என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker murder"

    • சீவலப்பேரி தொழிலாளி கொலை வழக்கில் போலீசார் 15 பேரை கைது செய்தனர்
    • சுடலைகோவில் பூசாரி துரையின் குடும்பத்தில் ஒருவருக்கு அடுத்த மாதத்திற்குள் அரசு வேலை வழங்கப்படும்

    நெல்லை:

    பாளை சீவலப்பேரியை சேர்ந்தவர் தொழிலாளி மாயாண்டி( வயது 38). இவர் கடந்த 10-ந் தேதி ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை கைது செய்தனர்.

    பேச்சுவார்த்தை

    இதற்கிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாயாண்டியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அவர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தனர். அவர்களுடன் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, உயிரிழந்த மாயாண்டி குடும்பத்தாருக்கு நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.

    அரசு வேலை

    மேலும் மாயாண்டி குடும்பத்தில் ஒருவருக்கும், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட சுடலைகோவில் பூசாரி துரையின் குடும்பத்தில் ஒருவருக்கும் அடுத்த மாதத்திற்குள் அரசு வேலை வழங்கப்படும்.

    2 பேர் குடும்பத்தின ருக்கும் பாளை கிருபா நகரில் 3 சென்ட் இடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் மாயாண்டியின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

    உடல் ஒப்படைப்பு

    இந்நிலையில் மாயாண்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடலை வாங்க இன்று அவரது உறவினர்கள் வந்தனர். அவர்களிடம் மாயாண்டியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    அவர்கள் மாயாண்டியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். தொடர்ந்து அவரது சொந்த ஊரான சீவலப்பேரியில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    பலத்த பாதுகாப்பு

    இதைத்தொடர்ந்து மருத்துவமனை முன்பு நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரவணன் தலைமையில் சீவலப்பேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. இதற்காக நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் சீவலப்பேரியில் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • டாக்டர்கள் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பார்த்தனர்.
    • ஆசாரிப்பள்ளம் புற காவல் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே திட்டுவிளை ஜோசப் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் எடிசன் (வயது 42), கொத்தனார்.

    இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று வீட்டிற்கு வந்தார். இவருக்கும் அவரது சகோதரர் மார்ட்டின் ஜெயராஜ் (40) என்பவருக்கு இடையே குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின் ஜெயராஜ் அவரது அண்ணன் ஜார்ஜ் எடிசனை நெஞ்சில் சரமாரியாக குத்தினார்.

    இதில் ஜார்ஜ் எடிசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அண்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததைப் பார்த்த மார்ட்டின் ஜெயராஜ் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். உடனடியாக ஜார்ஜ் எடிசனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அப்போது அங்கு டாக்டரிடம் தனது அண்ணன் ஜார்ஜ் எடிசன் விபத்தில் சிக்கியதாக கூறினார். டாக்டர்கள் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பார்த்தனர். இதுபற்றி ஆசாரிப்பள்ளம் புற காவல் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் அங்கு வந்து மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் அவர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.

    பின்னர் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மார்ட்டின் ஜெயராஜை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    பிடிபட்ட மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்திய போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர் ஜார்ஜ் எடிசனை குத்தியதாக கூறினார். இதிலிருந்து தப்பிக்க விபத்தில் சிக்கியதாக நாடகம் ஆடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது.

    சகோதரரை தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.
    • செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.

    இவருக்கு மாரியம்மாள் (48) என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் மணி மகன் ராஜா (27).

    இவரை செல்லையாவின் மகன் மாரியப்பன் கிண்டல் செய்துள்ளார். இது சம்பந்தமாக மாரிய ப்பனுக்கும், ராஜாவிற்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறினார்.

    சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் செல்லையாவை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுபற்றி நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொ டுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி ராஜாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது, என்னை மாரியப்பன் கிண்டல் செய்தது தொடர்பாக செல்லையாவிடம் தட்டி கேட்டேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கம்பால் தாக்கினேன். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறி உள்ளார். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    • மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கைகாட்டி அருகே உள்ளது கீழ விளாங்குடி கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் அறிவழகன் (வயது 48). கூலித்தொழிலாளியான இவர் மரம் வெட்டும் வேலைக்கு செல்வார்.

