என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udayanidhi Stalin"

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • முகாமை வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தி.மு.க.வினர் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடி வருகின்றனர்.

    இதனை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) மதுரை கூடல் நகரில் உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமை வணிகவரித்து றை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

    இதில் டி.வி.எஸ்., அசோக் லைலாண்ட், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியுடைய இளைஞர்களை தேர்வு செய்து வேலை வழங்கு வதற்கான ஆணையும் வழங்குகிறார்கள்.

    முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ப தினால் இளைஞர்கள் பங்கு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல். ஏ. ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

    கோவை:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 14-ந் தேதி பதவியேற்று கொண்டார்.

    இதையடுத்து அவரின் முதல் அரசு நிகழ்ச்சி கோவையில் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் காரில் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சென்று தங்கினார்.

    இன்று காலை கோவை நேரு விளையாட்டு மைதானத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் சென்றார். அங்கு அவரை விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டார். விளையாட்டு விடுதி மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.

    நேரு விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டார்.

    கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் கோவை மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் விளையாட்டு வீரர்கள், அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    ஆய்வு கூட்டம் முடிந்ததும், உதயநிதி ஸ்டாலின் கொடிசியா மைதானத்திற்கு சென்றார். அங்கு மிக பிரமாண்டமான அளவில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.

    விழாவுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    முன்னதாக கோவையில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டு வந்து பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

    • செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
    • 368 கோடி ருபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கோவைக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேரு விளையாட்டு அரங்கில் 7 கோடி ரூபாய் செலவில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 368 கோடி ருபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: 


    திமுக ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்று பத்திரிக்கை நண்பர்கள் நமது தலைவரிடம் ( மு.க.ஸ்டாலினிடம்) கேட்டார்கள். அப்போது பேசிய தலைவர், திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. வாக்களிக்காதவர்கள் வருந்தும் அளவிற்கு திமுக அரசு சிறப்பாக செயல்படும் என்று கூறியிருந்தார்.

    கோவையில் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட திமுக இல்லையே என்று எல்லோரும் நினைத்தோம். கோவையை இந்த அரசு புறக்கணித்து விடும் என்று எல்லோரும் பேசினார்கள். திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்படும் என்று வெளியான ஊகங்களை பொய்யென்று முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் நிரூபித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசு வேலை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • மாற்றுத்திறனாளி கிரிக்கெட் இந்திய அணி கேப்டன் வினோத்பாபு பேட்டியளித்தார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் கிரா மத்தை சேர்ந்தவர் வினோத்பாபு (வயது34). இவரது தலைமையிலான மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளை வினோத்பாபு பெற்று சாதனை படைத்தார். தமிழகம் திரும்பிய கேப்டன் வினோத்பாபு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிலையில் சொந்த ஊர் வந்த வினோத்பாபு நிருபர்களுக்கு பேட்டியளி த்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மாற்றுத்திறனாளி இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டேன். அப்போது பயண செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். இதுபற்றி அறிந்த பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் உடனடியாக நிதி உதவி செய்தார்.

    அதன் பின்னர் பாகிஸ்தா னில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தது. உலக கோப்பையுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

    அப்போது 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற போது மு.க. ஸ்டாலின் எனக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தார். 2018-ல் சந்தித்து பேசிய நிகழ்வினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னிடம், மு.க.ஸ்டாலின் ஞாபகப்படுத்தினார்.

    இதனையடுத்து 2 வாரத்தில் தங்களுக்கு அரசு வேலை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து லண்டனில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளேன்.

    கீழச்செல்வனூர் கிரா மத்தில் நான் பயிற்சி மேற்கொள்ள உரிய மைதானம், உபகரணங்கள் இல்லை. எனவே பயிற்சி மேற்கொள்வதற்காக தினமும் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக மைதானத்திற்கு சென்று வருகிறேன். தற்போது வீட்டில் போதுமான இடவசதி இல்லாமல் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. ஆகவே சொந்த கிராமத்தில் பயிற்சி மேற்கொள்ள மைதானத்தை அமைத்து உபகரணங்கள் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக மாநகர பஸ்கள், பஸ் நிலையங்களில் 2330 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
    • பஸ்சில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பாட்டால் அவசரகால பொத்தானை அழுத்த வேண்டும்.

