என் மலர்
நீங்கள் தேடியது "winter"
- குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி.
- சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் சாலையோரம் தங்கியுள்ள ஏைழ, எளிய மக்களுக்கு குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 10-ம் ஆண்டாக இந்த ஆண்டும் தஞ்சை பெரிய கோவில், புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் சாலையோர மக்களுக்கு குளிர்கால கம்பளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் இணை மேலாண்மை இயக்குனர் காமினி குருசங்கர் மற்றும் பணியாளர்கள் வழங்கினர்.
இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.
- குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும்.
- குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான்.
பொதுவாக குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும். குறிப்பாக குளிர்காலத்தில் வரக்கூடிய தொண்டை வலி, சளிப்பிடித்தல், காய்ச்சல், நிமோனியா, காது வலி, ஆஸ்துமா மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவா்.
மழை, பனிபொழிவு ஆகியவற்றால் குளிர்காலம் ஒரு மாயாஜால பருவமாக தென்படலாம். ஆனால் இது பல்வேறு விதமான நோய்கள் தலைதூக்கி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலமாகும்.
குளிர்கால தொற்றுகள்
குளிர்காலத்தில் சமூக பரவல் காரணமாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வாமை, மோசமான காற்றின் தரத்தால் மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர். குளிர்காலத்தில் வேறு சில நோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி, தொண்டை வலி, சோர்வு, வலுக்குறைவு, தசைவலி, இருமல் ஆகியவை குளிகாலத்தில் ஏற்படும் நோய்கள் ஆகும்.
ஜலதோஷம்
குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான். குளிர்காலத்தில் ஒரு முறையாவது அனைவருக்கும் ஜலதோஷம் வந்துவிடும். இதனை பருவமாற்றத்தின் அறிகுறியாக கருதினாலும், ஜலதோஷம் இறுதியாக நிமோனியா மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சுவாசக்குழாய் தொற்று
குளிர்காலத்தில் வறண்ட காற்றின் காரணமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்ற சுவாசக்குழாய் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். மிகக் குளிர்ந்த வெப்பநிலையால் வெளிப்படும் நிமோனியாவால் லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நிமோனியாவிற்கு சிகிச்சை அளிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்ததாகும். குளிர்காலத்தில் மூச்சுக்குழாய் அழற்சியானது , குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிக அபாயமானதாகும். சின்சிடியல் வைரசால் தூண்டப்படும் சுவாசத் தொற்றே மூச்சுக்குழாய் அழற்சி என்றழைக்கப்படுகிறது.
நோரோ வைரஸ்
இந்த வைரஸ் இரைப்பை குடல் அழற்சிக்கு வழிவகுக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை நோரோவைரசின் அறிகுறிகள் என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக கழுவவும். சுகாதாரமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.
- குளிர்காலத்தில் எளிதாகவும், விரைவாகவும் வறட்சி அடையும்.
- உதடு வறண்டு தோல் உரிதல் ஏற்படும்.
உதடுகளில் உள்ள தோல், உடலின் மற்ற பாகங்களில் உள்ள தோலை விட மிகவும் மென்மையானது. மேலும், உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் கிடையாது. இதன் காரணமாக உதடுகள் எளிதாகவும், விரைவாகவும் வறட்சி அடையும். எனவே உதடுகளை கவனமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
உதடுகள் வறண்டு போகும்போது நாக்கினால் அவற்றை அடிக்கடி ஈரப்படுத்துவது, உதடுகளில் தோல் உரிவதற்கு முக்கியமான காரணமாகும். இதுமட்டுமில்லாமல் வைட்டமின் 'டி' குறைபாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது, உதடுகளில் அதிகப்படியான சூரிய ஒளி மற்றும் குளிர்ந்த காற்று படுவது, ரசாயனம் கலந்த உதடு பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது, வாய் வழியாக மூச்சு விடுவது, காலநிலை மாற்றம், உடலின் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற காரணங்களாலும் உதடு வறண்டு தோல் உரிதல் ஏற்படும்.
உதடுகளில் தோல் உரிவதைத் தடுக்க, அடிக்கடி அவற்றை நாக்கால் ஈரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ரசாயனம் கலக்காத, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உதடு பராமரிப்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உதடுகளில் படியும் இறந்த செல்களை அவ்வப் போது நீக்கினால் உதடுகள் மென்மையாகவும், இயற்கையான நிறத்தோடும் இருக்கும்.
சிறிதளவு சர்க்கரையுடன் தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உதடுகளில் பூசவும். பின்பு விரல்களைக் கொண்டு வட்ட இயக்கத்தில் உதடுகளில் மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு அதை சுத்தம் செய்துஉதடுகளில் தேங்காய் எண்ணெய் பூசவும். வாரத்தில் ஒருமுறை இவ்வாறு செய்வதால் உதடுகள் மென்மையாக இருக்கும்.
உதடுகளுக்கு வாசனையில்லாத, ஒவ்வாமை ஏற்படுத்தாத லிப் பாம் உபயோகிப்பது சிறந்தது.
கிளிசரின் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்த லிப் பாம்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். வாசனை திரவியங்கள் மற்றும் சுவையூட்டும் மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட லிப் பாம்களை தவிர்ப்பது நல்லது. மென்தால், யூகலிப்டஸ், மெழுகு சேர்த்த லிப் பாம்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

