என் மலர்
நீங்கள் தேடியது "US"
- போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
- நாட்டின் மீது குற்றம்சாட்டப்படுவது முதல் முறை.
அமெரிக்க தேசிய உளவுப்பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆண்டு அச்சுறுத்தல்கள் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் ஃபெண்டாலின் தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் இந்தியா மற்றம் சீனாவில் இருந்து அதிகளவில் தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்தியா மீது இத்தகைய குற்றம்சாட்டப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக இந்தியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பல்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. எனினும், ஒட்டுமொத்த நாட்டின் மீது குற்றம்சாட்டப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு சமீப காலங்களில் பெருமளவு அதிகரித்து வருகிறது. போதை பொருள் பயன்பாட்டை குறைக்கவும், சட்டவிரோத போதை பொருள் கடத்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், போதை பொருள் தயாரிப்புக்கான ஃபெண்டானில் என்ற ரசாயன கடத்தலில் சீனா மற்றும் இந்தியா தான் முன்னிலையில் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ஃபெண்டானில் என்ற ரசாயனக் கலவை வலி நிவாரணி வடிவில் வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
ஃபெண்டானில் ரசாயம் செயற்கை போதையை உருவாக்கும் தன்மை கொண்டது ஆகும். சில வகை அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் ஃபெண்டானில் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்து இருக்கிறது. எனினும், இதன் அளவு சற்று அதிகரித்தாலும் போதைப் பொருளாக மாறும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பயன்படுத்தும் போது, மக்கள் இதற்கு அடிமையாகவும் வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக போதை பொருள் தயாரிக்கும் கும்பல்கள் இந்த ரசாயனத்தை போதைப் பொருளாகவே மாற்றியுள்ளன. இது பொடி மற்றும் மாத்திரை வடிவில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமெரிக்க போதை பொருள் கடத்தல் கும்பல்கள் ஃபெணடானில் தயாரிப்பதற்கான ரசாயனங்களை பெரும்பாலும் சீனாவில் இருந்து அதிகளவில் வாங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஃபெண்டானில் போதை பொருளை அதிகம் எடுத்துக் கொண்டதால் 52 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பதை அடுத்து, இதனை ஒழிக்கும் முயற்சிகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காகவே ஃபெண்டானில் தயாரிப்பதற்கான ரசயானங்களை தயாரிக்கும் சீனா மீது அதிபர் டிரம்ப் அதிக வரி விதிப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும், போதை பொருள் கடத்தலை தடுத்த தவறியதாக கனடா மற்றும் மெக்சிகோ மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
- இலவசமாக பள்ளிகளை நடத்த வேண்டும் என வலதுசாரிகள் விரும்புகிறது.
- ஆவணங்களை உயர்த்திப் பிடித்தப்பட சிரித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் மத்திய கல்வித்துறையை கலைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார். இது அமெரிக்க வலதுசாரிகளின் பல்லாண்டு கால இலக்காக இருந்து வந்தது. இந்த உத்தரவின் மூலம் கல்வித்துறை அதிகாரம் முழுவதும் மாகாணங்களுக்கு வழங்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் உள்ள கிழக்கு அறையில் அமைக்கப்பட்ட மேசைகளில் சுற்றி அமரவைக்கப்பட்டு இருந்த பள்ளி மாணவர்கள் மத்தியில் டொனால்டு டிரம்ப் மத்திய கல்வித்துறையை கலைக்கக் கோரிய உத்தரவில் கையெழுத்திட்டார். பிறகு தான் கையெழுத்திட்ட ஆவணங்களை உயர்த்திப் பிடித்தப்படி சிரித்தார்.

"இந்த உத்தரவு, கல்வித்துறையை நிரந்தரமாக நீக்கத் தொடங்கும். நாங்கள் அதை மூடப் போகிறோம். விரைவில் இந்த நடவடிக்கை தொடங்கும். இது எங்களுக்கு எந்த பயனையும் அளிக்காது. நாங்கள் கல்வித்துறையை மாகாணங்களிடமே ஒப்படைக்கப் போகிறோம்," என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
1979ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மத்திய கல்வித் துறையை, காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் மூட முடியாது. ஆனால் அதிபர் டிரம்ப் உத்தரவு கல்வித்துறையில் நிதி மற்றும் ஊழியர்களைப் பற்றாக்குறையை வைத்திருக்கும் அதிகாரம் கொண்டிருக்கும்.
இந்த உத்தரவு, கல்வித் துறை செயலாளர் லிண்டா மெக்மஹோனை, "மத்திய கல்வித் துறையை மூடுவதற்கும், கல்வி அதிகாரத்தை மாகாணங்களிடம் திருப்பி வழங்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க" வலியுறுத்துகிறது.
- செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது.
- அதிபயங்கர வெடி சத்தம் கேட்டதாக தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிராக நடத்திய முதல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஹவுதி அமைப்புக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் போது, ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மற்றும் செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது.
