்போன் நம்பரை கொடுத்து ஓ.டி.பி.-க்காக அவர்களிடம் போன் செய்து கேட்டு சொல்வதால் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.

    ஓ.டி.பி. அனுப்ப பயன்படுத்தும் செல்போன்களை முகாமுக்கு எடுத்து வந்தால் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க முடியும்.

    மின் கட்டண வசூல் மையங்களில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு முகாம்களில் தற்போது கூடுதல் கவுண்டர்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக சிறப்பு முகாம்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இன்றும் அனைத்து அலுவலகங்களிலும் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் நின்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    • தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு, இதறகான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளன.
    • மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்கள் 2 ஆயிரத்து 811 மின் அலுவலகங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயனர்கள் அனைவரும் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பின் கடந்த வாரம் மின் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது கட்டாயம் என மீண்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க ஆன்லைன் மற்றும் மின் வாரிய அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு முகாமை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 2 ஆயிரத்து 811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன.

    ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

    - முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ இணைய முகவரியை திறக்க வேண்டும்

    - அடுத்து திரையில் உங்களின் மின் இணைப்பு எண்ணை பதிவிட வேண்டும்

    - மொபைல் நம்பரை பதிவிட்டு, அதன் பின் கடவுச்சொல்லை பெற வேண்டும்

    - மொபைல் நம்பருக்கு வந்த கடவுச்சொல்லை பதிவிட வேண்டும்

    - மின் இணைப்பை பயன்படுத்துவோர் விவரங்களை பதிவிட வேண்டும்

    - இனி இணைக்க வேண்டியவரின் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்

    - அடுத்து ஆதாரில் உள்ளதை போன்று பெயரை பதிவிட வேண்டும்

    - ஆதார் அட்டை நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    - இறுதியில் படிவத்தை சமர்பித்து விட்டு, பதிவேற்றம் செய்ததற்கான ரசீதை டவுன்லோட் செய்ய வேண்டும்

    • மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தென்திருப்பேரையில் நடைபெற்றது.
    • தி.மு.க. சார்பில்வீடு வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழக அரசின் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தென்திருப்பேரையில் நடைபெற்றது. பேரூர் பகுதியில் 100 சதவீதம் முழுமையடையச் செய்ய தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி தென்திருப்பேரை பேரூர் தி.மு.க. சார்பில் தன்னார்வலர்களை கொண்டு வீடு வீடாக சென்று மின்இணைப்பு எண்ணோடு ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந் நிகழ்ச்சி ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் நகர செயலாளர் முத்து வீரப்பெருமாள், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய அவைத்தலைவர் மகரபூஷணம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஒன்றிய துணை செயலாளர் கோட்டூர் கோயில்துரை, மாவட்ட பிரதிநிதி செங்கோட்டையன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மாரியம்மாள், சீதாலெட்சுமி, சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • சிவகிரி, தேவிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சிவகிரி:

    கடையநல்லூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை 17 -ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    இதனால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. மேலும் மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    • ஆதார் இணைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவியது.
    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அந்தந்த மின் கட்டண அலுவலகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கடந்த மாதம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு மின் வாரியம் குறுந்தகவல் அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்துபவர்கள், ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. 

    இதனிடையே, ஆதார் இணைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவியது. குறிப்பாக 100 யூனிட் இலவச மின் திட்டம் நிறுத்தப்படுமா? மின் கட்டணம் செலுத்த முடியாமல் போகுமா? என மின் நுகர்வோர் குழப்ப நிலையில் இருந்தனர்.

    இந்நிலையில், பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மின் கட்டண அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. 

    அதன்படி, கடந்த மாதம் 28-ந்தேதி தமிழகம் முழுவதும் 2,811 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டன. இதில், பொதுமக்கள் நேரடியாக வந்து ஆதாரை இணைத்து கொள்ளலாம் என மின்துறை அறிவித்தது.

    மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதாரை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அந்தந்த மின் கட்டண அலுவலகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டன.

    முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் வரிசையில் காக்க வைக்காமல் எளிதில் ஆதாரை இணைக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டன. அதேபோல், செல்போன் மற்றும் கணினி வாயிலாக ஆன்லைன் மூலம் பலர் ஆதாரை இணைத்தனர்.

    அந்த வகையில், தமிழகம் முழுவதும் மின் இணைப்பு பெற்றுள்ள 2.37 கோடி மின்நுகர்வோரில் 1.09 கோடி பேர் சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×