என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Hazare Trophy"

    • மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் குவித்தார்.
    • சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் விளையாடிய மகாராஷ்டிரா அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்தார். 

    அசிம் காசி 37 ரன்னும், சத்யஜீத் பச்சாவ் 27 ரன்னும் அடித்தனர். நவ்ஷாத் ஷேக் 31 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில் மகாராஷ்டிரா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது.

    இதையடுத்து 249 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சவுராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். சிராக் ஜானி 30 ரன்கள் அடித்தார். இதையடுத்து 46.3 ஓவர் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதுடன் விஜய் ஹசாரே கோப்பையை 2வது முறையாக தட்டிச் சென்றது.

    • முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 293 ரன்கள் எடுத்தது.
    • தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    இந்நிலையில், இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியின் ஹிமான்ஷு ராணா சதமடித்து அசத்தினார்.

    தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் அவுட்டாகினர்.

    பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். தினேஷ கார்த்திக் 31 ரன்னும், ஜெகதீசன் 30 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், தமிழக அணி ரன்களுக்கு 230 ஆல் அவுட்டானது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரியானா சார்பில் அன்ஷுல் கம்போஜ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    நாளை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் மோத உள்ளன.

    • முதல் அரையிறுதியில் தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்தது. தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். இவர் இந்த போட்டியில் காயத்துடன் விளையாடியுள்ளார். கழிவறையில் தவறி விழுந்ததால் அவரது உதட்டில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வாயில் பிளாஸ்திரி போட்டு விளையாடினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்த அணியில் சாய் சுதர்சன் இடம் பெறவில்லை.

    இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 2024 - 25-க்கான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 21-ம் தேதி முதல் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கான தமிழக அணி குரூப் டி-யில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சாய் கிஷோர் கேப்டனாகவும், ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த அணியில் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சாய் சுதர்சன் இடம் பெறவில்லை. இந்த அணியில் ஷாரூக் கான், பாபா இந்திரஜித், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழக அணி விவரம்; சாய் கிஷோர் (கேப்டன்), ஜெகதீசன் என் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த், பூபதி வைஷ்ணா குமார், துஷார் ரஹேஜா, ஷாரூக் கான், முகமது அலி, சந்தீப் வாரியர், தீபேஷ், அச்யுத், பிரணவ் ராகவேந்திரா, அஜித் ராம், வருண் சக்கரவர்த்தி, விஜய் ஷங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால்.

    • விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டது.
    • இந்த அணியில் இந்திய வீரர் ரகானே, ப்ரித்விஷா ஆகியோர் இடம் பெறவில்லை.

    விஜய் ஹசாரே கோப்பை வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 37 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த தொடருக்கான தமிழக அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்த தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 3 போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர் ரகானே, ப்ரித்விஷா ஆகியோர் இடம் பெறவில்லை.

    இந்நிலையில் அணியில் இடம் கிடைக்காதது குறித்து பிரித்வி ஷா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     அதில், நான் இன்னும் என்ன எல்லாம் பார்க்க வேண்டும். நீங்களே சொல்லுங்கள் கடவுளே. 65 போட்டிகளில் விளையாடி 3399 ரன்கள் எடுத்துள்ளேன். ஸ்ட்ரைக் ரேட் 126, சராசரி 55.7 வைத்துள்ளேன். இது போதுமானதாக இல்லை. ஆனாலும் என் மேல் நம்பிக்கையை வைத்திருப்பேன். மக்கள் இன்னும் என்னை நம்புவார்கள் என்று நம்புகிறேன். காரணம் நான் நிச்சயமாக திரும்பி வருவேன்.. ஓம் சாய் ராம் என கூறியுள்ளார்.

    • உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • உ.பி. அணி தனது முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதுகிறது.

    லக்னோ:

    கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் உலக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அந்த அதிரடி ஆட்டமே அவருக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க சிறந்த வழியாக அமைந்தது.

    இந்நிலையில், உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, ரிங்கு சிங் கூறியதாவது:

    புதிய ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி கேப்டன் பதவி குறித்து அதிகம் சிந்திக்கவில்லை.

    2015 மற்றும் 16ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற தமது உத்தரப்பிரதேச அணி மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே நோக்கம்.

    நான் யூபி டி20 லீக்கில் பந்து வீச முயற்சித்தேன். இன்றைய கிரிக்கெட் தொடர் ஒரு முழு பேக்கேஜை தான் விரும்புகிறது. பேட்டிங் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் செய்யக்கூடிய வீரராக இருப்பது முக்கியம்.

    எனவே நான் தற்போது பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். கேப்டனாக எனக்கு இப்போது ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. இதற்கு நான் தயாராக இருப்பது அவசியம்.

    நான் கடவுளை எப்போதும் நம்புகிறேன். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 5 சிக்சர்கள் அடித்த பிறகு இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது.

    இப்போதும் கடவுள் எனக்காக ஏதாவது செய்வார் என்று உணர்கிறேன். ஆனால் அதற்காக நான் கடினமாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச அணி இன்று தனது முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதுகிறது.

    • இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
    • இவரது தலைமையில் மும்பை அணி சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை சமீபத்தில் வென்றது.

    இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் முதன்மையான ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை- கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.

    கர்நாடகா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களம் இறங்கியது.

    தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆயுஷ் மத்ரே உடன் ஹர்திக் தமோர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 148 ரன்னாக இருக்கும்போது ஆயுஷ் மத்ரே ஆட்டமிழந்தார்.

