என் மலர்
நீங்கள் தேடியது "water shortage"
சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய நிலவரப்படி பூண்டி 133 மில்லியன் கன அடி, புழல் 37 மி.க.அடி, சோழவரம் 4 மி.க.அடி, செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி உட்பட 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இதில் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில் பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.
இருந்தாலும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன் லிட்டர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது.

வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஷவர்பாத்தில் குளிப்பதை ஆனந்தமாக கருதுகின்றனர். அதில் குளித்தால் தான் குளித்ததற்கான திருப்தியே ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். ஷவர்பாத்தில் குளிப்பதற்கும், பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.
ஷவர்பாத்தை திறந்தால் நம்மை நாமே மறந்து ஆனந்த குளியலில் மூழ்கும்போது 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய பின்னர் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை கழிப்பறைகளை (இந்தியன் டாய்லட்) பயன்படுத்தும்போது 1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும். எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.
சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி சிலர் தங்கள் கார்களை தினசரி கழுவுகின்றனர். இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. சிலர் நூறு லிட்டர்வரை பயன்படுத்துகின்றனர். இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம்.
வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும், வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழவேற்காட்டில் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மெதூர் கிராமத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால் வாரம் இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வருவாய் இன்றி தவித்து வரும் மீனவ குடும்பத்தினர் தற்போது குடிநீருக்காக மட்டும் நாளொன்றுக்கு 100 ரூபாய் வரை செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதிவாசிகள் தடையில்லா குடிநீர் வழங்கக்கோரி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அறிந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பழவேற்காடு மக்களுக்கு குடிநீர் வழங்க அவரது மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து தற்போது பழவேற்காடு பகுதியில் ரஜினி ரசிகர்கள் வாகனங்களில் குடிநீர் கொண்டுவந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர். இதேபோன்று மற்ற பகுதிகளிலும் குடிநீர் வழங்கப்படும் என ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால், மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும், பறவைகளும் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம். 2020-ம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தண்ணீர் பஞ்சத்தை போக்கவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போர்க்கால அடிப்படையில் தண்ணீரை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும், அதை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டன. நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. நம் நாட்டில் மக்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததால், 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
2025-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் தண்ணீர் பற்றாக்குறையை சந்திப்பார்கள் என்று ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நவீன யுத்திகளை மத்திய, மாநில அரசுகள் கையாள வேண்டும். செயற்கை மழைக்காக பல்வேறு நாடுகள் ஏராளமான நிதி செலவு செய்கின்றன. 1980-ம் ஆண்டில் தமிழகத்தில் செயற்கை மழை வரவழைக்க முயற்சி செய்யப்பட்டது“ என்றனர்.

பின்னர் விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #MaduraiHighCourt
கூடலூர்:
வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால் பெரியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடை சமாளிப்பதற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் இந்த நிலை தொடர்ந்தால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பெரியாறு அணை நீர் மட்டம் 113.85 அடியாக குறைந்துள்ளது. மழை முற்றிலும் ஓய்ந்துள்ள நிலையில் 3 கன அடி நீர் மட்டுமே வருகிறது.
அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
இதனால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து நீர் நிலைகளும் வறண்டு போய் உள்ளன. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீர் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழை கை கொடுத்தால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைகை அணை நீர் மட்டம் 44.93 அடியாக உள்ளது. வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 34.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 95.94 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பவில்லை.
நான்கு ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம் தற்போது மொத்தம் வெறும் ஆயிரத்து 162 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இது வெறும் 10 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் மொத்தம் 4 ஆயிரத்து 875 மில்லியன் கனஅடி தண்ணீர் ஏரிகளில் இருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது வெறும் 65 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்தக்கொள்ளளவு 3645 மி.கனஅடி) இதே போல் சோழவரம் ஏரியில் 48 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருக்கிறது.(மொத்த கொள்ளளவு 1081).
எனவே வரும் வாரங்களில் செம்பரம்பாக்கம் ஏரியும், சோழவரம் ஏரியும் முழுவதும் வறண்டு விடும் சூழ்நிலை உருவாகி உள்ளன. பூண்டி ஏரியில் 236 மி.கன அடியும் (3231 மி.கனஅடி).செங்குன்றம் ஏரியில் 813 மி.கனஅடியும்(3300 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
சென்னையில் வழக்கமாக ஒரு குடும்பத்துக்கு 140 லிட்டர் என்ற அளவில் மொத்தம் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் சப்ளை செய்யப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததன் காரணமாக கடந்த மாதம் முதலே நீர் சப்ளை குறைக்கப்பட்டுவிட்டது.
