search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி விருது விழா"

    • உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன்
    • உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் புதுச்சேரியை சேர்ந்த பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா பேசியதாவது:-

    விஜய் அண்ணா, உங்கள் குரலைக் கேட்க வந்திருக்கிறேன். உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன் அண்ணா. இங்கு மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததை விட எங்களையும் எங்கள் பெற்றோரையும் அழைத்து மகிழ்வித்துள்ளீர்கள்.

    தமிழகத்தின் தளபதியே கல்விக்கு கண் கொடுக்கும் நிகழ்கால கர்மவீரரே உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான். உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துகள். இங்கு பேச வாய்ப்பளித்த தளபதி விஜய் அண்ணாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாணவி சண்முகப்பிரியா பேசி முடிக்கும் வரை விஜய் அவருக்கு மைக்கை பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?
    • நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் நீட் தேர்வு குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    * நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    * மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?

    * நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

    * மாநில மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை கூடாது.

    * கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

    விஜய் தனது உரையின்போது மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    NEET நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

    • பன்முகத்தன்மை என்பது ஒரு பலமே தவிர அதை பலவீனம் என்று சொல்ல முடியாது.
    • ஒன்றிய அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர், பி.ஜி.ஐ. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறார்.

    இந்த ஆண்டுக்கான முதல் கட்ட பரிசளிப்பு விழா கடந்த 28-ந்தேதி சென்னையில் நடந்தது. அப்போது 127 தொகுதிகளை சேர்ந்த 800 மாணவ-மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கினார்.

    இந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பரிசளிப்பு விழா திருவான்மியூரில் ராமச்சந்திரா கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம், ஆகிய 19 மாவட்டங்களில் உள்ள 107 தொகுதிகளை சேர்ந்த 640 மாணவ-மாணவிகளுக்கு விஜய் பரிசுத்தொகை வழங்கினார்.

    விழாவில் விஜய் பேசியதாவது:-

    வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.

    நான் இன்று பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது என்று எனக்கு தோன்றியது. அது என்னவாக இருக்கும் என்று நீங்களே யூகித்து இருப்பீர்கள். நீட் தேர்வை பற்றித்தான்.

    நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ-மாணவிகள் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினை சேர்ந்த மாணவ-மாணவிகள் அனைவருமே ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் ஒரு சத்தியமான உண்மை.

    இந்த நீட் தேர்வை 3 பிரச்சனையாக பார்க்கிறேன். ஒன்று நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975-ம் ஆண்டுக்கு முன்னால் கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. அது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

    அதன் பிறகு தான் அதை ஒன்றிய அரசு பொது பட்டியலில் சேர்த்தது. அதுதான் முதல் பிரச்சனையாக தொடங்கியது.

    இரண்டாவது, ஒரே நாடு ஒரே பாடத் திட்டங்கள், ஒரே தேர்வு ஆகியவை அடிப்படையிலேயே கல்வி கற்கும் நோக்கத்துக்கே எதிரான விஷயமாக இருப்பதை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி அந்த பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்.

    மாநில உரிமைகளுக்காக மட்டுமே நான் இதை கேட்கவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷயமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பார்வை.

    பன்முகத்தன்மை என்பது ஒரு பலமே தவிர அதை பலவீனம் என்று சொல்ல முடியாது. இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் மாநில மொழியில் படித்து விட்டு, மாநில அளவில் படித்து விட்டு என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி சரியாகும். அதுவும் மருத்துவம் படிக்க விரும்பும் கிராமப்புற மாணவ- மாணவிகளை கொஞ்சம் யோசித்து பாருங்கள். இது எவ்வளவு ஒரு கடினமான விஷயம்.

