search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிசார்"

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் எச்.வசந்தகுமார் படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.
    • வர்த்தகப் பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா பஸ் நிலையம் முன்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவரும், மாநில வர்த்தகப் பிரிவு தலைவருமான எச். வசந்தகுமாரின் 2-ம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. அவரது படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வர்த்தகப் பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    நகர காங்கிரஸ் தலைவர் பட்சிராஜா வன்னியராஜ், மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் சசிநகர் முருகேசன், வட்டாரத் தலைவர்கள் பால.குருநாதன், முருகராஜ், மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயக்குமார், வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் ஆறுமுகம், ஆர்.டி.ஐ.மாநிலப் பொதுச்செயலாளர் தமிழ்ச் செல்வன், மாநிலச் செயலாளர் வசந்தம் சேதுராமன், முன்னாள் வட்டாரத் தலைவர்கள் அண்ணாத்துரை, ரமணன், ஐ.என்.டி.யூ.சி. தங்கமாரி, துள்ளுக்குட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×