தற்போது 450 முதல் 480 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.
இது தினந்தோறும் ஒருவருக்கு வழங்கப்படும் தண்ணீரில் 60 லிட்டர் குறைப்பு ஆகும். வரும் நாட்களில் தண்ணீர் வினியோகம் மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.
தற்போதைய நிலையில் மீஞ்சூர், நெமிலிச்சேரியில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம், விவசாய கிணறுகள், கல்குவாரி நீரை மட்டுமே சென்னை மக்கள் நம்பி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் சுத்திகரித்த நீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டும் உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டி இருப்பதால் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது அதிகரித்து உள்ளது. #tamilnews
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை ஆகும். ஓராண்டு மழைப்பொழிவில் 48 சதவீதத்தை இந்த பருவமழை காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யும். அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் தமிழகத்தை ஏமாற்றியது. இயல்பான அளவை விட 61 சதவீதம் குறைவாக மழை பெய்தது. கடந்த ஆண்டை (2017) பொறுத்தவரையில், 9 சதவீதம் தான் குறைவாக மழை பெய்து இருந்தது.
இந்த ஆண்டை பொறுத்தவரையில், வட கிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய மழை நவம்பர் 1-ந் தேதி தான் தொடங்கியது. இன்னும் 10 நாட்களில் வடகிழக்கு பருவமழை முடிந்து விடும்.
இதுவரை சராசரி மழைப்பொழிவில் இருந்து 21 சதவீதம் குறைவாக மழை பெய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்னும் பெரிய அளவில் மழையை பெறவில்லை என்பதை வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்கள் (நேற்றைய நிலவரப்படி) சுட்டிக்காட்டுகின்றன.
குறிப்பாக சென்னை, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மழை பெய்து இருக்கிறது. சென்னையை எடுத்துக்கொண்டால், வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 74 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 34 செ.மீ. மழை தான் பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 54 சதவீதம் குறைவு.
இதேபோல், வேலூர், திருச்சி, திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதம் மழை பெய்துள்ளது.
சென்னையின் நீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் வெறும் 1.5 டி.எம்.சி. நீர் மட்டுமே இருக்கிறது. கடந்த ஆண்டில் இதே நேரத்தில் 5 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது. அப்படி இருந்துமே கடந்த ஆண்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது இருக்கும் நீர் இருப்பை பார்க்கும்போது, வரக்கூடிய நாட்களில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. #Rain #Watershortage
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. போர்வெல்களிலும் தண்ணீர் இல்லாததால் விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
கோடை காலத்தில் நிலவும் வறட்சியை போன்று தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே தினசரி காலிகுடங்களுடன் மறியல், மாநகராட்சி முற்றுகை போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
இன்று 13, 14-வது வார்டுகளுக்குட்பட்ட ஒய்.எம்.ஆர். பட்டி, ஜோசப்காலனி பொதுமக்கள் காலி குடங்களுடன் கல்லறை தோட்டம் பகுதியில் அமர்ந்து மறியல் செய்தனர். 3 சாலைகள் சந்திக்கும் பகுதியில் ரோட்டை மறித்து போராட்டம் செய்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த நகர் வடக்கு போலீசார் விரைந்து சென்று மறியல் செய்த பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில் மாநகராட்சி புதியதாக பதித்து உள்ள ஜிக்கா பைப்புகளில் தண்ணீர் வரவில்லை. சோதனை ஓட்டம் என்று கூறி 5 நிமிடம் மட்டுமே தண்ணீர் வருகிறது. எனவே எங்களுக்கு பழைய பைப்புகளிலேயே தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதன்பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் வந்து மறியல் செய்தவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களின் குறைகளை கேட்ட கலெக்டர் அதிகாரிகளை அழைத்து மனுவில் குறிப்பிட்ட தேதிக்குள் குறைகளை தீர்க்க உத்தரவிட்டார். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 267 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகையாக தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.51 ஆயிரத்துக்கான காசோலைகளையும், சமூகநலத்துறையின் சார்பில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகையாக 6 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,85,157-க்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.
