என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tollgate"

    • காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், அதனை ரத்து செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை திரும்ப பெறுமாறு ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். நேரில் சென்றும் அது பற்றி வலியுறுத்த உள்ளோம். காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால் மத்திய அரசு சார்பில் காலாவதியான சுங்கச்சாவடிகள் இருக்கும் சாலைகளில் சிறிய மேம்பாலங்கள், சாலை மேம்பாட்டு பணிகள் நடக்க இருப்பதால் அவைகளை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளதாக பதில் அனுப்பி உள்ளார்கள். இதன் காரணமாகவே காலாவதியான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

    சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தும் போது காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவும் வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
    • வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்த நிலையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.110 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.180 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.380 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.275 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.415 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.595 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.485 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.725 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.55 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.90 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.130 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.185 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.275 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.200 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.290 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.435 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.350 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.525 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.115 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.185 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.385 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.280 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.420 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.490 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.730 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    மேலும் சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள உள்ளூர் வணிகம் சாராத வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.350 ஆகும்.

    • சாலை பாதுகாப்பு வார விழாவிற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
    • சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் ஒளிரும் கலர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

    கயத்தாறு:

    கயத்தாறு சுங்கச்சாவடியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் மற்றும் சுங்கச்சாவடி புராஜக்ட் மேலாளர்கள் அம்பத்சிரிவாசகிரன்குமார், வேல்ராஜ், தென்மண்டல மேலாளர் அனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு சுங்கச்சாவடி மேலாளர் சிம்கரிசிவகுமார், வரவேற்று பேசினார். விழாவில் டி.எஸ்.பி. வெங்கடேஷ் சாலை பாதுகாப்பு குறித்து பேசினார். சுங்கச்சாவடி வரும் அனைத்து வாகனங்களுக்கும் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் ஒளிரும் கலர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுங்கச்சாவடி அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • சுங்கச்சாவடிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.134.44 கோடி வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அதிகபட்சமாக டிசம்பர் 24-ந் தேதி ரூ.144.19 கோடி வசூலானதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதியில் இருந்து பாஸ்டேக் வாயிலாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

    அதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலும் வாகனங்கள் காத்திருக்கும் நேரமும் பெருமளவில் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கடந்த ஆண்டில் சுங்க கட்டணம் மூலமாக வசூல் செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டது.

    அதன்படி, பாஸ்டேக் வாயிலான வருவாய் ரூ.50,855 கோடியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் அந்த வருவாய் ரூ.34,778 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

    பாஸ்டேக் வாயிலான பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் ரூ.219 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் ரூ.324 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது வரை ஒட்டு மொத்தமாக 6.4 கோடி பாஸ்டேக் வில்லைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    பாஸ்டேக் வசதியுடன் செயல்படும் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை கடந்த 2021-ம் ஆண்டில் 922-ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 1,181-ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 323 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுங்கச்சாவடிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.134.44 கோடி வசூலானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டிசம்பர் 24-ந் தேதி ரூ.144.19 கோடி வசூலானதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாத கட்டணம் ரூ.240 ஆகும்.
    • பள்ளிப் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.1900 ஆகும்.

    சென்னை:

    சென்னை-புதுச்சேரி நெடுஞ்சாலையில் உத்தண்டி, மாமல்லபுரம், அனுமந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும்.

    சென்னை-மாமல்லபுரம் இடையே சுற்றுலா போக்குவரத்து அதிகரித்ததால் 2018-ம் ஆண்டு அக்கரை-மாமல்லபுரம் இடையேயான சாலை 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் காரணமாக மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கடந்த ஆகஸ்டு மாதம் முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களுக்கும் அக்கரை-மாமல்லபுரம் வரையிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    தற்போது இந்த பகுதியில் சுங்க கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடி, திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் சந்திப்பில் உள்ள கோவளம் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும்.

    சென்னை அக்கரை-மாமல்லபுரம் இடையே கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.47, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.70, ஒரே நாளில் பலமுறை பயணம் செய்ய ரூ.128, மாதாந்திர கட்டணம் ரூ.2,721 ஆகும். இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்துகளுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.75, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.113 கட்டணம் ஆகும்.

    பேருந்து, இருசக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.157, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.236 கட்டணம் ஆகும். 3 சக்கர வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.172, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.258 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.247, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.370 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள், 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.301, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.451 கட்டணம் ஆகும்.

    உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாத கட்டணம் ரூ.240 ஆகும். பள்ளிப் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.1900 ஆகும்.

    • கப்பலூர் டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
    • ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் திருமங்கலம் கோட்ட நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. கோட்டத்தலைவர் இளங் கோ தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்ததார். கோட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை மற்றும் தீர் மானங்களை வாசித்தார்.

    இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும், திருமங் கலம் அருகேயுள்ள கப்ப லூர் டோல்கேட் நகராட்சி எல்லையிலிருந்து 5 கி.மீ தூரத்திற்குள் விதிமுறை களை மீறி அமைந்துள்ளது.எனவே இங்கிருந்து டோல் கேட்டினை அகற்றி வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய மத்திய அரசு உடனடி யான நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    திருமங்கலம் நகரில் வெளியூர் பஸ்ஸ்டாண்ட் பணிகள், ெரயில்வே மேம் பால பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கப்ப லூரில் ஆர்.டி.ஓ. அலுவல கம் அருகே இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வா கத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்ளவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் கோட்ட துணைத்தலைவர் பால கிருஷ்ணன் மாநில கவுரவ தலைவர் பரமேஸ்வரன், திருமங்கலம் கோட்டத்தினை சேர்ந்த ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

    • 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது.
    • மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.

    விழுப்புரம்:

    சென்னை தலைநகரில் இருந்து மதுரை அ.தி.மு.க. மாநாடு மற்றும் விடு முறையை கழிக்க நேற்று முன்தினம் தென் மாவட்ட த்தை நோக்கி 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது. நேற்று மதுரை மாநாடு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் முதல் சென்னை நோக்கி வாகனங்கள் திரும்ப ஆரம்பித்தன.இதனால் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.தொடர்ந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டிருந்ததால் டோல் பிளாசா வில் கூடுதலாக 9 லைன்களை திறந்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். நேற்று இரவு வரை 39 ஆயிரம்வாகனங்கள் சென்னை திரும்பி சென்றது.

    • இந்த டோல்கேட் எத்தனை ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது.
    • டோல்கேட்டில் சட்டமன்ற அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரையை ஏற்று இதனை நடைமுறை படுத்துகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை அரசு உறுதி மொழி குழு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். வீடூர் அணையை பார்வையிட சென்ற குழு வழியில் விக்கிரவாண்டி டோல் கேட்டை கடந்த போது அங்கு குழுவின் தலைவர் வேல்முருகன், டோல்கேட் அதிகாரிகளுடன் நடை முறைகள் குறித்து வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது: 

    விக்கிரவாண்டி டோல்கேட்டில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ், கவர்னர், அரசு அதிகாரிகள், அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் மட்டும் செல்ல தனியாக ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள 54 டோல்கேட்டுகளில் 25-க்கும் மேற்பட்ட டோல்கேட்டில் சட்டமன்ற அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரையை ஏற்று இதனை நடைமுறை படுத்துகின்றனர்.

    ஆனால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் நடைமுறை படுத்துவது இல்லை. இந்த டோல்கேட் எத்தனை ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துள்ளனரா என்றும், இது வரை டோல்கேட் மூலம் எத்தனை மரக்கன்று கள் நட்டுள்ளனர் போன்ற விபரங்கள் வெளி யிட வேண்டும். இதனை பின்பற்றாத டோல்கேட்டு கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு இக்குழு பரிந்துரை செய்ய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது சட்டப்பேரவை செய லாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் பழனி, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், கோட்டாட்சியர், பிரவீனாகுமாரி, குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
    • சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், இதனை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் விக்கிரவாண்டி டோல்கேட்டை தே.மு.க.தி.க.வினர் இன்று காலை முற்றுகையிட்டனர். விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். விக்கிரவாண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார், தே.மு.தி.க.வினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இருந்தபோதும் தே.மு.தி.க.வினர் டோல்கேட்டை முற்றுகையிட முயற்சித்தனர். இதையடுத்து தே.மு.தி.க.வினரை கைது செய்த போலீசார், சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பணியில் இருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
    • சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் மத்திய அரசுக்கு சொந்தமான சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் கார் ஒன்று கடந்து செல்ல முயன்றது.

    அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அவசரமாக செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் காரை விட மறுத்ததால், அதன் டிரைவர் சுங்கச்சாவடி ஊழியர் மீது காரை மோதினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி செல்லக் கூடிய பதிவு எண் இல்லாத கார்களும், வேறு மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய கார்களும், திருமங்கலம் நகர் பகுதி வாகனங்கள் எனக் கூறி ஏமாற்றி, சுங்க வரி கட்டணம் செலுத்தாமல் செல்வது வாடிக்கையாகி வருவதாக புகார்கள் எழுந்தன.

    மேலும், சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பின்றி பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற வாகனங்களை சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்த கேட்டுக் கொள்ளும்போது வாக்குவாதம் மற்றும் கைகலப்பும் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். கப்பலூர் சுங்கச்சாவடியில் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிகளை ஈடுபட்டு வருகின்ற நிலை ஏற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

    உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காத போதிலும் பதிவெண் இல்லாத கார்களும் உள்ளூர் வாகனம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியர்களை தாக்குவதும், ஊழியர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனவும் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மேலும் 3 சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது.

    நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    • கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
    • பேருந்துகள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.

    சிதம்பரம்:

    விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே கொத்தட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் தனியார் பேருந்துகளுக்கு 50 முறை சென்று வர ரூ.14,090 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில், கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து, கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர். 

    ×