ரசாயனங்கள் கலந்த லிப் பாம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், பெட்ரோலியம் ஜெல் ஆகியவற்றை உதடுகளில் பூசி வரலாம்.
உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்க, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளநீர், மோர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். லிப் பாம்,
உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்தும். நீண்ட நேரம் உதடுகளை நீரேற்றமாகவும் வைத்திருக்கும். வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரங்களில், இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை லிப் பாம் பூசுவது நல்லது.
- குளிர்காலம் என்பது புலிகளின் இனச்சேர்க்கை காலமாகும்.
- சில ஆண் புலிகள் பெண் புலிகளை தேடி நீண்ட பயணத்தை மேற்கொள்ளும்.
திருப்பதி:
மகாராஷ்டிரா மாநிலம் கின்வாட் வனபகுதியில் ஜானி என்ற 7 வயது ஆண் புலி சுற்றி திரிகிறது. இதை வனத்துறையினர் அடிக்கடி கண்காணித்து வருகின்றனர். கடந்த 30 நாட்களுக்கு முன்பு ஜானி புலி தனது துணைக்காக பெண் புலியை தேட ஆரம்பித்தது.
அந்த புலி நேற்று வரை 300 கிலோ மீட்டர் பயணம் செய்து தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் வனப்பகுதிக்கு வந்தது. ஆனாலும் இதுவரை ஜானி புலிக்கு துணையாக பெண் புலி கிடைக்கவில்லை. தனியாக தவித்தபடி தொடர்ந்து அதன் பயணத்தை நீடித்து வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
குளிர்காலம் என்பது புலிகளின் இனச்சேர்க்கை காலமாகும். சில ஆண் புலிகள் பெண் புலிகளை தேடி நீண்ட பயணத்தை மேற்கொள்ளும். கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு முன்பே பெண் புலிகள் சிறப்பு வாசனையை வெளியிடும். ஆண் புலிகள் வாசனை மூலம் பெண் புலியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து ஒன்று சேரும்.
ஜானி புலி கடந்த 30 நாட்களாக அடர்ந்த வனப்பகுதியில் அதன் ஜோடியை தேடி அலைகிறது. அதற்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை. இந்த பயணத்தின் போது 4 மாடுகளை அடித்து கொன்று சாப்பிட்டது. 3 மாடுகளை வேட்டையாட முயற்சி செய்துள்ளது.
காடுகளை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளிலும் நடமாட்டம் உள்ளது. சில இடங்களில் ஜானி புலி சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர்.
இதனால் மக்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. துணையை தேடும் புலிகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனாலும் பொதுமக்கள் புலியை கண்டால் தொந்தரவு செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
- நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும்.

தேங்காய் எண்ணெய்
குளிர்ந்த காலநிலையின் போது சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கையான மென்மையாக்கலாக அமைகிறது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.
மேலும், இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. குளிர்ந்த காலநிலையில் உணர்திறன் வாய்ந்த சருமம் உட்பட அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றதாக தேங்காய் எண்ணெய் அமைகிறது.