ராமேசுவரம் வட்டம், தங்கச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியா என்பவரின் மகன் பூண்டிராஜ் என்ற மீனவர் படகு மோதிய விபத்தில் தனது இடது கை இழந்தமைக்காக அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையினையும், வருவாய்த்துறையின் சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு மாத உதவித்தொகையாக 9 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1,08,000க்கான காசோலைகள் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.3,94,157 மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 5-ந் தேதியன்று திருப்பாலைக்குடிக்கு சென்ற கலெக்டரிடம் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனை பரிசீலித்த கலெக்டர் திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையினை சரிசெய்திடும் வகையில் ரூ.23.05 லட்சம் மதிப்பில் 1300 அடியில் ஆழ்குழாய் அமைப்பதற்கான ஆணையினை வழங்கினார். இந்த பணிக்கு கிராம பொது மக்களும் தாமாகவே முன் வந்து ரூ.7 லட்சத்தினை மக்கள் பங்களிப்பாக செலுத்தினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமாஅமாலினி, மகளிர் திட்ட இயக்குநர் குருநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
ஈரோடு மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட வீரப்பம் பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
வீரப்பம்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஆற்றுநீர், ஆழ் குழாய் நீர் மேல்நிலை தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிநீர் பெற்று வருகின்றனர்.
இது குறித்து வீரப்பம் பாளையம் பகுதி மக்கள் கூறியதாவது.-
எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆற்று நீர் நீரேற்று நிலையத்தில் பழுது ஏற்பட்டதால் இப்பகுதிக்கு முறையாக ஆற்று நீர் கிடைக்கவில்லை.
அதே போல் ஆழ்நிலை குழாய்கள் வறண்டு விட்டதால் முறையாக தண்ணீர் வருவதில்லை. ஒரே ஒரு ஆழ்குழாய் மூலம் தற்போது தண்ணீர் பிடித்து வருகிறோம். அதுவும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பிடிக்க வேண்டி உள்ளது.
மேலும் எங்கள் பகுதிக்கு வரும் கீழ்பவானி வாய்க்காலில் வரும் தண்ணீரும் முறையாக பராமரிப்பு இன்றியும், தூர்வார படாததாலும் குறைந்த அளவே வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.
எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு சீராக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரைக்கும் தற்காலிகமாக லாரிகள் மூலம் மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
இந்தியாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து மத்திய அரசின் நிதி ஆயக் குழு ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இந்தியாவில் ஆண்டுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அறிக்கையின் படி பல முக்கிய நகரங்களில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும். அடுத்த 10 ஆண்டுகளில் குடிநீர் தட்டுப்ப்பாடு இரண்டு மடங்காகும்.
தற்சமயம் 600 மில்லியன் இந்தியர்கள் கடுமையான நீர் பற்றாக்குறையால் தவிக்கின்றனர். சுத்தமான குடிநீர் கிடைக்காமல் ஆண்டிற்கு 2 லட்சம் பேர் பலியாகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபடுகிறது. அம்மாநிலத்தின் நீர் மேலாண்மை, நிலத்தடி நீர் சேமிப்பு, பாசனமுறை மற்றும் குடிநீர் மேலாண்மை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இது கணக்கிடப்படுகிறது.

நீர் தட்டுப்பாடு இந்தியாவில் மட்டும் ஏற்பட வில்லை. உலகின் பல நாடுகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எதிர்காலத்தில் கடும் வறட்சி ஏற்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவறினால் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். #NitiAayog
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் வீராணம் ஏரி, போரூர் ஏரிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர், மீஞ்சூரில் உள்ள கடல் நீர் குடிநீராக்கும் மையத்திலிருந்து பெறப்படும் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.
இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
போதிய அளவில் பருவ மழை பெய்யாததாலும், கோடை வெயில் காரணமாகவும் பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இதன் காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.
கோடை வெயிலின் தாக்கத்தால் பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருகிறது. இன்று காலை 6 மணியளவில் ஏரியில் வெறும் 175 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது.
இந்த ஏரியின் பரப்பளவு 70 சதுர கிலோ மீட்டர். ஏரியை சுற்றி அம்பேத்கார் நகர், புல்லரம்பாக்கம், சதுரங்க பேட்டை, நெய்வேலி, அரியத்தூர், நம்பாக்கம், வெள்ளாத்துகோட்டை, சென்றாம்பாளையம், ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர் உள்பட 45 கிராமங்கள் உள்ளன.
இப்பகுதிகள் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளாகும். பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருவதால் மேற்கூறப்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 30 வருடங்களுக்கு முன் இந்த கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இக்கிணறுகளில் உள்ள மின் மோட்டார்கள், இரும்பு பைப்புகள் சேதமடைந்து ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் நீர் இறைக்கும் போது கசிவதால் ஆழ்துளை கிணறுகளிலிருந்து மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் சரிவர வினியோகம் ஆவதில்லை என்று கிராம பொது மக்கள் தெரிவித்தனர்.
பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருவதால் கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகம் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீர் செய்ய நிதி ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.