search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 பேர் கைது"

    உத்தரகாண்ட் மாநில எல்லையில் 7 கிராமங்களில் வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சீன பகுதிகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர். #Food #villages

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பிதோர்கர் மாவட்டத்தின் சில பகுதிகள் சீன எல்லையில் உள்ளன. இங்குள்ள தர்சுலா பகுதி பயாஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது மிகவும் உள்ளடங்கிய பகுதி.

    எனவே இப்பகுதியில் உள்ள பஞ்சி, கஞ்ச்சி கார்பயாங், குத்தி, நபால், நாபி மற்றும் ராங்காங் ஆகிய 7 கிராமங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை.

    உப்பு, சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இக்கிராமங்கள் சீன எல்லையில் இருப்பதால் பாதுகாப்பை காரணம் காட்டி முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல முடிவதில்லை. எனவே மேற்கண்ட 7 கிராமங்களில் வாழும் 400 குடும்பத்தினர் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சீன பகுதிகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர்.


    மேலும் தேவையான பொருட்களை மற்றொரு அண்டை நாடான நேபாளம் சென்றும் வாங்குகின்றனர். உத்தரகாண்ட் மாநில அரசு அங்குள்ள 2 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்குகிறது.

    அது போதுமானதாகவும் இல்லை. அதுவும் சரிவர கிடைப்பதில்லை. இதனால் சீனா மற்றும் நேபாள பகுதிகளுக்கு சென்று அத்தியாவசிய உணவு பொருட்களை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    சொந்த நாட்டிலேயே அனாதைகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எல்லையில் உள்ளடங்கி உள்ள கிராமங்களுக்கு ரேசன் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தாராளமாக கிடைக்க மத்திய- மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Food #villages

    உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் மனைவிக்கு அல்வா, மல்லிகை பூ பார்சல் அனுப்ப முயன்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். #DipakMisra #SupremeCourt
    விழுப்புரம்:

    ஆண், பெண் உறவு பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்புக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புகுழு செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட தலைவர்கள் கடலூர் தேவா, விழுப்புரம் பாலாஜி முருகன், புதுவை மாநில தலைவர் மஞ்சினி மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று மாலை விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு திரண்டனர்.



    அங்கு அவர்கள் ஆண், பெண் உறவு பற்றி தீர்ப்பு வழங்கிய தீபக்மிஸ்ராவின் மனைவிக்கு டெல்லியில் உள்ள அவரது முகவரிக்கு அனுப்புவதற்காக அல்வா மற்றும் மல்லிகை பூ ஆகியவற்றை பார்சல் செய்தனர்.

    பின்னர் அவர்கள் அந்த பார்சலை அனுப்ப தபால் நிலையத்துக்குள் சென்றனர். இதை அறிந்த விழுப்புரம் நகர போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பார்சல் அனுப்ப முயன்ற இந்து மக்கள் கட்சி மாநில அமைப்புக்குழு செயலாளர் ஆசைத்தம்பி, தேவா, பாலாஜி உள்பட நிர்வாகிகள் 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பார்சலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #DipakMisra #SupremeCourt
    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த குறும்படத்திற்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
    சென்னை:

    தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அ.உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான தரமான விளம்பர படங்கள், தயாரிப்பாளர்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட பயிற்சி மையம் மற்றும் தனிநபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. குறும்படங்கள் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை, தரைதளத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வரும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    குறும்படங்கள் சுற்றுச் சூழல் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நிலம், காற்று, நீர், வனம் மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ் மொழியில், தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குறும்படங்களில் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் வழங்கப்படும். மேலும், 2-வது பரிசாக ரு.6 லட்சமும், 3-வது பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-2433 6421 என்ற தொலைப்பேசி எண்ணிலும், tndoe@tn.nic.in என்ற மின்அஞ்சல் முகவரியிலும், www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.   #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியான தகவலை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது. #RajivCaseConvicts #TNRajBhavan
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிக்குமார் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    பிறகு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

    இதற்கிடையே தண்டனை பெற்ற 7 பேரும் கடந்த 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதை சுட்டிக்காட்டி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஜனாதிபதி தங்களது கருணை மனுவை தாமதமாக பரிசீலனை செய்ததை காரணம் காண்பித்து அவர்கள் விடுதலை கோரி இருந்தனர்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு 7 பேர் விடுதலையில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. உடனே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, “ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை” செய்யப்போவதாக அறிவித்தார்.