    அதனைத் தொடர்ந்து மும்பை அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். அவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்க விட்டார். 51 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் சதத்தை பதிவு செய்தார்.

    தொடர்ந்து விளையாடிய அவர் 55 பந்தில் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும்.

    ஷிவம் டுபே 36 பந்தில் 63 ரன்கள் விளாசினார். ஹர்திக் தமோர் 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்களும் சேர்த்தனர். பின்னர் 383 ரன்கள் அடித்தால் வெற்றி என இமாலய இலக்குடன் கர்நாடகா பேட்டிங் செய்து வருகிறது.

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் விளையாடினால்தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ கறாராக தெரிவித்ததால் இவருக்கும் பிசிசிஐ-க்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியது.

    இதற்கிடையே 2024 ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் இவர் தலைமையிலான மும்பை அணி சில நாட்களுக்கு முன் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    ஷ்ரேயாஸ் அய்யரை ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த இந்தியர் ஆனார் பஞ்சாப்பின் அன்மோல்பிரீத் சிங்.
    • பரோடா அணிக்காக 40 பந்தில் சதமடித்த யூசுப் பதான் சாதனையை முறியடித்தார்.

    அகமதாபாத்:

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும்.

    இந்நிலையில், அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் சி பிரிவில் இடம்பெற்ற பஞ்சாப், அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி 48.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் அன்மோல்பிரீத் சிங் அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரி மழை பொழிந்தார். இவர் 35 பந்தில் சதமடித்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர் ஆனார்.

    இறுதியில், பஞ்சாப் அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பிரப்சிம்ரன் (35), அன்மோல்பிரீத் (115 ரன்) அவுட்டாகாமல் இருந்தனர்.

    இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் அன்மோல்பிரீத். பரோடா அணிக்காக 40 பந்தில் சதமடித்த யூசுப் பதான் சாதனையை முறியடித்தார்.

    சர்வதேச அளவில் அன்மோல்பீரீத் சிங் மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவின் மெக்குர்க் (29 பந்து), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (31 பந்து) உள்ளனர்.

    ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள அன்மோல்பிரீத் சிங், நடப்பு ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக அணி 383 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • அந்த அணியின் கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்கள் குவித்தார்.

    அகமதாபாத்:

    விஜய் ஹசாரா கோப்பை ஒருநாள் தொடர் (50 ஓவர்) நேற்று தொடங்கியது. ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டி ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கர்நாடகா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சதத்தின் உதவியுடன் 382 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மத்ரே (78 ரன்), ஹர்திக் தாமோர் (84 ரன்), ஷிவம் துபே (63 ரன்) ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.

    இதையடுத்து, 383 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கர்நாடக அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான நிகின் ஜோஸ் 21 ரன்னும், மயங்க் அகர்வால் 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின், கர்நாடக அணி வீரர்கள் அதிரடியில் மிரட்டினர். அனீஷ் 82 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கர்நாடக அணி 46.2 ஒவரில் 3 விக்கெட்டுக்கு 383 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்களுடனும், பிரவீன் துபே 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
    • இதனையடுத்து ஷாருக்கான் - முகமது அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    விஜய் ஹசாரே கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் உத்தர பிரதேசம்- தமிழ்நாடு அணிகள் மோதி வருகிறது.

    இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய தமிழ்நாடு அணி 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து ஷாருக்கான் - முகமது அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரை சதம் கடந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷாருக்கான் சதம் விளாசி அசத்தினார்.

    இறுதியில் தமிழ்நாடு அணி 47 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 132 ரன்களும் முகமது அலி 76 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • விஜய் ஹசாரே தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின.
    • இதில் மும்பை அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சி பிரிவில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற நாகலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 50 ஓவர் முடிவில் 403 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மத்ரே 117 பந்தில் 181 ரன்கள் குவித்தார். நாகலாந்து தரப்பில் டிப் போரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய நாகலாந்து அணி 50 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜெகதீஷா சுசித் 104 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மும்பை அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த போட்டியில் 117 பந்தில் 181 ரன்கள் குவித்த மும்பை அணி வீரர் ஆயுஷ் மத்ரே புதிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி லிஸ்ட் ஏ தொடரில் இளம் வயதில் 150 ரன்கள் மேல் குவித்த வீரரான ஜெய்ஸ்வாலின் உலக சாதனையை ஆயுஷ் மத்ரே முறியடித்துள்ளார்.

    ஜெய்ஸ்வால் 17 ஆண்டு 291 நாட்களில் இந்த சாதனையை படைத்தார். மத்ரே 17 ஆண்டுகள் 168 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். 2019-ம் ஆண்டில் இந்த சாதனையை ஜெய்ஸ்வால் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விதர்பா அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • விதர்பா சார்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 111 ரன்கள் எடுத்தார்.

    விசாகப்பட்டினம்:

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழகம், விதர்பா அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 48.4 ஓவரில் 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. துஷார் ரஹேஷா 75 ரன்கள் எடுத்தார். முகமது அலி 48 ரன்னும், சித்தார்த் 40 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா சார்பில் தர்ஷன் நல்கண்டே 6 விக்கெட்டும், ஹர்ஷ் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. அந்த அணியின் கருண் நாயர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    இறுதியில், விதர்பா அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கருண் நாயர் 111 ரன்னும், ஷுபம் துபே ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    ×