இஸ்ரேலுக்கு எதிரான செயல்களை கண்டித்து அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் உயிரிழந்த 20 பேரில் குழந்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஏ.எஃப்.பி. புகைப்பட கலைஞர் வெளியிட்ட தகவல்களில் ஏமனின் தலைநகர் சனாவில் மூன்றுமுறை அதிபயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், குடியிருப்பு பகுதிகளில் கரும்புகைகள் வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் ஏமனின் வடக்கு பகுதியான சதா பகுதியிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய கமாண்ட் வெளியிட்ட பதிவுகளில், விமானத்தில் வீரர்கள் ஏறுவதும், வான்வெளியில் இருந்து அவர்கள் நடத்திய தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுவது தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
- டிரம்ப் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
- இதே விஷயத்தை ரஷியாவிடமும் எடுத்து செல்வோம்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை சுமார் 30 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்வது தொடர்பான அமெரிக்க பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் அறிவித்துள்ளது. மேலும், ரஷியாவுடன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நிலையில், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு சமீபத்தில் நிறுத்தப்பட்ட ராணுவ உதவிகளை மீண்டும் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு கடும் அழுத்தம் கொடுத்து, ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து டிரம்ப் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பு அதிகாரிகள், வான் வழி மற்றும் கடல் வழி தாக்குதல்களில் ஒரு பகுதி போர் நிறுத்தத்தை முன்மொழிந்தனர். மறுப்பக்கம் அமெரிக்கா சார்பில் ஒரு மாத காலத்திற்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்தது.
"போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்று உக்ரைனிடம் இன்று வலியுறுத்தினோம், அவர்கள் தரப்பில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாங்கள் இதே விஷயத்தை ரஷியாவிடமும் எடுத்து செல்வோம். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம். தற்போது பந்து அவர்களிடம் தான் உள்ளது."
"அவர்கள் சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில், துரதிர்ஷ்டவசமாக இங்கு அமைதி திரும்ப என்ன தடையாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நாங்கள் முயற்சிப்போம்," என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவிகள் உடனடியாக மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சந்தித்தனர். அப்போது, ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இதன் பிறகு தான், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்தார். அப்போது "அடுத்த சில நாட்களில் நடக்கும் என்று நம்புகிறேன், நான் அதை பார்க்க விரும்புகிறேன். நாளை ரஷியாவுடன் எங்களுக்கு ஒரு பெரிய பேச்சுவார்த்தை இருக்கிறது. சுமூகமான உரையாடலாக அது இருக்கும் என்று நம்புகிறேன்," என தெரிவித்தார்.
- 1992ம் ஆண்டில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை பயன்படுத்தப்பட்டது.
- அமெரிக்க தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன.
அமெரிக்காவின் மேற்கு பகுதியை சேர்ந்த ஒரேகான் மாகாணத்தில் வசிக்கும் பிலிப் - ரேச்சல் தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இதில் உள்ள அதிசயம், இந்த குழந்தைகள் 30 வருடங்களுக்கு முன்பு அதாவது 1992ம் ஆண்டில் கிரையோபிரிசர்வ் முறையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை மூலம் பிறந்துள்ளன.
பிலிப்- ரேச்சல் தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் கரு மூட்டையை தானமாக பெற்று செயற்கை கருத்தரிப்பு மூலம் மேலும் குழந்தை பெற முடிவு செய்த அவர்கள், அதற்காக அமெரிக்காவில் உள்ள தேசிய கருமுட்டை மையத்தை நாடினர்.

அந்த மையத்தில் 1992ம் ஆண்டில் இருந்து திரவ நைட்ரஜனில் பூஜ்ஜியத்திற்குக் கீழே 200 டிகிரி மைனஸ் வெப்ப நிலையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை அவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த கருமுட்டையை பயன்படுத்தி செயற்கை கரூவூட்டல் மூலம் உருவான இரட்டை குழந்தைகள் தற்போது பிறந்துள்ளது.
மருத்துவ உலகத்தில் இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 27 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த கருமுட்டையிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு பிறந்த மோலி கிப்சனின் சாதனையை இந்த குழந்தைகள் தற்போது முறியடித்துள்ளன.
ஆண் குழந்தைக்கு திமோத்தி என்றும், பெண் குழந்தைக்கு லிடியா என பெயர் சூட்டியுள்ள இரட்டை குழந்தைகளின் தந்தை பிலிப், நாங்கள் பெற விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையை மனதில் வைத்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடவுள் நமக்குக் கொடுக்க விரும்பும் அளவுக்கு எங்களிடம் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதுமே நினைத்ததாக அவர் கூறினார். மேலும் கரு தத்தெடுப்பு பற்றி கேள்விப்பட்டபோது, நாங்கள் அதை செய்ய விரும்பினோம், எங்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்தாலும் இவர்கள்தான் எங்களுடைய மூத்த குழந்தைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 1992ம் ஆண்டிலிருந்து உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் பிறந்துள்ளதால், திமோத்தியும், லிடியாவும் தற்போது உலகிலேயே வயதான குழந்தைகளாக கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம், அமெரிக்கா போரில் பங்கேற்றுள்ளதாக புகார்.
- உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுத உதவி, ரஷிய படையை இலக்காக கொண்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷிய தொடுத்துள்ள போர் 10வது மாதமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாக ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலமும், அதன் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலமும் அமெரிக்கா இந்த போரில் பங்கேற்றுள்ளதாக கூறினார்.
நிலத்திலிருந்து இலக்கை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் பேட்ரியாட் தடுப்பு ஏவுகணை போன்ற பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் நோக்கங்கள் பற்றிய அறிக்கை உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது ரஷியாவிற்கு எதிரான மற்றொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக மாறும் என்று கூறினார்.
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட எந்த ஆயுத உதவியும், ரஷிய படைகளையே இலக்காக கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் ரஷியாவின் எச்சரிக்கைய நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெனரல் பாட் ரைடர், உக்ரைனுக்கு நாங்கள் வழங்கும் பாதுகாப்பு உதவி குறித்து ரஷியாவின் கருத்துக்களை ஏற்று கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
- உக்ரைனுக்கு மேலும் 1.80 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது.
- அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகளும் இதில் அடக்கம்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு மோடி தலைமையின் கீழ் ராணுவ பதிலடிக்கு வாய்ப்பு அதிகம் என அறிக்கையில் தகவல்
- 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான அச்சுறுத்தல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு கடந்த காலத்தில் போல் இல்லாமல், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா, ராணுவ பலத்துடன் பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது, என அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
காஷ்மீரில் வன்முறை, அமைதியின்மை அல்லது இந்தியாவின் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றால் பதற்றம் அதிகரித்து இரு நாடுகள் இடையே போர் ஏற்படும் ஆபத்து உள்ளது என அறிக்கை கூறுகிறது.
இதேபோன்று அறிக்கையில், கிழக்கு லடாக் எல்லை பகுதியில் படைகளை குவித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு, இந்திய வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதில், 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது. இரு நாடுகளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் வழியே எல்லை விவகாரத்தில் தீர்வு கண்டுள்ளது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்ட சூழலும் காணப்படுகிறது. இது கடந்த பல தசாப்தங்களில் இல்லாத வகையில் தீவிர கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்றும் தெரிவித்து உள்ளது.
அணுசக்தி நாடுகளான இந்தியாவும், சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லை விவகாரத்தில் படைகளை குவித்து வருவதனால், ஆயுத மோதலை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்து உள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் அதன் நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட கூடிய சாத்தியமும் உள்ளது. அமெரிக்காவை தலையிட அழைக்கக்கூடிய நிலையும் காணப்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.
- ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷியா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம்.
- வடகொரியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறக்கூடியது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது.
இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில், ரஷியா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில், "வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷியா முயல்கிறது என்பதையும், ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷியா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். வடகொரியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறக்கூடியது ஆகும். ஒப்பந்தத்தின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்றார்.
எனினும் இதுகுறித்து வடகொரியா மற்றும் ரஷியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
- கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
- தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பியாங்யாங்:
கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 26-ந் தேதி அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பலை தனது நாட்டின் கடற்பகுதியில் நிறுத்தும் ஒப்பந்தத்தில் தென்கொரியா கையெழுத்திட்டது. இது தென்கொரியாவின் மீது அமெரிக்காவின் அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் வடகொரிய தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங் இது குறித்து கூறும்போது, `தென்கொரியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தமானது அந்த இரு நாடுகளுக்கும் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது.
- எச்1பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வாஷிங்டன்:
வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை வேலையில் அமர்த்த இந்த விசாவையே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் நம்பியுள்ளன. இந்த விசாவை வாங்கிய 6 ஆண்டுகள் கழித்து நிரந்தர குடியுரிமை அல்லது கிரீன் கார்டு பெற முடியும் என்பதால் இதற்கு எப்பொழுதுமே மவுசு அதிகம்.
இந்த நிலையில் எச்1பி விசா வழங்குவதில் சில நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.
எனவே இந்த எச்1பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த எச்1பி விசாக்கள் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு இதனை நீட்டிக்கலாம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
- ஜனவரி 2021-இல் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை 95 சதவீதம் வரை சரிந்துள்ளது.
- கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 91 சதவீதம் வரை குறைந்துள்ளது.
மே 12 ஆம் தேதியில் இருந்து அமெரிக்காவுக்குள் வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அந்த வகையில், "கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஃபெடரல் ஊழியர்கள், காண்டிராக்டர்கள், சர்வதேச பயணிகள் ஆகியோருக்கு மே 11 ஆம் தேதியில் இருந்து நீக்குகிறோம். இதே நாளில் இருந்து கொரோனா வைரஸ் பொது சுகாதார எச்சரிக்கை காலமும் முடிவுக்கு வரும்," என்று வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஜனவரி 2021-இல் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை 95 சதவீதம் வரை சரிந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 91 சதவீதம் வரை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தடுப்பூசி அவசியம் என்ற விதிகள் மற்றும் பிரமாண்ட தடுப்பூசி பிரசாரம் காரணமாக பல லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த தேசிய சுகாதார அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.