    தமிழக சட்டசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி அவர் அனுப்பி இருந்தார். ஆனால் மத்திய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. நடத்தியதால் கைதிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.



    என்றாலும் தமிழக அரசு தனது நிலையில் இருந்து இறங்கவில்லை. 7 பேரையும் விடுதலை செய்ய அதிகாரம் இருப்பதாக தெரிவித்தது. இந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி தீர்ப்பு அளித்த சுப்ரீம்கோர்ட்டு, “7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம்” என்று அறிவித்தது.

    இதையடுத்து தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

    பின்னர் அந்த பரிந்துரை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இதற்கிடையே நேற்று இந்த விவகாரத்தில் பரபரப்பான புதிய தகவல் ஒன்று வெளியானது. 7 பேரை விடுதலை செய்ய கோரும் அமைச்சரவை பரிந்துரையை மத்திய உள்துறைக்கு கவர்னர் அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

    மத்திய உள்துறை அதுபற்றி ஆலோசித்து வருவதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டு இருந்தது. எனவே 7 பேர் விடுதலையில் புதிய சிக்கல்கள் எழுந்திருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த பரபரப்பு தகவலை இன்று (சனிக்கிழமை) கவர்னர் மாளிகை மறுத்தது. இது தொடர்பாக கவர்னர் மாளிகை இணை இயக்குனர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்த கைதிகளை விடுதலை செய்யக்கோரும் தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்திருப்பதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இதை அடிப்படையாக கொண்டு சில தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விவகாரத்தில் மத்திய உள்துறைக்கு கவர்னர் மாளிகை சார்பில் எந்த ஒரு குறிப்பும் அனுப்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வழக்கு மிகவும் முரண்பாடான ஒன்று. இதில் சட்ட ஆய்வு, நிர்வாக ஆய்வு, அரசியல் சாசன ஆய்வு ஆகியவை அடங்கியுள்ளன.

    இது தொடர்பான ஆவணங்கள், அது தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரசின் பரிந்துரை அனைத்தும் நேற்றுதான் (14.9.2018) கவர்னர் மாளிகைக்கு வந்துள்ளன. இந்த பரிந்துரை மீதான ஆய்வை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்.

    இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனைகள் உள்பட அனைத்து ஆலோசனைகளும் தேவைக்கேற்ப பெறப்படும். அதன் அடிப்படையில் சட்டப்படி பாரபட்சமின்றி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தமிழக அரசின் பரிந்துரை தற்போது கவர்னர் பன்வாரிலாலின் ஆலோசனையில் இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் மத்திய உள்துறைக்கு அதை அனுப்புவாரா? அல்லது சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி தாமாகவே முடிவை அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #RajivCaseConvicts #TNRajBhavan
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்துள்ளார். #BanwarilalPurohith #RajivCaseConvicts
    சென்னை:

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக முடிவெடுக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    7 பேர் விடுதலை விவகாரம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. #Perarivalan #RajivGandhiCase #banwarilalpurohit
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    பிறகு அவர்களது தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.கடந்த 27 ஆண்டுகளாக இவர்கள் ஜெயிலில் உள்ளனர்.

    இவர்கள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசே இது தொடர்பான முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதைத்தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

    அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். அதோடு 3 நாட்களில் மத்திய அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் 7 பேரையும் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்போவதாக அறிவித்தார்.

    தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து இருப்பதால், இதில் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு கூறியது.

    இதனால் இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே சட்ட ரீதியில் மோதல் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

    கடந்த 6-ந் தேதி இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வெளியிட்டது. ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து இது பற்றி ஆலோசிக்க நேற்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த பரிந்துரை நேற்றே உடனடியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த பரிந்துரை கவர்னர் கையில் உள்ளது.