    சென்னை:

    பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு நிதி உதவியுடன் மாநிலங்களில் 'நிர்பயா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் 2 கட்டமாக பொருத்தப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக 500 பஸ்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன் சோதனை ஓட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம் 14-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    2-ம் கட்டமாக ரு.72.25 கோடி ரூபாய் செலவில் 2500 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்தன. அதனுடன் பணிமனைகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 66 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்தன.

    அதில் இதுவரை 1830 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பஸ் நிலையங்கள், பணிமனைகள் என மொத்தம் 63 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி முடிவடைந்து உள்ளது.

    ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்ட 500 பஸ்களுடன் சேர்த்து இதுவரை 2330 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் தலா ஒரு வீடியோ ரெக்கார்டர், 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசரகால பொத்தான்கள், ஒலிப்பெருக்கி ஆகியவையும் பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்த பஸ்சில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பாட்டால் அவசரகால பொத்தானை அழுத்த வேண்டும். அப்போது 'தானியங்கி வீடியோ ரெக்கார்டர்' 1 நிமிட வீடியோவை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.

    அதேநேரத்தில் பஸ்சில் உள்ள ஒலிப்பான் ஒலிக்கும். அதன்மூலம் பஸ் டிரைவர் பஸ்சை எச்சரிக்கையுடன் நிறுத்தலாம். குற்றவாளிகளை கண்டக்டர் கண்டறியலாம். அதேநேரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளிக்கப்படும். அதன்மூலம் பஸ்சில் உள்ள ஜி.பி.எஸ். வசதியால் பஸ்சின் இருப்பிடத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    பஸ்களில் இருந்து பெரும் புகார்களை கண்காணிப்பதற்காக சென்னை பல்லவன் இல்லத்தில் 40 அடி நீளம், 7 அடி உயரம் உள்ள காட்சித் திரையுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு பங்கேற்றனர்.

    இந்த கட்டுப்பாட்டு அறையில் 16 கணினி இயக்குவோர் பணி புரிகின்றனர். இதன் செயல்பாடுகள், நேற்று முதல் தொடங்கின.

    • ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்-ஐ உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்
    • அங்குள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

    புவனேஸ்வர்:

    15-வது உலக கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், உலக கோப்பை போட்டிகளை காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளைப் பார்வையிடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம் சென்றுள்ளார்.

    ஒடிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.

    • ஒடிசா மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மிஷன் சக்தி என்ற திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தார்.
    • மிஷன் சக்தி திட்டத்தை செயல்படுத்தும் விதம் குறித்து ஒடிசா மாநில மிஷன் சக்தி இயக்குநர் சுஜாதா விளக்கமளித்தார்.

    புவனேஷ்வர்:

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டு திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக ஓடிசா மாநிலத்தில் இளைஞர்களின் திறனை மேம்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தை பார்வையிட்டு, இளைஞர்களை தேர்வு செய்தல், திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்குதல், பல்வேறு நாடுகளில் இளைஞர்களை பணியமர்த்துதல் போன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் ஒடிசா மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மிஷன் சக்தி (Mission Sakthi) என்ற திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், இத்திட்டம் எவ்வாறு மாபெரும் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பது குறித்தும் கலந்தாலோசித்தார். மேலும் மிஷன் சக்தி திட்டத்தினை ஒடிசா மாநிலத்தின் அனைத்து துறைகளும் எவ்வாறு இணைந்து செயல்படுத்துகின்றன என்பது குறித்து ஒடிசா மாநில மிஷன் சக்தி இயக்குநர் சுஜாதா விளக்கமளித்தார், அப்போது இத்திட்டம் குறித்து அனைத்து அலுவலர்களுடன்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கலந்துரையாடினார்.

