என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West"

    • சில நாடுகளுக்கு இந்தியா தன் கதவுகளை திறந்து வைத்துள்ளது
    • ஒரு நாடு வளர்ச்சி அடைவதற்கு அதன் அண்டை நாடுகள்தான் முக்கியம்

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஹினா ரப்பானி கர்.

    இவர் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 'பாகிஸ்தான் ஆட்சி மன்றம் 2023' எனும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

    அப்போது இந்தியாவுடனான உறவுகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து ஹினா கூறியதாவது:-

    இந்தியா மேற்கத்திய நாடுகளின் டார்லிங். ஒரு சில நாடுகளுக்கு மட்டும் இந்தியா தங்கள் கதவுகளை முழுவதும் திறந்து வைத்துள்ளது. ஆனால் அதனை சுற்றியுள்ள அண்டை நாடுகள் சிலவற்றுக்கும், அங்கேயே வாழும் ஒரு சிலருக்கும் இறுக்கமான மன நிலையை காட்டி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஏசியன் போன்ற பன்னாட்டு கூட்டமைப்புகளை காணும்போது, ஒரு நாடு வளர்ச்சி அடைவதற்கு அதன் அண்டை நாடுகள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது தெளிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல்வேறு காரணங்களால் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியாவிற்கு உள்ள உறவுகளில் தற்போது ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவிற்கு நட்பு வளர்ந்து வருகிறது.

    இந்த ஈடுபாட்டை மறைமுகமாக கேலி செய்யும் விதமாக ஹினாவின் கருத்துக்கள் அமைந்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது.

    ரஷியா உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும் நிலையில் இந்த போரில் ஏராளமான உயிரிழப்புகளும் உக்ரைன் பகுதிகளில் பலத்த சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகளின் உதவியுடன் இந்த போரில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது. ரஷியாவுக்கு வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

     

    உக்ரைனை கைப்பற்றுவது தங்களின் நோக்கம் இல்லை என்று கூறும் புதின் மேற்கு நாடுகளால் உக்ரைன் வழியாக தங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள ஸ்டெபோவா நோவோசெலிவ்கா [Stepova Novoselivka] iமற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நோவோபோக்ரோவ்ஸ்கே [Novopokrovske] ஆகிய இரண்டு கிராமங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

     

    ஆனால் உக்ரைன் ராணுவம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேற்கூறப்பட்ட பகுதிகளில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது.
    • மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இன்று மதியம் ரஷியா செல்ல உள்ளார். இன்று மற்றும் நாளை [ஜூலை 8-ஜூலை 9] ரஷியாவில் தங்க உள்ள மோடி அதிபர் புதினிடம் இருநாட்டு பொருளாதார, வணிக மற்றும் ராஜ்ய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலும் வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது. அதன்பின் 2022 , 2023 ஆகிய ஆண்டுகளில் மாநாடு நடைபெறாத நிலையில் தற்போது இந்த வருடத்திற்கான மாநாடு நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக மோடி ரஷியா செல்ல உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக கடைசியாக ரஷியா சென்றிருந்தார் மோடி.




     

    மோடியின் வருகை குறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஷ்கோவ் பேசுகையில், 'மோடி - புதினின் சந்திப்பு விரிவானதாக இருக்கும். மோடியின் வருகையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகிறோம். இரு தலைவர்களும் ராஜ்ய உறவுகள் என்பதையும் தாண்டி இயல்பாக பல விஷயங்களை பேசுவர் என்று எதிர்பார்கிறோம்.மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது. இதனாலேயே இந்த சந்திப்பு மமுக்கியத்துவம் பெருகிறது' என்று தெரிவித்துள்ளார்.  உக்ரைன் போரினால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதர தடைகளை விதித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

    • சில மாதங்களுக்கு முன்பு ஹசீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.
    • 'மறு தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக ஒரு வெள்ளை இன நபர் சொன்னார்'

    வங்காள தேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாகப் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்காளதேச சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடத்தப் போராட்டம் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற குரலாக மாறியது.

     

    14 ஆண்டுகால ஆட்சியை இரண்டே மாதங்களில் தூக்கியெறிய வைத்தது எது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.போராட்டங்களில் பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான ஜமாத்- இ- இஸ்லாமியின் பங்கு கவனிக்கத்தக்கது. மேலும் ஹசீனாவுடனான இந்தியாவின் நெருக்கம், சீனா உள்ளிட்ட நாடுகளை உறுத்துதலாக இருந்து வருவதையும் பொருத்திப் பார்க்க வேண்டி உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஹசீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.

    மே 2024 இல் அவர் அளித்த அந்த பேட்டியில், வங்காள தேசத்தில் தங்களது நாட்டின் விமான படைத்தளத்தை அமைக்க அனுமதி அளித்தால் தன்னை மீண்டும் மறு தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக ஒரு வெள்ளை இன நபர் சொன்னார்' என்று ஹசீனா தெரிவித்திருந்தார். ஆனால் எந்த புதிய விமான தளமும் வங்காள தேசத்தில் அமைக்கப்படவில்லை. தற்போது ஹசீனா ஆட்சியை இழந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

     

    ஹசீனா வெள்ளை இன நபர் என்று குறிப்பிட்டது, மேற்கு நாடுகளை குறிக்கிறது என்றும் எனவே இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் மேற்கு நாடு ஒன்றின் சதி இருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. கடந்த 2009 முதல் ஆட்சியில் உள்ள ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடந்த தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.  

    • நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.
    • இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.

    தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தால் நடத்தப்படும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து சீனியர் (ஆண்கள்) சேம்பியன்ஷிப் போட்டிகள் ஈரோடு, கோவை, தர்மபுரி, கரூர், நீலகிரி, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர் .

    ஈரோடு மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பரிந்துரைப்படி குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி–க்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் டாக்டர் அரவிந்தன், பள்ளியின் முதல்வர் மஞ்சுளா, துணைமுதல்வர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் செய்து வருகின்றனர்.

    இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.

    ×