    கவர்னர் இந்த பிரச்சினையில் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரவை முடிவு செய்து பரிந்துரைப்பதை கவர்னர் ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உள்ளது. அமைச்சரவை முடிவை கவர்னர் நிராகரிக்க முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    எனவே கவர்னர் தனது முடிவை எப்போது அறிவிப்பார் என்ற ஆவல் கலந்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. இந்த வி‌ஷயத்தில் கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து தனது நிலைப்பாட்டை தெரிவிப்பாரா? அல்லது மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே கேட்டு தலையாட்டுவாரா என்ற கேள்விக்குறி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் 4 விதமான முடிவுகளில் ஏதாவது ஒன்றை எடுக்க வாய்ப்பு உள்ளது. அந்த 4 விதமான முடிவுகள் வருமாறு:-

    1. தமிழக அமைச்சரவை பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொண்டு 7 பேரை விடுதலை செய்ய உடனே உத்தரவிடலாம்.

    2. அமைச்சரவை பரிந்துரை மீது கவர்னர் முடிவு எடுக்க எந்த கால நிர்ணயமும் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. எனவே கவர்னர் பன்வாரிலால் 7 பேர் விடுதலை பரிந்துரையை சிறிது நாட்கள் கிடப்பில் போடலாம். அவர் மேலும் கால தாமதமும் செய்யலாம்.

    3. முன்னாள் பிரதமரை படுகொலை செய்துள்ள மிக முக்கியமான வி‌ஷயம் என்பதால் 7 பேரை விடுதலை செய்வது பற்றி மத்திய அரசிடம் கவர்னர் யோசனை கேட்கலாம்.



    4. தமிழக அமைச்சரவை எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய கவர்னர் உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது.

    இந்த 4 விதமான முடிவுகளில், எந்த முடிவை எடுப்பது என்பது பற்றி கவர்னர் பன்வாரிலால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே கவர்னர் முடிவு விரைவில் தெரியும் என்று கூறப்படுகிறது. #Perarivalan #RajivGandhiCase
    நேபாளம் நாட்டின் காத்மாண்டு நகரில் இன்று 7 பேருடன் புறப்பட்டு சென்ற தனியார் ஹெலிகாப்டர் காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விபத்தில் அனைவரும் இறந்ததாக அஞ்சப்படுகிறது. #Choppercrashes #NepalChoppercrash
    காத்மாண்டு:

    நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து ஆல்ட்டிடியூட் ஏர் என்னும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் இன்று காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றது.

    சுமார் 20 மைல் தூரம் கடந்து சென்றதும் காத்மாண்டு விமான நிலையத்தில் உள்ள தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பை அந்த ஹெலிகாப்டர் இழந்தது.



    இந்நிலையில், தாடிங் - நுவக்கோட் மாவட்டங்களுக்கு இடையிலான காட்டுப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

    கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5500 அடி உயரத்தில் உள்ள அந்த காட்டுப்பகுதிக்கு மீட்பு குழுவினர் செல்ல முடியாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது.

    அந்த ஹெலிகாப்டரில் ஒரு நோயாளியும் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ள நிலையில் அதில் சென்றவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Choppercrashes #NepalChoppercrash
    காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு 7 பேர் இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அழைப்பாளர்களாக இல்லாதவர்கள் மற்றும் ஏற்கனவே கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முரளிதரன், சீனிவாசமூர்த்தி ஆகியவர்களோடு சேர்ந்துகொண்டு கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தும், சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையிலும், இன்றைய கூட்டத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்கின்ற வகையிலும் செயல்பட்ட காரணத்தினால் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள். நீக்கப்பட்டவர்களின் பெயர் வருமாறு:-

    முரளிதரன், சீனிவாசமூர்த்தி, கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் ஜான்சன், ஏ.வி.எம்.ஷெரிப், பொன் மனோகரன், திருவொற்றியூர் பாஸ்கர்.