அடிக்கடி ஈரப்பதமாக்குவது
குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும். இதற்கு குளித்த உடனேயே நறுமணம் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஈரப்பதத்தை அடைக்கலாம். இவை சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதன்படி, ஹைலூரோனிக் அமிலம், செராமைடுகள் அல்லது கிளிசரின் போன்ற உட்பொருட்களைக் கொண்ட மறைவான மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவது, சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.
ஈரப்பதமூட்டிகளைப் பயன்படுத்துவது
வீட்டிற்குள் காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்க, ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம். மேலும், இது சரும வறட்சியைத் தடுக்க உதவுகிறது. எனவே, படுக்கையறை அல்லது வசிக்கும் இடத்தில் ஈரப்பதமூட்டியை இணைப்பது, உட்புற வெப்பத்தை பயன்படுத்தினாலும், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.

ஓட்ஸ் குளியல்
ஓட்ஸ் குளியல் இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டதாகும். இது சரும எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. மேலும், ஓட்மீல் குளியல் சருமத்தில் அரிப்புகளை நீக்குவது மட்டுமல்லாமல், ஈரப்பத இழப்பைத் தடுக்க ஒரு பாதுகாப்பு தடையை வழங்குகிறது.
ஆய்வு ஒன்றில், ஓட்மீல் சாறுகள் அழற்சி எதிர்ப்பு செயல்பாடுகள் மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இது லேசான, மிதமான அரிப்பு மற்றும் வறண்ட சருமம் உள்ள பெண்களுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் உள்ள சருமத்தை ஆற்றும் பண்புகள் வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தவும், அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. ஆய்வில், கற்றாழை ஜெல்லில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது வீக்கமடைந்த அரிக்கும் தோலழற்சியை அமைதிப்படுத்துகிறது. இது அரிப்பிலிருந்து நிவாரணம் தருகிறது.

நீரேற்றமாக இருப்பது
குளிர்காலத்தில் சரும அரிப்புக்கான மேற்பூச்சு சிகிச்சைகள் போலவே உள்ளிருந்தும் நீரேற்றமாக இருப்பது அவசியமாகும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். மேலும், இது சருமத்தின் ஒட்டுமொத்த நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது வறட்சி மற்றும் அரிப்புகளை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
- மது ஒரு வெப்பமயமாதல் விளைவை கொண்டிருக்கிறது.
- குளிர்காலத்தில் மது அருந்துவது உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம்.
மார்கழி மாதம் என்பதால் குளிர் வாட்டி வதைக்கிறது. மது பிரியர்கள் தினமும் இரவு நேரங்களில் ஒரு கையில் ரம் அல்லது விஸ்கி மற்றும் சிக்கன் வகைகளை ருசிக்கின்றனர்.
ஒரு பெக் ரம் உடலை சூடேற்றி குளிர்ச்சியை தடுக்கிறது என்பது குடிமகன்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. மதுவால் உண்மையில் உடலை வெப்பமாக்க முடியுமா? குடிப்பதற்கு காரணம் தேடி இது போன்ற கட்டுக்கதைகளை கூறப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த குளிர்கால கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பதில் கூறியுள்ளனர்.

மது ஒரு வெப்பமயமாதல் விளைவை கொண்டிருக்கிறது. ஆனால் உடலில் முற்றிலும் மதுவால் சூடேற்ற முடியாது. மது குடிப்பதால் உங்கள் தோலுக்கு அருகில் உள்ள ரத்த நாளங்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் அதிக ரத்தம் பாய்கிறது.
மற்றும் தோலில் சூடான உணர்வை உருவாக்குகிறது. இந்த சூடான உணர்வு என்பது உடலை வெப்பப்படுத்தியது என்பதற்கான அர்த்தம் அல்ல. முக்கிய உறுப்புகளில் இருந்து ரத்தம் திசை திருப்பப்படுவதால் உடலில் மைய வெப்பநிலை குறையலாம்.
இதனை சரிபார்க்கா விட்டால் தாழ்வான வெப்ப நிலைக்கு சென்று விடும். கடுமையான குளிர்காலங்களில் இது ஆபத்து. மது குளிர்ந்த காற்றின் வெப்பநிலையை பற்றிய உணர்வை உடலில் குறைக்கிறது.

குளிர்காலத்தில் மது அருந்துவது உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம். மதுபானம் உங்கள் முடிவெடுக்கும் திறனை குறைப்பதாக ஏற்கனவே அறியப்பட்டிருக்கிறது.
மது குடித்துவிட்டு குளிர்கால ஆடைகளை அணியா விட்டால் உடல் வெப்ப நிலையில் வியத்தகு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
- தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
சர்க்கரை நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு தோல் சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தோல் வறட்சி குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
பெரும்பாலும் பெரிபெரல் வாஸ்குலர் நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த நாளங்களில் உண்டாகும் மாற்றங்கள், குருதியோட்டத்தை குறைத்து, வறட்சியை உண்டாக்கி, சரும கொலோஜெனை சேதமடைய செய்து தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கிறது.

