என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker suicide"

    • தியாகதுருகம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி, அக்.27-

    தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் (வயது 38) கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததார். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இதுகுறித்து வரஞசரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • செல்வம் பாக்கெட்டில் விஷ பாட்டில் இருந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பெரிய எடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (58). கூலி தொழிலாளி. இவர் திருவள்ளூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஏரிக்கரையில் மயங்கி விழுந்து கிடந்தார்.

    உடனடியாக செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவரது பாக்கெட்டில் விஷ பாட்டில் இருந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    • மகன் தன்னிடம் பேசாமல் சோகமாக சென்றதால் சந்தேகம் அடைந்த தாய் மகன் வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
    • பலமுறை குரல் கொடுத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவசர போலீஸ் 100-க்கு போன் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஞ்சார பாலம் மெட்டு பகுதியை சேர்ந்தவர் துர்கா ஆஞ்சநேய பிரசாத் (வயது 42). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நாகமணி. தம்பதிக்கு பிந்து (15), பார்கவி (13) என்ற 2 மகன்கள் இருந்தனர். நாகமணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு இறந்தார். இதனால் தனது மகள்களை துர்கா ஆஞ்சநேய பிரசாத் வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் துர்கா ஆஞ்சநேய பிரசாத்தை போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த துர்கா ஆஞ்சநேய பிரசாத் திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்ததால் விரக்தி அடைந்து சோகத்துடன் காணப்பட்டார். நேற்று காலை தனது தாய் வீட்டிற்கு சென்ற துர்கா ஆஞ்சநேயர் பிரசாத் தாயிடம் டீ வாங்கி குடித்தார். தாயிடம் எதுவும் பேசாமல் சோகமாக வீட்டிற்கு திரும்பினார்.

    மகன் தன்னிடம் பேசாமல் சோகமாக சென்றதால் சந்தேகம் அடைந்து மகன் வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை குரல் கொடுத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவசர போலீஸ் 100-க்கு போன் செய்தார்.

    போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது துர்கா ஆஞ்சநேயர் பிரசாத் ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கில் பணமாக தொங்கினார். அவரது 2 மகள்கள் மற்றொரு அறையில் பலமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த விசாகப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு சென்றதால் அவமானம் அடைந்து 2 மகள்களை கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குணசீலனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.
    • குணசீலன் தனது சம்பள பணம், தனது தம்பியின் சம்பள பணம் ஆகியவற்றை வீட்டிற்கு அனுப்பாமல் அதனை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

    மதுரை:

    சேலம் மாவட்டம் முல்லை காட்டை சேர்ந்தவர் குணசீலன்(வயது26). இவரது தம்பி பசுபதி. இவர்கள் மதுரை மாவட்டம் சாத்த மங்கலத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து தாலுகாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஓட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    அவர்கள் கடந்த 6 மாதங்களாக ஓட்டலுக்கு சென்று வேலை பார்த்து வந்தனர். அப்போது குணசீலனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தார்.

    அப்போது அவர் தனது சம்பள பணம், தனது தம்பியின் சம்பள பணம் ஆகியவற்றை வீட்டிற்கு அனுப்பாமல் அதனை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில் அவர் கடந்த 6 மாதங்களில் ரூ.5½ லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் குணசீலனின் குடும்பத்தினர் தங்களது செலவுக்கு பணம் அனுப்பாததால் அவரிடம் உடனடியாக பணம் அனுப்பும்படி கேட்டு வந்தனர். ஆனால் அவர்களிடம் பணத்தை இழந்தது பற்றி சொல்ல முடியாமல் தவித்த குணசீலன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசீலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசீலன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? ஆன்லைன் ரம்மி விளையாடியதால் அவருக்கு கடன் இருந்ததா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சாத்தமங்கலம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • இரவு பெற்றோரிடம் பேசிவிட்டு மற்றொரு வீட்டில் தனியாக உறங்கச் சென்று விட்டார்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த பெரிய வாளவாடியை சேர்ந்தவர் நாகராஜ்.இவரது மகன் மோகன்ராஜ்(வயது 38).இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மோகன்ராஜ் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மோகன்ராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோரை பார்ப்பதற்காக திருப்பூரில் இருந்து சொந்த ஊரான பெரியவாளவாடிக்கு வந்துள்ளார்.

    நேற்று முன் தினம் இரவு பெற்றோரிடம் பேசிவிட்டு மற்றொரு வீட்டில் தனியாக உறங்கச் சென்று விட்டார். காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டின் கதவை திறந்து பார்த்து உள்ளனர். அப்போது மோகன்ராஜ் இறந்த நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து தளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் திம்மாவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்
    • சுந்தர்ராஜன் வீட்டில் உள்ள மாடியில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது45). திம்மாவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள குற்றப்புலனாய்வு துறை போலீஸ் தலைமை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சுந்தர்ராஜன் வீட்டில் உள்ள மாடியில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சுந்தர்ராஜனின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    • கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • ஆத்திரம் அடைந்த முனிராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் மகாதேஸ்வரா பெட்டாவை அடுத்த நாகமலைப்பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி.

    கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து முனிராஜ், மனைவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியை பார்க்க வந்த முனிராஜ் சமரசம் பேசுவதற்காக அங்குள்ள மலைப்பகுதிக்கு கூட்டி சென்றார். அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனிராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆத்திரம் தீராத முனிராஜ் இந்த காட்சியை செல்போனில் படம் எடுத்தார். வீடியோவாக படம் பிடித்த அவர் அந்த காட்சியை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். இந்த காட்சியை அவரது உறவினர்கள் பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக முனிராஜை போனில் தொடர்பு கொண்டனர். இந்த விவரம் மாதேஸ்வரன் மலை போலீசாருக்கும் தெரியவந்தது. போலீசார் முனிராஜை தொடர்பு கொண்டனர்.

    இதனால் பதறிய முனிராஜ் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மகாதேஸ்வரன் மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
    • இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடியை சேர்ந்தவர் ரவி(வயது 36). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டது. இது தொடர்பாக ரவி பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.

    இதையடுத்து அவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரவிக்கு நாக்கில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவி மனம் உடைந்தார். டாக்டர்கள் ரவியை மேல் சிகிச்சைக்காக மதுரை பாலரங்காபுரத்தில் உள்ள அரசு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட ரவி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதன்படி இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தனது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மனைவி பிரிந்து சென்றதால் கண்ணதாசனும் கடந்த சில நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்டார்.
    • மனைவி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் உள்ளது மாணிக்கல்லாடி கிராமம்.

    இந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (45). தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவியுடன் அந்த பகுதியில் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி சண்டை போட்டதாகவும் தெரிகிறது. அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த கண்ணதாசனின் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து கண்ணதாசன் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் கண்ணதாசனும் கடந்த சில நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்டார்.

    யாரிடமும் சரியாக பேசாமல் மவுனமாகவே இருந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றார்.

    இன்று அதிகாலை 2 மணிக்கு கண்ணதாசனின் வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியாகி ஓடி வந்து பார்த்தனர்.

    அப்போது வீட்டிற்குள் கண்ணதாசன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனடியாக மக்கள் சம்பவம் குறித்து தேவர்சோலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர் எப்படி இறந்தார் என்பதை அறிய வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது அவரது உடல் அருகே நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கண்ணதாசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரிடம் நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது? எதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரவி மது குடிப்பதை குடும்பத்தினர் கண்டித்து வந்தனர்.
    • மனவேதனை அடைந்த ரவி வீட்டின் அருகே திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த ஆதிகேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது47). கூலித்தொழிலாளி. இவர் மது குடிப்பதை குடும்பத்தினர் கண்டித்து வந்தனர். இதனால் மன வேதனை அடைந்த ரவி வீட்டின் அருகே திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாலையில் ராஜூபட்ரா வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்றுபார்த்தபோது கவுதம் ரஜாக் அங்குள்ள இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம்ரஜாக் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    மேற்கு வங்கம் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் தப்பட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரஜாக் (வயது23). இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் செங்குட்டை கிராமத்தில் ஒரு அறையை வாடகை எடுத்து தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். இவருடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த ராஜூபட்ரா (22) என்பவரும் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கவுதம் ரஜாக் மனவேதனையுடன் காணப்பட்டார். நேற்று காலையில் ராஜூபட்ரா வேலைக்கு செல்லும்போது கவுதம் ரஜாக்கை அழைத்து உள்ளார். அப்போது அவர் சிறிது நேரம் கழித்து வேலைக்கு வருவதாக கூறினார். இதைத்தொடர்ந்து ராஜூபட்ரா வேலைக்கு சென்று விட்டார். ஆனால் கவுதம் ரஜாக் வேலைக்கு வரவில்லை. மாலையில் ராஜூபட்ரா வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்றுபார்த்தபோது கவுதம் ரஜாக் அங்குள்ள இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கம்பை நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் பிணமாக கிடந்த கவுதம் ரஜாக்கின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம்ரஜாக் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனம் உடைந்த விநாயக் பல முறை தனது காதலியிடம் பேச முயன்றுள்ளார்.
    • காதலியின் வீட்டிற்கு சென்ற விநாயக் காதலியின் வீட்டு திண்ணையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பூர்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் விநாயக். இவர் திருப்பூர் ஓம்சக்தி கோவில் அருகே உள்ள வெங்கடேசன் நகரில் குடியிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். அவர் ஒடிசாவில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த விநாயக் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த வடமாநில இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் விடுமுறை நாட்களில் வெளியே சுற்றி வந்துள்ளனர். இது ஒடிசாவில் உள்ள விநாயக்கின் மனைவிக்கு தெரியவந்தது.

    இதையடுத்து திருப்பூர் வந்த விநாயக்கின் மனைவி, அந்த பெண்ணிடம் எனது கணவருடன் இனி பேசக்கூடாது என்று கண்டித்து சென்றுள்ளார். அது முதல் அந்த பெண் விநாயக்கிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டார்.

    இதில் மனம் உடைந்த விநாயக் பல முறை தனது காதலியிடம் பேச முயன்றுள்ளார். அதற்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே, அதே பகுதியில் உள்ள காதலியின் வீட்டுக்கு பல முறை சென்று தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். இதற்கு அந்த பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

    நேற்று காதலியின் வீட்டிற்கு சென்ற விநாயக் காதலியின் வீட்டு திண்ணையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை ஏற்க மறுத்ததால் காதலி வீட்டில் பனியன் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×