என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Premier League"

    • 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற குறி வைத்துள்ளது.
    • மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது.

    லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 10 புள்ளி பெற்றாலும் ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 4-வது இடமும், உ.பி.வாரியர்ஸ் கடைசி இடமும் பெற்று நடையை கட்டின. நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 47 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

    2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற குறி வைத்துள்ளது. அந்த அணியில் நட்சத்திர பட்டாளத்துக்கு குறைவில்லை. ரன் குவிப்பில் முதலிடம் வகிக்கும் நாட் சிவெர் (493 ரன்கள், 9 விக்கெட்), அதிக விக்கெட் வீழ்த்தியதில் முதலிடத்தில் இருக்கும் ஹெய்லி மேத்யூஸ் (17 விக்கெட், 304 ரன்) ஆகியோர் ஆல்-ரவுண்டராக அசத்தி மும்பை அணிக்கு வலுசேர்க்கிறார்கள். பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் அமெலியா கெர் (16 விக்கெட்), ஷப்னிம் இஸ்மாயிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'ஒரே மைதானத்தில் ஒரே ஆடுகளத்தில் தான் இறுதிப்போட்டியையும் விளையாடப் போகிறோம். கடந்த 4 நாட்களில் இங்கு 3 ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். இதனால் நிறைய விஷயங்களை புரிந்து கொண்டுள்ளோம். குறிப்பாக இங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மையை நன்கு அறிந்துள்ளோம். இதை எங்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கிறேன்' என்றார்.

    மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. கடந்த 2 தடவையும் தோல்வியை சந்தித்த டெல்லி அணி 3-வது முயற்சியிலாவது கோப்பை ஏக்கத்தை தணிக்குமா? என்ற ஆவல் எழுந்துள்ளது.

    டெல்லி அணி பந்து வீச்சையே அதிகம் நம்பி இருக்கிறது. பேட்டிங்கில் ஷபாலி வர்மா (300 ரன்), மெக் லானிங்கும் (263 ரன்), பந்து வீச்சில் ஷிகா பாண்டே, அனபெல் சுதர்லாண்ட், மின்னு மணியும் நல்ல நிலையில் உள்ளனர். ஜோனஸ்சென் (137 ரன், 11 விக்கெட்) ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஜானே காப் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்காதது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அவர்களும் பார்முக்கு திரும்பினால், டெல்லி இன்னும் வலிமை அடையும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அதில் மும்பை 3 ஆட்டங்களிலும், டெல்லி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. நடப்பு தொடரில் 2 ஆட்டங்களிலும் டெல்லி அணி வெற்றியை ருசித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் உள்ளூர் சூழல் மும்பை அணிக்கு அனுகூலமாக இருக்கும். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் வீரர்களும் நேரில் வந்து உற்சாகப்படுத்துவதால் வீராங்கனைகள் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுகட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

    இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ், நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), சஜனா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், கமலினி, சன்ஸ்கீர்த்தி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெஸ் ஜோனஸ்சென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சுதர்லாண்ட், சாரா பிரைசி, நிக்கி பிரசாத், ஷிகா பாண்டே, மின்னு மணி, திதாஸ் சாது.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
    • 2023-ம் ஆண்டு மும்பையிடமும், கடந்த ஆண்டு பெங்களூரு அணியிடமும் தோற்று கோப்பையை இழந்தது.

    மும்பை:

    3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டித் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் கடந்த 11-ந்தேதியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்தன.

    இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 3-வது இடத்தை பிடித்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெளியேற்றுதல் சுற்று போட்டிக்குள் நுழைந்தன. கடைசி 2 இடங்களை பிடித்த பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று போட்டியில் குஜராத்தை 47 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இப்போட்டி மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டில் கோப்பையை வென்றது. 2-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. மும்பை அணியில் ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    மேலும் நாட்சிவெர், கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர், அமெலியா கெர், இஸ்மாயில், யாஸ்திகா பாட்டியா போன்ற வீராங்கனைகள் உள்ளனர். அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது.

    டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டு மும்பையிடமும், கடந்த ஆண்டு பெங்களூரு அணியிடமும் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த 2 முறையும் கோப்பையை வெல்ல முடியாத சோகத்தை சந்தித்த டெல்லி இந்த முறை பட்டத்தை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

    மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணியில் ஷபாலி வர்மா, ஜோனா சென், சதர்லெண்ட், ரோட்ரிக்ஸ், மாரிசேன் காப், ஷிகா பாண்டே ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

    இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெர்ரி 49 ரன்கள் குவித்தார்.
    • பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி மும்பையில உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 20-வது மற்றும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.

    இதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிசுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழலில் 'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 65 ரன்கள் திரட்டினர். எலிஸ் பெர்ரி 49 ரன்களுடன் (38 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

    அடுத்து களம் இறங்கிய மும்பை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் 49 ரன்கள் குவித்ததன் மூலம் ஆர்சிபி அணி வீராங்கனை புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் பெங்களூரு வீராங்கனை எலிஸ் பெர்ரி முதலிடத்தை பிடித்தார். அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 972 ஆக (25 ஆட்டம்) உயர்ந்தது. டெல்லி கேப்டன் மெக்லானிங் 939 ரன்களுடன் (26 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    • இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நூஷின் அல் கதீர் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்.
    • பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது.

    மும்பை:

    ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இமும்பை, ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது.

    இதே போல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கி உள்ளது.

    இந்நிலையில் அந்த அணி தங்களது அணியின் பயிற்சியாளர் குழுவை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸை நியமித்துள்ளது.

    இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நூஷின் அல் கதீர் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், ஆல்ரவுண்டர்கள் துஷார் அரோத்தே மற்றும் கவன் ட்வினிங் ஆகியோர் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் குஜராத் அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் நடக்கிறது
    • மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ஷபாலி, தீப்தி ஷர்மா ஆகியோர் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை:

    பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் முதலாவது பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதையொட்டி ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டு விற்கப்பட்டு உள்ளன. 5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டவர் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளனர்.

    இதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் நடக்கிறது. ஏலப்பட்டியலில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். முதலில் 409 பேர் இருந்தனர். நேற்று கூடுதலாக 39 வீராங்கனைகள் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 269 பேர் இந்தியர். 179 வீராங்கனைகள் வெளிநாட்டவர். இவர்களில் 202 வீராங்கனைகள் சர்வதேச அனுபவம் பெற்றவர்கள். இந்தியாவின் லத்திகா குமாரி (வயது 41) அதிக வயது வீராங்கனையாகவும், ஷப்னம் எம்.டி., சோனம் யாதவ், வினி சுசான் (தலா வயது 15) ஆகியோர் குறைந்த வயது வீராங்கனைகளாகவும் அறியப்படுகிறார்கள்.

    இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், சினே ராணா, ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னெர், எலிஸ் பெர்ரி, மெக் லானிங், அலிசா ஹீலே, இங்கிலாந்தின் சோபி எக்லெக்ஸ்டன், நாட் சிவெர், நியூசிலாந்தின் சோபி டேவின், வெஸ்ட் இண்டீசின் டியாந்திரா டோட்டின் உள்பட 24 வீராங்கனைகளின் அடிப்படை விலை அதிகபட்சமாக ரூ.50 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதாவது ரூ.50 லட்சத்தில் இருந்து இவர்களது ஏலத்தொகை ஆரம்பிக்கும்.

    தென்ஆப்பிரிக்காவின் மரிஜானே காப், ஷப்னிம் இஸ்மாயில், மிக்னோன் டு பிரீஸ், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, தாலியா மெக்ராத், இங்கிலாந்தின் ஹீதர் நைட், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலியா கெர், இந்தியாவின் ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, ராதா யாதவ் உள்ளிட்டோரின் தொடக்க விலை ரூ.40 லட்சமாகும்.

    இதில் மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ஷபாலி, தீப்தி ஷர்மா ஆகியோர் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எக்லெக்ஸ்டன், ஹீதர் நைட், எலிஸ் பெர்ரி, அலிசா ஹீலே உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளின் மதிப்பும் கணிசமாக எகிற வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.12 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் வீராங்கனைகள் ஏலம் நிகழ்ச்சியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹர்மன்ப்ரீத் கவுரை ரூ.1.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்துள்ளது.
    • ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ கார்ட்னரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் அணி வாங்கி உள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் போன்று பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதற்காக அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் மூலம் எடுக்கப்படுகின்றனர். மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் ஏலம் தொடங்கியது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.12 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டவர் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள். ஏலப்பட்டியலில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 269 பேர் இந்தியர். 179 வீராங்கனைகள் வெளிநாட்டவர்.

    இதில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்பட்ட முன்னணி வீராங்கனைகள் விவரம்:

    1. ஸ்மிருதி மந்தனா - ரூ.3.4 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

    2. ஹர்மன்பிரீத் கவுர் - ரூ.1.8 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    3. சோபி டிவைன் ரூ.50 லட்சம் - (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

    4. ஹெய்லி மேத்யூஸ் - விற்கப்படாதது - 40 லட்சம் அடிப்படை விலை

    5. ஆஷ்லீ கார்ட்னர் - ரூ.3.2 கோடி (குஜராத் ஜெயண்ட்ஸ்)

    6. சோபி எக்லெஸ்டோன் - ரூ.1.2 கோடி (உ.பி. வாரியர்ஸ்)

    7. எல்லிஸ் பெர்ரி - ரூ.1.7 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

    • மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் வீராங்கனைகள் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை:

    ஐபிஎல் போன்று பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசன் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்காக விளையாடும் வீராங்கனைகள் ஏலம் மூலம் எடுக்கப்படுகின்றனர். மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அதிகாரப்பூர்வ லோகோ இன்று வெளியிடப்பட்டது. ஏல நிகழ்ச்சியின்போது, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோர் லோகோவை வெளியிட்டனர். இதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

    மகளிர் பிரீமியர் லீக்கின் தொடக்க சீசன் உலகம் முழுவதும் பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று நடந்தது.
    • இதில் அதிகபட்சமாக இந்திய வீராங்கனை மந்தனா ரூ.3.4 கோடிக்கு விலை போனார்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26- ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 5 அணிகள் களம் இறங்குகின்றன.

