என் மலர்
நீங்கள் தேடியது "Youth Congress"
- பீகாரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
- ஓடுவதை நிறுத்துங்கள், பயணத்தில் தோளோடு தோள் சேர்ந்து நடந்து செல்லுங்கள்.
பீகாரில் இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று பீகாரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பாதயாத்திரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
பெகுசராய் நகரில் 'இடம்பெயர்வை நிறுத்துங்கள், வேலை கொடுங்கள்' என்ற கருப்பொருளில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது. இதற்காக இன்று டெல்லியில் இருந்து வருகை தந்த ராகுல் காந்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடை சூழ பேரணியில் நடந்து சென்றார். இதைத்தொடர்ந்து பாட்னாவில் நடக்கும் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.
முன்னதாக பாதயாத்திரை குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி பகிர்ந்து பேசிய ராகுல் காந்தி, பீகாரின் இளம் நண்பர்களே, ஏப்ரல் 7 ஆம் தேதி நான் பெகுசராய்க்கு வருகிறேன். ஓடுவதை நிறுத்துங்கள், பயணத்தில் தோளோடு தோள் சேர்ந்து நடந்து செல்லுங்கள்.
பீகார் இளைஞர்களின் உணர்வு, அவர்களின் போராட்டம், அவர்களின் துன்பம் ஆகியவற்றை உலகம் முழுவதும் காண வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.
நீங்களும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து வாருங்கள். கேள்வி கேளுங்கள். உங்கள் உரிமைகளுக்காக பீகார் அரசிடம் குரல் எழுப்புங்கள். சட்டமன்றத் தேர்தலில் அந்த அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்" என்று அழைப்பு விடுத்டிருந்தார்.
- பாதயாத்திரை குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி பகிர்ந்து ராகுல் காந்தி பேசினார்.
- கேள்விகளைக் கேளுங்கள், உங்கள் குரலை உயர்த்துங்கள்
பீகாரில் இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு தற்போது பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரின் ஆட்சி நடந்து வருகிறது. எதிர்கட்சியாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளது.
இந்நிலையில் இன்று பீகாரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பாதயாத்திரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
பெகுசராய் நகரில் 'இடம்பெயர்வை நிறுத்துங்கள், வேலை கொடுங்கள்' என்ற கருப்பொருளில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
டெல்லியில் இருந்து வருகை தந்து பாதயாத்திரையில் கலந்துகொண்டபின், பாட்னாவில் நடைபெறும் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
பாதயாத்திரை குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி பகிர்ந்து பேசிய ராகுல் காந்தி, பீகாரின் இளம் நண்பர்களே, ஏப்ரல் 7 ஆம் தேதி நான் பெகுசராய்க்கு வருகிறேன். ஓடுவதை நிறுத்துங்கள், பயணத்தில் தோளோடு தோள் சேர்ந்து நடந்து செல்லுங்கள்.
பீகார் இளைஞர்களின் உணர்வு, அவர்களின் போராட்டம், அவர்களின் துன்பம் ஆகியவற்றை உலகம் முழுவதும் காண வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.
நீங்களும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து வாருங்கள். கேள்வி கேளுங்கள். உங்கள் உரிமைகளுக்காக பீகார் அரசிடம் குரல் எழுப்புங்கள். சட்டமன்றத் தேர்தலில் அந்த அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அரசியலமைப்பு மாநாடு குறித்து பதிவிட்டுள்ள அவர், சம்ப்ராண் சத்தியாக்கிரக இயக்கமாக இருந்தாலும் சரி, சமூக நீதிப் புரட்சியாக இருந்தாலும் சரி, பீகார் நிலம் எப்போதும் அநீதிக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்று அந்த வரலாறு மீண்டும் ஒலிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, பாரபட்சம் மற்றும் பாகுபாட்டிற்கு எதிராக, பொருளாதார, சமூக சமத்துவம் மற்றும்நீதிக்காக நாம் ஒன்றுபட்டு குரல் எழுப்புவோம்!. இன்று பாட்னாவில் சம்விதன் சம்மான் சம்மேளனத்திற்கு என்னுடன் சேருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- நள்ளிரவு நடன பார் எனப்படும் நடனமேடையுடன் கூடிய மதுபார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
- நடன பார் மூலம்தான் அரசுக்கு வருமானம் என்ற எண்ணத்தில் நாள்தோறும் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபுநடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
நள்ளிரவு நடன பார் எனப்படும் நடனமேடையுடன் கூடிய மதுபார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இந்நிலையில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவே நடன பார்களை அரசு திறக்கிறது என பேசியுள்ளார்.
நடன பார் மூலம்தான் அரசுக்கு வருமானம் என்ற எண்ணத்தில் நாள்தோறும் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல், பயந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். புதுவை அரசு பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. தன் தொகுதி மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டும் பணி நிரந்தர ஆணை வழங்கியுள்ளார். இது நியாயம்தானா? அரசின் அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உக்கடம் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி உக்கடம் போலீசில் புகார் செய்தார்.