மேலும் ஆட்டோனாமிக் (தன்னியக்க) நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை சுரப்பது தடைப்பட்டு தோல் வறட்சியை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு வறண்ட சருமம் ஏற்பட முக்கிய காரணங்கள்:
கட்டுப்பாடற்ற அதிக ரத்த சர்க்கரை அளவு, குளிர்காலங்களில் காணப்படும் குளிர்ந்த வறண்ட காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம், புகை, மதுப்பழக்கம், மன அழுத்தம், ஹைப்போ தைராய்டிசம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை. சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்:
சருமத்தை தினமும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். செராமைடுகளைக் கொண்ட வாசனை இல்லாத கிரீம் அல்லது களிம்பை பயன்படுத்த வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

குளிக்கும்போது ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தவும். டியோடரண்ட் சோப்புகள் மற்றும் வலுவான பாடி வாஷ்களை தவிர்ப்பது நல்லது. குளித்த பின்னர் தோல் ஈரமாக இருக்கும் போதே மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால் அது நன்றாக உறிஞ்சப்பட்டு சருமம் நீரேற்றமாக இருக்க உதவுகிறது.
முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கழுவினால் போதும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, முலாம்பழம் போன்ற நீர்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்வது நல்லது.
- குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15-ஐ எட்டியுள்ளது
- பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் எச்சரித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் சமீபத்திய நாட்களில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. கடலோரப் பகுதிகளில் குளிர்ந்த, ஈரமான சூழல் நிலவுகிறது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறது.
காசா பகுதியில் குளிர் அலை காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. காசாவின் சுகாதார அதிகார சபையின் இயக்குநர் ஜெனரல் முனீர் அல்-பர்ஷ் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேசுகையில், கடுமையான குளிரால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15-ஐ எட்டியுள்ளது என்று கூறினார். மருத்துவ வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம், சுகாதார சேவைகளைப் பாதித்துள்ளாதால், சுகாதார நெருக்கடி மோசமடையக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

மருத்துவமனைகள் [குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனைகள்] மருந்து, உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்வெட்டு காரணமாக தேவையான சிகிச்சையை வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
காசா நகரத்தில் உள்ள 'நோயாளிகளின் நண்பர்கள்' என்ற தொண்டு மருத்துவமனையின் இயக்குனர் சையத் சலா பேசுகையில், கடந்த சில மணிநேரங்களில் கடுமையான குளிர் மற்றும் தங்குமிடங்களில் வெப்பமின்மை காரணமாக மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறினார்.
காசாவில் சமீபத்திய நாட்களில் பலத்த காற்று, கனமழை மற்றும் மிகவும் குளிரான வானிலை நிலவுகிறது. மோசமான வானிலை நூற்றுக்கணக்கான கூடாரங்களை அழித்துள்ளது. பல அகதி முகாம்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கஷ்டங்களை அதிகரித்துள்ளது.


காசாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் ஆபத்துகள் குறித்து பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண பணி நிறுவனம் எச்சரித்துள்ளது.
மோசமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக 7,700 குழந்தைகள் அத்தியாவசிய மருத்துவ உதவியை பெற முடியவில்லை அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பின்னர், அதை லேசாகச் சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காட்டன் துணியால் அதிகப்படியாக இருக்கக்கூடிய எண்ணெய் பசையைத் துடைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு இரு முறை செய்தால் உதடுகள் வெடிக்காமல் இருக்கும்.