    இந்த அணிகளுக்கு வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் நேற்று பிற்பகல் நடந்தது. 5 அணிகளைச் சேர்ந்த உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.12 கோடி செலவிட அனுமதிக்கப்பட்டது. ஏலப்பட்டியலில் 179 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 449 வீராங்கனைகள் இடம் பிடித்தனர். அவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார்.

    முதல் வீராங்கனையாக இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கியது.

    இந்திய அணியின் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.8 கோடிக்கு மும்பை அணி சொந்தமாக்கியது.

    ஜெமிமா ரோட்ரிக்சை ரூ.2.2 கோடி மற்றும் ஷபாலி வர்மாவை ரூ.2 கோடிக்கு டெல்லி அணியும் வாங்கியது.

    ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மாவை ரூ.2.6 கோடிக்கு உ.பி. வாரியர்ஸ் வாங்கியது.

    வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்ட்ராகரை ரூ.1.9 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.

    மிடில் வரிசை பேட்டர் யாஸ்திகா பாட்டியா ரூ.1½ கோடிக்கு மும்பை வாங்கியது.

    இளம் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷை ரூ.1.9 கோடிக்கு பெங்களூரு வாங்கியது.

    வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை ரூ.1½ கோடிக்கு பெங்களூரு அணி உரிமையாக்கியது.

    தேவிகா வைத்யாவை ரூ.1.4 கோடிக்கு உ.பி.வாரியர்ஸ் அணி வாங்கியது.

    மேலும், வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஆஷ்லி கார்ட்னெரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நதாலி சிவெரை ரூ.3.2 கோடிக்கு மும்பை அணியும் தட்டிச் சென்றது.

    • ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்கு 11 டி20 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
    • மகளிர் பிரீமியர் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்கு தேர்வானார்.

    மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 87 பேர் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த தொடர் மார்ச் 4-ந் தேதி தொடங்கி 26 வரை நடைபெறுகிறது.

    மகளிர் பிரீமியர் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்கு தேர்வானார். அவரை ரூ.3.4 கோடிக்கு ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியது.

    இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆர்சிபி ஆடவர் அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இந்த தகவலை வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்கள்.


    இந்திய அணிக்கு 11 டி20 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்ட மந்தனாவுக்கு 6 போட்டிகளில் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்குகிறது.
    • இந்த லீக் தொடர் மார்ச் 4-ம் தேதி தொடங்க உள்ளது.

    புதுடெல்லி:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்க உள்ளது. இந்த லீக் தொடர் மார்ச் 4-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. 5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் 951 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.

    இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உரிமத்திற்கான தொகை குறித்த தகவல் வெளியாகாத நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா குழுமம் பெற்றுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது.
    • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ஆட்டங்களில் (150 போட்டி) ஆடியவர்.

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 4ம் தேதி முதல் 26ம் தேதி நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் 5 அணிகளின் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டு இருப்பதாக அந்த அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. அவர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ஆட்டங்களில் (150 போட்டி) ஆடியவர் என்ற பெருமைக்குரியவர்.

    • முதல் ஆட்டத்தில் பெத் மூனி தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-ஹர் மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • மொத்தம் 24 ஆட்டங்கள் மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானம், நவி மும்பையில் இருக்கும் டி.ஒய் பட்டேல் ஸ்டேடியம் ஆகியவற்றில் நடக்கிறது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை போன்று பெண்களுக்கு பிரிமீயர் லீக் ஆட்டத்தை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்தது.

    அதன்படி முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் போட்டி மும்பையில் நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 26-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    மொத்தம் 24 ஆட்டங்கள் மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானம், நவி மும்பையில் இருக்கும் டி.ஒய் பட்டேல் ஸ்டேடியம் ஆகியவற்றில் நடக்கிறது. தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது.

    டி.ஒய் பட்டேல் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும். முதல் ஆட்டத்தில் பெத் மூனி தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-ஹர் மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மெக்லானிங்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மந்தனாவும், உ.பி. வாரியர்சுக்கு அலிசா ஹீலியும் கேப்டனாக உள்ளனர்.

    ×