    இந்நிகழ்வில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் முதன்மை செயலாளர் முனைவர். அதுல்யா மிஸ்ரா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் பெ.அமுதா,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  ச.தின்யதர்சினி,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கா.ப. கார்த்திகேயன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று தாளமுத்து நடராஜன், தர்மம்மாள் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
    • மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை:

    மொழிப்போர் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் தாளமுத்து நடராஜன், தர்மம்மாள் நினைவிடம் மூலக்கொத்தளத்தில் உள்ளன.

    மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் இன்று அவர்களது நினைவிடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த மூலக்கொத்தளம் வந்தார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று தாளமுத்து நடராஜன், தர்மம்மாள் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுடன் கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், எபிநேசர், மாவட்ட செயலாளர் இளைய அருணா, மாணவர் அணி செயலாளர் எழிலரசன், பி.டி.பாண்டிச் செல்வம், மண்டல தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், சுரேஷ், நிர்வாகிகள் சிவக்குமார், கோவிந்தசாமி, கோபி, தீனதயாளன், வி.வி.ரமேஷ், ஆர்.எம்.டி. ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இதேபோல வளசரவாக்கத்தில் மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எம்.எல். ஏ.க்கள் காரம்பாக்கம் கணபதி, பிரபாகரராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், பகுதி செயலாளர்கள் கே.கண்ணன், ராஜா, நிர்வாகிகள் கனிமொழி தனசேகரன், கவுன்சிலர் ரத்னா லோகேஷ், துரைராஜ், தங்கராஜ், தென்னரசன், ரஞ்சித்குார், வட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், மைக்கேல், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க மதுரை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
    • இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    மதுரை

    மதுரை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மதுரையில் வருகிற 6-ந்தேதி தி.மு.க. சார்பில் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு கிறது.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவுக்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    அவருக்கு மதுரை வடக்கு, மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

    எனவே இதில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளு மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீரர்-வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள பயிற்சி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
    • பழைய கட்டமைப்புகளை நவீன வடிவமைப்புடன் சீரமைப்பு செய்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    சென்னை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக தினமும் பயிற்சி செய்கின்ற வீரர்-வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள பயிற்சி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    நேரு விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச் சண்டை அரங்கினை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடி கூடுதல் வசதிகள் மற்றும் உபகரணங்கள் தேவை குறித்து கேட்டறிந்தார்.

    உடற்பயிற்சி கூடம், மாணவ-மாணவியர் தங்கும் விடுதி மற்றும் நடைபெற்று வருகின்ற பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து பழைய கட்டமைப்புகளை நவீன வடிவமைப்புடன் சீரமைப்பு செய்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து முறையாக பராமரித்திடவும் கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேர்காணல் நடைபெற்றது.
    • மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தனித்தனியாக பேசினார்.

    மதுரை:

    மதுரையில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கான நேர்காணல் இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்தது.

    மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நேர்காணலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்தார்.

    அவர் மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தனித்தனியாக பேசினார்.

    முன்னதாக நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினை விமான நிலையத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, ராஜகண்ணப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் உள்பட திரளான தி.மு.க.வினர் வரவேற்றனர்.

    • நாளை மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது.
    • தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் மாநிலங்கள் இடையேயான தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (8-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 16-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பிரிவில் போட்டி நடகிறது. இதில் 30 மாநிலங்கள், நிறுவனங்களை சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    அணிகள் பிரிவு, தனி நபர், இரட்டை பிரிவில் போட்டிகள் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து அணிகள் பிரிவில் 16 பேரும், சிறுவர் பிரிவில் 15 பேர், சிறுமியர் பிரில் 15 பேர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்தப் போட்டிகளின் மொத்த பரிசு தொகை ரூ.6.6 லட்சமாகும். 19 வயதுக்குட்பட் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு தலா ரூ.72 ஆயிரம், 17-வயது பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ. 60 ஆயிரம் வழங்கப்படும்.

    நாளை மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. கடைசியாக 2007-ம் ஆண்டு தேசிய சப்-ஜூனியர் போட்டி நடந்தது.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் டி.தேவ நாதன்யாதவ் செயலாளர் ஏ.வி.வித்யாசாகர் ஆகியோர் தெரிவித்தனர்.

    ×