என் மலர்
நீங்கள் தேடியது "trucks"
- திருமங்கலம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
- இதனால் சிறிது நேரம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
திருமங்கலம்
கடலூர் மாவட்டத்தி லிருந்து நெல் மூைடகளை ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டம் ஆலங்குளத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று காலை மதுரை மாவட்டம் திருமங்கலம்-விருதுநகர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
ராஜபாளையம் சாலை பிரியும் இடத்திற்கு அருகே உள்ள பாலத்தில் சென்றபோது ஓசூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காய்கறி லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதனை ஓட்டி வந்த டிரைவர் நெல்லையைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 25) என்பவர் படுகா யமடைந்தார்.
உடனே அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கிய அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலை உதவி வாகனத்திற்கு தகவல் அளித்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியில் சிக்கிய வேன் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் சென்னிமலை பஸ் நிலையம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததோடு, டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் கரூரில் இருந்து ஊத்துக்குளிக்கு லாரியில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் அதே பகுதியில் மற்றொரு லாரி வந்தது. அந்த லாரியை சோதனை செய்ததில் அதிலும் மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணல் கடத்திய இந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 2 லாரிகளும் பெருந்துறை தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.
துணை தாசில்தார் பாலமுருகாயி, மணல் கடத்திய 2 லாரிகளின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவிக்கு பரிந்துரை செய்து உள்ளார்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபோர் ஏரியில் சவுடி மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 27-ந் தேதி மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தீர்வு ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை ஏரியில் மணல் அள்ளுவதற்காக 50-க்கும் மேற்பட்ட லாரிகள் அணி வகுத்து வந்தன. இதனை அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஏரியில் திரண்டனர்.
அவர்கள் லாரிகளை சிறைபிடித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. சந்திரதாசன், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மணல் குவாரி தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க கிராம மக்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். அவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மணல் குவாரிக்கு எதிராக மனு கொடுக்க முடிவு செய்து உள்ளனர். #Tamilnews
திருட்டு மணல் தடுப்பு சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள முத்திரைத்தாள் துறை அலுவலர் காசிசெல்வி, காரியாபட்டி தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அருப்புக்கோட்டையில் ராமசாமிபுரம் 4 வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழி பகுதியில் இருந்து போலி அனுமதி சீட்டுடன் மணல் அள்ளி வந்த 3 லாரிகள் சிக்கின. அதனை பறிமுதல் செய்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக லாரி டிரைவர்களான ராஜபாளையம் சத்திரப்பட்டியை சேர்ந்த மோகன், சாமிநாதன், வேல்முருகன் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.