கிரீன் டீ தற்போது பெரும்பாலானோர்களின் வீட்டிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த கிரீன் டீ பேக்கை எடுத்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மெதுவாக அந்த டீ பேக்கால் உதட்டை தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிஷங்கள் வரை தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், உலர்ந்த காட்டன் துணியால் உதடுகளைத் துடைக்கும்போது இயல்பான பிங்க் கலரில் உதடுகள் மாறிவிடும்.
பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.
கடைகளில் பாதாம் எண்ணெய் கிடைக்கும். அதில் ஸ்வீட் பாதாம் எண்ணெய்யை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை ஒரு துளி அல்லது இரண்டு துளி இட்டு இரவு தூங்குவதற்கு முன்னர் உதடுகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். காலையில் பார்க்கும் பொழுது உதடுகள் ரொம்ப அழகாக இருக்கும்.
மிதமான சூட்டில் குளிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலைக்கும் மிதமான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டும். ரொம்ப சூடான நீரில் குளிக்க வேண்டாம். அது உங்கள் தலைமுடியை பாதித்து பலவீனமாக்கிவிடும், மற்றும் தோலையும் பாதிக்கும்.
* ரசாயன கலப்பு அதிகமில்லாத ஊட்டச்சத்து மிகுந்த ஷாம்புவையும் கண்டிஷனரையும் பயன்படுத்த வேண்டும்.
* இறுக்கமாக பின்னல் போடுவதோ அல்லது இறுக்கிக் கட்டுவதோ வேண்டாம். முடியை தளர்வாக பின்னலிடலாம்.
* மழையில் நனைந்துவிட்டால் அப்படியே தலையை காயப்போடாமல் தலைக்குக் குளித்துப் பின் முடியை நன்கு துவட்டி விடுவது நல்லது.

* மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் மண்டையோட்டை எண்ணெய் பசை உடையதாகவும், முடியை சிக்காக்கும் தன்மையும் கொண்டது. எனவே ஈரப்பதமற்ற தலை முடி இருப்பவர்கள், அரிப்பு மற்றும் பொடுகு பிரச்னை இருப்பவர்கள், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் வேப்பெண்ணெய் (வேப்பெண்ணெய் ஒரு ஆன்டிபாக்டீரியல்) கலந்து தலைமுடிக்குத் தேய்த்து வரவேண்டும்.
* மழை நேரத்தில் முடி உடையாமல் இருக்க, பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.
* இந்த சீசனில் தலை முடி மிகவும் எளிதில் உடைய அல்லது உதிரக்கூடிய நிலையில் மிகவும் பலவீனமாக இருக்கும். எனவே தலைமுடியை காய வைக்க மிக அதிகமான சூட்டைப் பயன்படுத்தாதீர்கள். மிதமான சூட்டில் வைத்து ஹேர் ட்ரையரை பயன்படுத்தவும். அல்லது முடி பாதி உலர்ந்ததும் ட்ரையரை நிறுத்திவிடவும்.
* மழை சீசனை பொறுத்த மட்டில் முடி பலவீனமாவது மட்டுமில்லாமல் சிக்காகிவிடும். எனவே தலைக்குக் குளிக்கும் முன் தலையில் எண்ணெய் வைத்து ஊற வைக்க வேண்டும். உங்கள் முடிக்கு ஊட்டச்சத்தளிக்க பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி உச்சந்தலை மற்றும் தலைமுடியின் முழு நீளத்துக்கும் அதாவது முழுமையாக தடவி 45 நிமிடங்களுக்கு ஊற வைத்துப் பின் தலைக்குக் குளிக்க வேண்டும். பொடுகை தவிர்க்க சிறிதளவு வேப்பெண்ணெயும் கலந்து கொள்ளலாம். தலையின் ஈரப்பதத்தை தவிர்க்க சலூனுக்குச் சென்று ஹேர் ஸ்பா அல்லது ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். இது மண்டையோடு மற்றும் முடியின் ஆரோக்யத்திற்கு உதவும்.
* நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொள்வதால் சருமம் மற்றும் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
* வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிக்கும் நீரில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சருமத்திற்கான ஈரப்பதம் கிடைக்கும்.

குளிப்பதற்கும், முகம் கழுகுவதற்கும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும். அதிக சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். உடலில் எண்ணெய் சிறிதளவு தேய்த்துவிட்டு குளிக்க செல்லலாம். அது சருமத்தில் ஈரப்பதத்தை சீராக பராமரிக்க வழிவகை செய்யும்.
குளித்து முடித்த பிறகு சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தலாம். சர்க்கரை, மது, காபி போன்றவை உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைத்துவிடும். குளிர்காலத்தில் அவைகளை அளவோடு பருகுவது நல்லது. போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். அவை சருமம் மென்மையாக ஜொலிப்பதற்கும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரியும்.
சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். அது, வேதிப்பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மை பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகவும் அமையும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
குளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதும் அவசியமானது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதுடன் முதுமையையும் தள்ளிப்போடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது நல்லது. யோகா செய்து வருவதும் சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதிக அளவு ஆக்சிஜன் உடலுக்குள் செல்வதற்கும் வழிவகை செய்யும்.