- மத மோதல்களை தூண்டு வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை:
சென்னையை சேர்ந்தவர் இடும்பாவனம் கார்த்திக்(வயது 32). இவர் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் உக்கடத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து உக்கடம் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி உக்கடம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் போலீசார் மத மோதல்களை தூண்டும் வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜனிடம் கொடுத்தனர்.
- கார்த்திகேயன், முகிலன், வேல்முருகன், மனோஜ், அன்பரசன், பாலன், அஷ்ரப் அலி, கண்ணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு ஜோதி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.
இந்த ஜோதியை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜனிடம் கொடுத்தனர்.
ஜோதியை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு அண்ணாசாலை, காமராஜர் சாலை வழியாக ராஜீவ் காந்தி சிலைக்கு பாதயாத்திரையாக கொண்டு சென்றார். பின்னர் காங்கிரஸ் தலைவர்களுடன் ராஜீவ் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் வேல்முருகன், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தியாகராஜன், ராஜ்குமார், மாநில பொதுச் செயலாளர்கள் ரகுமான், தனுசு
வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆறுமுகம், விநாயகம், வீரமுத்து, மோகன், கிருஷ்ணராஜ் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கோவலன், பெருமாள், குருமூர்த்தி, சையத், சத்யநாராயணன், சுந்தரம், பிரதீப், சித்திக், ராகுல், அய்யப்பன், கார்த்திகேயன், முகிலன், வேல்முருகன், மனோஜ், அன்பரசன், பாலன், அஷ்ரப் அலி, கண்ணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாநிலத் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் நடக்கிறது.
- தேசிய ஒருங்கிணைப்பாளர் சைத்தன்யா ரெட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாட்கள் பயிற்சி முகாம் லே ராயல் பார்க் ஓட்டலில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் நடக்கிறது.
பயிற்சி முகாமை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், புதுவை மாநில முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் எம்பி வைத்தியலிங்கம், எம்எல்ஏ வைத்தியநாதன், பிரதேச, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செயலாளர், புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோஸ்வா, இளைஞர் காங்கிரஸ் பயிற்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சைத்தன்யா ரெட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாநில துணைத்தலைவர்கள் பொதுச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
- துவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பி. கே. தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
ராகுல் காந்திக்கு நாளை திங்கட்கிழமை 53-வது பிறந்தநாள்.
ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பாக ரத்ததான முகாம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். முகாமை புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பி. கே. தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முகாமில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர்.முகாமில்
காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் மருது பாண்டியன், வட்டார தலைவர் ஆறுமுகம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் வேல்முருகன், முன்னாள் துணைத் தலைவர் ரகுபதி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர்கள் பொதுச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
- ராகுல்காந்தியின் சிறை தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.
- புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் தலைவர் .ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் கொக்கு பார்க் அருகில் கொட்டும் மழையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்
புதுச்சேரி:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தியின் சிறை தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.
இதனை நாடு முழுவதும் வரவேற்று காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் தலைவர் .ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் கொக்கு பார்க் அருகில் கொட்டும் மழையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்
கொண்டாட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்திய நாதன் எம்.எல்.ஏ. மாநில பொதுச்செயலாளர் இளையராஜா, மாநில செயலாளர் செந்தில் குமார், ராஜா, ஜம்புலிங்கம், வெங்கட், முத்துராமன், குருசாமி மன்னநாதன், முகுந்தன்,
இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கோவலன், மாநில பொதுச் செயலாளர் சத்ய நாராய ணன், பிரியா ஊடகத்துறை பொறுப்பாளர்கள் தமிழரசன், ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கென்னடி, ஜனா அரவிந்தம், மாவட்ட தலைவர் கார்த்தி கேயன், துணை தலைவர் அஷ்ரப் அலி, அன்பரசன்,
பொது செயலாளர் லோகநாதன், தொகுதி தலைவர் கண்ணன், இளை ஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வினோத், சண்முகம்,சுனில், கீர்த்தி, மாறன், மதன், ஹரிஷ், சஞ்சய், குணால், ஜீவரத்தினம், அபி மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- இளைஞர் காங்கிரசார் ஊர்வலமாக சென்று அண்ணா சாலையில் இளைஞர் காங்கிரஸ் கொடியேற்றி கொண்டாடினார்கள்.
- தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெராட் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
இந்திய இளைஞர் காங்கிரஸ் 63-வது தொடக்க நாளை முன்னிட்டு புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து இளைஞர் காங்கிரசார் ஊர்வலமாக சென்று அண்ணா சாலையில் இளைஞர் காங்கிரஸ் கொடியேற்றி கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சிக்கு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெராட் முன்னிலை வகித்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ, மாநில ஒரு ங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், வக்கீல் பிரிவு தலைவர் மருது பாண்டியன், மாநில பொதுச் செயலா ளர்கள் திருமுருகன், இளைய ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாபு லால், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் ரகுபதி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கோவலன் மாநில பொதுச் செய லாளர்கள் பெருமாள், சதீஷ்குமார், குருமூர்த்தி, விக் னேஷ்,சையத், சத்யநாராயணன், பிரியா, சுந்தரம், பிரதீப், சித்திக், மாவட்ட தலைவர் பிரகாஷ், ஐயப்பன் ஊடகப்பிரிவு ஒரு ங்கி ணை ப்பாளர்கள் தமிழரசன், மனோஜ்குமார், கென்னடி, ஜனாஅரவிந்தம், தொகுதி தலைவர்கள், சரண்குமார், சுரேஷ் ராஜ், ராஜேஷ், பிரசன்னா, வீரமணிகண்டன். மாவட்ட நிர்வாகிகள், அன்பரசன், பாலா, மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திருமுருகன், மதன், நவ்பல், மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பாளை லூர்து நாதன் சிலை அருகில் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் பாளை லூர்து நாதன் சிலை அருகில் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் ரில்வான் தலைமை தாங்கி னார். இளைஞர் காங்கிரஸ் மானூர் வட்டார தலைவர் சாம் வில்லியம்ஸ், பாளை சட்டமன்ற துணை தலைவர் ராஜகுரு, நெல்லை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ஜவகர் பால் மன்ச் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் குமரன் வர வேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் யோபு, நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் மரிய குழந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் ராம்குமார், நெ ல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலை வர்கள் அருள்ராஜ், அழகை மாரி யப்பன், சிவன் பெருமாள், நெல்லை மாநகர சக்தி சூப்பர் சீ ஒருங்கிணைப்பாளர் அனீஸ் பாத்திமா, நெல்லை புறநகர் மாவட்ட ஜவகர் பால் மஞ்ச் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ், நெல்லை மாநகர் மாவட்ட ஜவகர் பால் மஞ்ச் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நெல்லை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செய லாளர் ராஜாமெர்சி, நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வாசிக் அலி, நெல்லை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் லாரன்ஸ் கிறிஸ்டோபர், நெல்லை சட்டமன்ற இளை ஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பெரோஸ்கான், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி திருமலை குமார், மோசஸ், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பக்தவச்சலம் அறக்கட்டளை அறங்கா வலர் பைபாஸ் மெடிக்கல் சண்முக வேலன், முன்னாள் பாளை மண்டல தலைவர் கார்த்தி, வரகுணன், விவசாய பிரிவு அருமை செல்வன், மருதையா பாண்டியன், ஷேக் செய்யது அலி, சிந்தாமதார், அவுலியா மொய்தீன், அபூ பக்கர் சித்திக் உட்பட கா ங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நெ ல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் ரியாஸ் நன்றி கூறினார்.
- இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி.
- பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.
தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு நடத்திய மாநாடு என்பதால் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சுமார் 5 லட்சம் பேர் திரண்ட இந்த மாநாடு அமைச்சர் உதயநிதியின் திறமையை வெளிப்படுத்தும் மாநாடாக அமைந்தது. இந்த மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வதந்தி என்று மாநாட்டுக்கு முன்பே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருந்தார்.
ஆனாலும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் அமைச்சர் உதயநிதியின் பேச்சையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சையும் கூர்ந்து கவனித்தனர். மாநாட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களது கட்அவுட்டுகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக அடுத்த தலைவராக உதயநிதியை புகழ்ந்தனர். இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின், இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள துணிவுமிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். இப்படிப்பட்ட தலைவர்தான் தேவை என்று புகழ்ந்தனர். சேலம் மாவட்ட இளைஞரணி உறுப்பினர் ஆர்.செல்வராஜ் கூறுகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
இதேபோல் பெரும்பாக்கத்தை சேர்ந்த டி.ஆர்.முருகேசன் என்பவரும் உதயநிதியின் அரசியல் திறமையை வெளிப்படுத்தி புகழ்ந்தார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசுகையில், அரசியலில் மறைந்த தலைவர் கலைஞர் காட்டிய வழியில் நடந்தோம். அதனை தொடர்ந்து தளபதி மு.க. ஸ்டாலினை ஏற்றுக் கொண் டோம். இப்போது உதய நிதியை துணை முதல்வராக்க விரும்புகிறோம்.
உதயநிதியின் வருகையால் தி.மு.க. இளைஞரணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உதயநிதி பிரசாரம் செய்ததை விட இப்போது அவரது பிரசாரம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவரது உழைப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாடு தி.மு.க.வுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. அவ்வளவு சிறப்பாக மாநாட்டை நடத்தி காட்டியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய பலன் வந்து சேரும் என்று பெருமையுடன் கூறினார்.
மாநாட்டில் அமைச்சர் உதயநிதியை போல் அவரது மகனான இன்பநிதியும் வெள்ளை நிற டிசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தார். அவரது வருகையும் மாநாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
- கேரள தலைமை செயலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர்.
- தடியடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது.
கேரளாவில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சுயேட்சை எம்எல்ஏ அன்வர் குற்றம்சாட்டினார். இவரது புகாரைத் தொடர்ந்து கேரளாவில் முதல்மைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது, கேரள தலைமை செயலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர். இவர்களை தடுக்கும் போது ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு மண்டை உடைந்தது.