    மூன்றாவது, நான் பார்க்கும் ஒரு பிரச்சனை கடந்த மே மாதம் 5-ந்தேதி நீட் தேர்வு நடந்தது. அதில் சில குளறுபடிகள் நடந்ததாக செய்திகளில் பார்த்தோம், படித்தோம். அதன் பிறகு நீட் தேர்வு மீது உள்ள நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய் விட்டது. நாடு முழுக்க நீட் தேர்வே தேவையில்லை என்பதுதான் அந்த செய்திகள் மூலம் நான் புரிந்து கொண்ட விஷயங்கள்.

    சரி இதற்கு என்னதான் தீர்வு என்றால் நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு. நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரமாகவே இதை தீர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    சரி.. இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன என்றால் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதில் சிக்கல்கள் இருக்கிறது என்றால் ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.

    இப்போது இருக்கும் பொதுப் பட்டியலில் என்ன ஒரு பிரச்சனை என்றால் மாநில அரசுகளுக்கு என்ன தான் அதில் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதனால் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான ஒரு வேண்டுகோள்.

    ஒன்றிய அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர், பி.ஜி.ஐ. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.

    ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், இது என்னுடைய வேண்டுகோள்தான். இது நடக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் உடனே நடக்காது என்று எனக்கு தெரியும். அப்படியே நடந்தாலும் நடக்க விட மாட்டார்கள் என்றும் தெரியும்.

    எனவே இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய வேண்டுகோளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுதான் நீட் தேர்வு பற்றி என்னுடைய தனிப்பட்ட கருத்து. மற்றபடி இங்கு வந்திருக்கும் அனைவரும் ஜாலியாக படியுங்கள். மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரியது.

    வாய்ப்புகள் அந்த அளவுக்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால் ஒன்று இரண்டு வாய்ப்புகள் நழுவி விட்டாலும் வருத்தப்படாதீர்கள். அப்படியென்றால் கடவுள் உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை தருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அது என்ன என்று தேடி கண்டு பிடியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.

    இவ்வாறு விஜய் பேசினார்.

    விஜய்யிடம் பரிசு பெறுவதற்காக பெற்றோருடன் வந்த மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நுழைவு வாயிலில் நின்று வரவேற்று அனைவருக்கும் உணவு பொருட்களை வழங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வால் மாணவ -மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மை.
    • நீட் விலக்கு தான் இதற்கு ஒரே தீர்வு.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியதாவது:

    வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும், தவெக தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா... நண்பிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான பணிவான வணக்கங்கள்.

    இன்று முக்கியமான விஷயம் குறித்து பேசப்போகிறேன்.

    நீட்...

    நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவ -மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மை.

    நீட்டை 3 பிரச்சனையாக பார்க்கிறேன்.

    1. நீட் மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது.

    2. ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிராக பார்க்கிறேன்.

    3. நீட் தேர்வு முறைகேடால் அதன்மேல் இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. நீட் விலக்கு தான் இதற்கு ஒரே தீர்வு.

    நீட் விலக்கு கோரி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.

    இதற்கு நிரந்தர தீர்வாக, அந்த கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு வேளை சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு திருத்தி, சிறப்பு பொது பட்டியல் உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

    • திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.
    • மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.

    தமிழ்நாட்டின் 234 மாவட்டங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த முறை பல கட்டங்களாக இந்த விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரம் முதற்கட்ட விழா நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.

    இன்று நடைபெறும் விழாவில் 19 மாவட்ட மாணவர்களுக்கு விஜய் விருது வழங்க இருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்க விழா அரங்கிற்கு த.வெ.க. தலைவர் விஜய் வருகை புரிந்தார். ஆளப்போறான் தமிழன் பாடலுடன் விஜய்க்கு விழா அரங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அனைவரும் எழுந்து நின்றனர்.

    • கடந்த வாரம் முதற்கட்ட விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு விஜய் வருகை.

    தமிழ்நாட்டின் 234 மாவட்டங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த முறை பல கட்டங்களாக இந்த விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரம் முதற்கட்ட விழா நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.

    இன்று நடைபெறும் விழாவில் 19 மாவட்ட மாணவர்களுக்கு விஜய் விருது வழங்க இருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர். 

    ×