    இவர் தினமும் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது வழியில் மது அருந்தி விட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    பக்கத்து ஊரான ஆதிச்சநல்லூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (50). இவர் மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். மதுவுக்கு அடிமையான இவரும் அறிவழகன் மது அருந்தும் டாஸ்மாக் கடைக்கு வருவது வழக்கம்.

    அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகினர். அப்போது முதல் இருவரும் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு அறிவழகன், வெங்கடாசலம் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவரின் குடும்ப விஷயங்களை பகிர்ந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் மது போதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஒன்றாக புறப்பட்டனர். மணல் மேடான பகுதிக்கு சென்றபோது மீண்டும் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அறிவழகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெங்கடாசலத்தை சரமாரியாக வெட்டினார்.

    இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் அவரது உடலை அப்பகுதியில் உள்ள கருப்பு கோவில் அருகே குழி தோண்டி புதைத்த அறிவழகன் மண்ணால் மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    ஆனாலும் மதுபோதை குறையாத அறிவழகன் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை உளறிக் கொட்டியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில், விரைந்து சென்ற கயர்லாபாத் போலீசார் தாசில்தார் கண்ணன், வி.ஏ.ஓ. ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கொலை செய்து புதைக்கப்பட்ட வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவரபாளையம் பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் கந்தசாமி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
    • பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    பல்லடம்:

    திருச்சி கருவம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 56). இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் முனீஸ்வரன், விக்னேஸ்வரன், சிவகாந்த பிரியதர்ஷினி ஆகிய 2மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவி சிவகாமி இறந்துவிட்டதால் தனது மகன்களுடன் திருப்பூர் பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் தனது சகோதரி ரேணுகா வீட்டில் குடியிருந்து கொண்டு கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு கந்தசாமி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் திரும்பி வரவில்லை. இது குறித்து திருச்சியில் உள்ள உறவினர்களிடம் ரேணுகா மற்றும் குடும்பத்தினர் விசாரித்த போது கந்தசாமி அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

    இந்தநிலையில் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவரபாளையம் பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் கந்தசாமி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    கந்தசாமியுடன் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது ஒருவர் மட்டும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது அவர் கந்தசாமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் கரண் (22) என்பதும் கந்தசாமியுடன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    கந்தசாமி சொந்த ஊருக்கு சென்று பணம் கொண்டு வந்ததை தெரிந்த கரண், தனது கள்ளக்காதலி பழனி அருகே உள்ள புதிய ஆயக்குடியை சேர்ந்த சசிகலா (34) என்பவருடன் சேர்ந்து கந்தசாமியை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கந்தசாமி வைத்திருந்த ரூ.10ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு உடலில் பாறாங்கல்லை கட்டி கிணற்றில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். போலீசார் விசாரணையில் கரண், சசிகலா சிக்கிக்கொண்டனர். ரூ.10ஆயிரம் பணத்திற்காக தொழிலாளியை கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 21-ந் தேதி மணிகண்டனின் அக்கா தங்கமாரியை அவரது கணவர் தாக்கியதாக தெரிகிறது.
    • மணிகண்டன் குடிபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை இடையர்பாளையம் கோவில்மேட்டை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி வேலம்மாள்(வயது60).

    இவர்களுக்கு மணிகண்டன்(23) என்ற மகனும், தங்கமாரி, செல்வி என 2 மகள்களும் உள்ளனர்.

    மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. தங்கமாரி தனது கணவர் அய்யப்பனுடன் வேலாண்டிபாளையம் சின்ன அண்ணன் செட்டியார் வீதியிலும், செல்வி தனது கணவர் பாலசுப்பிரமணியத்துடன் இடையர்பாளையத்திலும் வசித்து வருகின்றனர்.

    செல்லையா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து வேலம்மாள் தனது மகன் மணிகண்டனுடன் தனியாக வசித்து வந்தார். மணிகண்டன் தச்சு வேலை செய்து வந்தார்.

    மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து, வீட்டில் தகராறில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 21-ந் தேதி மணிகண்டனின் அக்கா தங்கமாரியை அவரது கணவர் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து மணிகண்டன் குடிபோதையில் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து தனது சகோதரர் குடித்து விட்டு வந்து தகராறு செய்வதாக தங்கமாரி சகோதரி செல்வியிடம் கூறி வேதனைபட்டார்.

    அப்போது செல்வியின் கணவர் பாலசுப்பிரமணியம், இவர்களை தொடர்பு கொண்டு உங்கள் சகோதரருக்கு வேலையே கிடையாது. எப்போது பார்த்தாலும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து வருகிறார் என கேட்டார். அதற்கு அவர்கள், பாலசுப்பிரமணியத்தை திட்டியுள்ளனர்.

    இதனால் பாலசுப்பிரமணியத்திற்கு, மணிகண்டன் மீது கோபம் உண்டானது. நேற்று இரவு பாலசுப்பிரமணியம் குடிபோதையில் மணிகண்டனின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார்.

    இதையடுத்து அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு நெற்றி, மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஆத்திரம் தீராத பாலசுப்பிரமணியம் இரும்பு கம்பியால் மேலும் அடித்தார்.

    இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து பாலசுப்பிரமணியம் அங்கிருந்து திருவள்ளுவர் நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    அங்கிருந்து தனது மனைவியை தொடர்பு கொண்டு, உனது தம்பி உயிருடன் இருக்கிறானா? என்று போய் பார்த்து கொள் என்று கூறினார்.

    இதை கேட்டு பதறிப்போன அவர் தனது தாயுடன் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது மணிகண்டன் அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மகனின் உடலை பார்த்து வேலம்மாள் கதறி அழுதார்.

    இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி.நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமது பாசில் தங்கி இருந்த பிளாட்பாரத்தில் அருகே கேரளாவை சேர்ந்த ரமேஷ் என்பவரும் தங்கி இருந்தார்.
    • ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கேரளாவை சேர்ந்தவர் முகமது பாசில்(வயது28).

    இவர் தனது மனைவியுடன் துடியலூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் தங்கி பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை சேகரிக்கும் தொழில் செய்து வந்தார்.

    தினமும் இருவரும், அந்த பகுதி முழுவதும் ஒன்றாக சேர்ந்து குப்பைகளை சேகரித்து, அதனை விற்று, அதில் வரும் பணத்தை கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

    முகமது பாசில் தங்கி இருந்த பிளாட்பாரத்தில் அருகே கேரளாவை சேர்ந்த ரமேஷ்(51) என்பவரும் தங்கி இருந்தார். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டது.

    2 பேரும் நண்பர்களாக பழகினர். இதையடுத்து 2 பேரும் ஒன்றாக வேலை செய்ய ஆரம்பித்தனர். 2 பேருக்குமே மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் 2 பேரும் பணி முடிந்ததும் சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும் 2 பேரும் ஒரின சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது.

    நேற்றும் வழக்கம் போல் 2 பேரும் தங்கள் வேலையை முடித்து விட்டு ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தனர். மதுகுடித்த பின்னர் தூங்க சென்றனர். அப்போது முகமது பாசில், ரமேசை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.

    ஆனால் ரமேஷ் வர மறுத்தார். மேலும் உனது ஆடையை களைந்து இருக்குமாறு கூறியதால் ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர் முகமது பாசிலின் மீது கடும் கோபம் கொண்டார். அவரை கொல்ல முடிவு செய்தார்.

    அதன்படி முகமது பாசில் தூங்கியதும், சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது முகமது பாசில் இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியாகினர்.

    உடனடியாக சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், ஒரின சேர்க்கைக்கு அழைத்ததால் ரமேஷ், முகமது பாசிலை கல்லை போட்டு கொன்றது போலீசின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரமேசை தேடி வந்தனர். இந்த நிலையில் ரமேஷ் துடியலூர் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் காலில் வெட்டி உள்ளார்.
    • சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் பெரிய மாரியப்பன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரிய மாரியப்பன் (வயது 55). கட்டிட தொழிலாளி . அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). பெயிண்டர்.

    இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் விஜயாபுரி சமுதாயக்கூடம் அருகே மது அருந்தி உள்ளனர்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் காலில் வெட்டி உள்ளார்.

    சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் பெரிய மாரியப்பன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பெரிய மாரியப்பன் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரிய மாரியப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காலில் வெட்டுக்காயங்களுடன் அப்பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் மணிகண்டனை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாலாட்டின் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த கல்லை எடுத்து ரஞ்சித் குமாரின் தலையில் தாக்கினார்.
    • தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை ராஜா நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 40). கூலித்தொழிலாளி.

    இவரிடம், நவீனா கார்டன் பகுதியை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை நீண்ட நாட்கள் ஆகியும் கண்ணன் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கண்ணனிடம் அடிக்கடி சென்று ரஞ்சித்குமார், தனது பணத்தை தருமாறு கேட்டுள்ளார். நேற்று இரவும் கண்ணனின் வீட்டுக்கு சென்று ரஞ்சித்குமார் பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த கல்லை எடுத்து ரஞ்சித் குமாரின் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    • உடலை கைப்பற்றி இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் வெங்கடேஸ்வரா நகர் கழுகா சலபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார்(வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் கடந்த 18-ந்தேதி இரவு புதியம்புத்தூர் தட்டப்பாறை செல்லும் சாலையில் கற்கூரணி குளத்தின் தெற்கே மேற்கு நோக்கி செல்லும் காத்தாடி மண் பாதையில் 100 மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ரத்தக் காயங்களுடன் சாலையில் இறந்த நிலையில் கிடந்தார்.

    அவரது உடலை கைப்பற்றி இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் வரும் போது அங்கு குடிபோதையில் நின்ற மேல தட்டப்பாறையை சேர்ந்த ஹரிகரன் (23), வெங்கடேஷ்( 22) ஆகிய இருவரும் வழிமறித்து லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.

    அவர்களை இறக்கி விடும்போது சதீஷ்குமாரிடம் பணம் இருக்குமா என கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் இல்லை என்று கூறியதும் ஆத்திரத்தில் அவர்கள் இருவரும் சதீஷ்குமாரை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்து மிதித்துள்ளனர். இதனால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் (பொறுப்பு) விசாரணை நடத்தி சதீஷ்குமாரை அடித்து கொன்ற ஹரிஹரன், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார். கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஜாமினில் வெளிவந்த முனியசாமி பின்னர் கடந்த 2 வருடமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
    • மஞ்சம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த முனியசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர், கண்ணகி நகரை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா (வயது49). தொழிலாளி. இவர், கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி மாதவரம் ரவுண்டனா அருகே அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மாதவரம் போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 4 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி அஸ்லாம் பாஷா உயிரிழந்தார்.

    இதேபோல் ஜூன் மாதம் 3-ந் தேதி நள்ளிரவு ரெட்டேரி பாலம் அருகே மூலக்கடையைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் மர்மஉறுப்பில் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து முனியசாமி (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கையின் போது அவர் சைக்கோபோல் இது போன்று தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த முனியசாமி பின்னர் கடந்த 2 வருடமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரைப் பிடிக்க பொன்னேரி விரைவு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    இதைத் தொடர்ந்து கொளத்தூர் துணை கமிஷனர் சக்திவேல் ஆலோசனையின்படி மாதவரம் உதவி கமிஷனர் ஆதிமூலம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் முனியசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே மஞ்சம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த முனியசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    • பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது.
    • பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் கணேசபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி போதுமணி (40). இவர்களுக்கு சூர்யா (24), சுகன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலமுருகன் அவரது வீட்டிலேயே இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து சித்தாபட்டி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    தினமும் குடித்து விட்டு தகராறு செய்ததால் அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்ததாக அவர்கள் ஒத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் போதுமணி மற்றும் அவரது மகன்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    ×