    இவர்களோடு கட்சிக்காரர்கள் கட்சி சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Thirunavukkarasar
    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இன்று 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.#Earthquake
    காரகாஸ்:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலா. வெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று திடீரென சக்திவாய்ந்த 
    நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தை வெனிசுலா மற்றும் கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதும் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும், வீடுகளில் இருந்தவர்களும் அலறியடித்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். #Earthquake
    மத்தியப்பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் 14 வயது குற்றவாளிக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #14yroldboy #7hrtrial
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம், கட்டியா கிராமத்தில் கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று சில குழந்தைகளுடன் ஒரு சிறுமி தெருவில் விளையாடி கொண்டிருந்ததை கண்ட 14 வயது சிறுவன், அந்த பெண்ணை தனது வீட்டுக்குள் அழைத்து சென்று கற்பழித்து விட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த சம்பவத்துக்கு பின்னர் தலைமறைவாகிவிட்ட சிறுவனை தேடிவந்த உஜ்ஜைன்  மாவட்ட போலீசார் அருகாமையில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர்.

    இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட சிறுவன் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் இளம்சிறார் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களும் குற்றப்பத்திரிகையும் நேற்று காலை 10.45 மணியளவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை நேற்றிரவு 6 மணிவரை தொடர்ந்து விசாரித்த நீதிபதி திரிப்தி பான்டே, ‘நாளுக்கு நாள் சிறுமியர்களுக்கு எதிரான கற்பழிப்புகளும், பாலியல் பலாத்காரங்களும் பெருகிகொண்டே வரும் நிலையில் குற்றவாளிக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறேன்’ என தீர்ப்பளித்தார்.

    மத்தியப்பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் குற்றவாளி இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கடந்த 2012-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பின்னர், வெறும் 7 மணி நேரத்துக்குள் வெகு விரைவாக இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதியை இவ்வழக்கில் ஆஜராகி வாதாடிய அரசுதரப்பு வக்கீல் தீபேந்திரா மல்லு பாராட்டியுள்ளார். #14yroldboy #7hrtrial 
    மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்சவுர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 7 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #2mengetdeathsentence #Mandsaurminorgirl
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்சவுர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து செல்லவரும் தந்தைக்காக 7 வயது சிறுமி காத்திருந்தாள்.

    அப்போது, அங்கு வந்த இர்பான்(எ)பய்யு(20), ஆசிப்(24) ஆகியோர் அந்த சிறுமியின் வாயைப்பொத்தி அங்கிருந்து கடத்திச் சென்றனர். அருகாமையில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமியை கற்பழித்தனர். மேலும், கழுத்தை அறுத்து அவளை கொல்லவும் முயன்றனர்.

    உயிருக்கு போராடி, கதறிய சிறுமியின் கூச்சலை கேட்டு அப்பகுதியை கடந்துசென்ற சிலர் உதவிக்கு ஓடிவந்தனர். இதை கண்டதும் அந்த இரு காமுகர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிறப்புறுப்பு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் படுகாயங்களுடன் கிடந்த சிறுமியை இந்தூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இன்னும் அவள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவ்வழக்கை விரைந்து விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிஷா குப்தா, குற்றவாளிகள் இருவருக்கும் (சமீபத்தில் அமலுக்கு வந்த 12 வயதுக்கும் குறைவான சிறார்-சிறுமியர் கற்பழிப்பு தண்டனை சட்டத்தின்கீழ்) மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். #2mengetdeathsentence  #Mandsaurminorgirl   
    அரசு பஸ் கண்டக்டரை கொலை செய்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    மதுரை:

    மதுரை செக்கானூரணியை சேர்ந்தவர் விருமாண்டி (வயது 53). இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்திருந்தார்.

    அந்த சமயத்தில் இவர் அதே பகுதியை சேர்ந்தவரும், அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தவருமான பிரபாகரன் (42) என்பவரிடம் கடந்த 10.11.2017 அன்று பணம் கேட்டு மிரட்டி உள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த விருமாண்டி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபாகரனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன் இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து செக்கானூரணி போலீசார் வழக்குபதிவு செய்து விருமாண்டியை கைது செய்தனர்.

    இந்த வழக்கு மதுரை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், விருமாண்டிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார். 
    ×