search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவித்ரா கவுடா"

    • கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி செல்போனை போலீசார் தீவிரமாக தேடினர்.
    • ரேணுகா சாமி பயன்படுத்திய செல்போன் எண்ணிலிருந்து மற்றொரு சிம்கார்டு வாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா மற்றும் ரசிகர் மன்றத்தினர், கூலிப்படையினர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் நடிகை பவித்ரா கவுடா மற்றும் தர்ஷனுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை சிறப்பு விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.

    அதன்படி கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி செல்போனை போலீசார் தீவிரமாக தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கோர்ட் அனுமதியுடன் ரேணுகா சாமி பயன்படுத்திய செல்போன் எண்ணிலிருந்து மற்றொரு சிம்கார்டு வாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதில் ரேணுகா சாமி பயன்படுத்திய சமூக வலைதளங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி நடிகை பவித்ரா கவுடாவிற்கு 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச வார்த்தைகள் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியது தெரியவந்தது.

    இதையடுத்து பவித்ரா கவுடா அந்த கணக்கை முடக்கிய பின்பும் ரேணுகா சாமி போலி கணக்கை தொடங்கி மீண்டும் பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் பவித்ராவின் செல்போனையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கும் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

    • நடிகையும், தோழியுமான பவித்ரா கவுடாவுக்கு அருவறுக்கத்தக்க வகையிலான மெசேஜ்.
    • கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு உடலை மறைவான இடத்தில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா. நடிகையான பவித்ரா கவுடா இவருக்கு தோழியாவார். இவருக்கு தர்ஷனின் ரசிகரான ரேணுகாசுவாமி அருவெறுப்பான வகையில் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ரேணுகாசுவாமியை திட்டமிட்டு தர்ஷன் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தர்ஷன் மற்றும் மேலும் பலரை கைது செய்துள்ளனர்.

    இது தொடர்பாக சிறப்பு பொது வழக்கறிஞரான (SPP) பிரசன்னா குமார் தர்ஷன் தொடர்பான வழக்கின் அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் தரப்பில் காவலில் எடுக்க வேண்டுகோள் வைக்கவில்லை. இதனால் தர்ஷன் உள்பட பிரதோஷ், வினய், தன்ராஜ் ஆகிய நான்கு பேரை பரப்பன அக்ராஹர மத்திய சிறையில் ஜூலை 4-ந்தேதி வரை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜூலை 4-ந்தேதி நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அதுவரை சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    தர்ஷன் கடந்த 11-ந்தேதி 33 வயதான ரேனுகாசுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். தர்ஷன் 30 லட்சம் ரூபாய் கொடுத்து ரேனுகாசுவாமியை கொலை செய்து, அவரது உடலை அப்புறப்படுத்தவும், ஆதாரங்களை அழிக்கவும் சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சில குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    ரேணுகாசுவாமி மரக்கட்டைகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக உடல்பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 17 பேரை கைது செய்துள்ளனர்.

    ×