search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேணுகாசுவாமி கொலை வழக்கு"

    • தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவெறுப்பான மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.
    • இதனால் தர்ஷன் திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.

    கன்னடத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு மோசமான வகையில் மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.

    போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 15 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தர்ஷனின் மனைவி விஜய லட்சுமி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி.தயானந்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதனால் பவித்ரா கவுடாவை தர்ஷனின் மனைவி எனக் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில் விஜயலட்சுமிக்கு கூறியிருப்பதாவது:-

    பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நீங்கள் தவறாக அறிக்கையை கொடுத்துள்ளீர்கள். பவித்ரா தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த தவறு கர்நாடகா உள்துறை மந்திரி மற்றும் தேசிய மீடியாக்கள் தொடர்ந்து செய்தது. ரேணுகாசுவாமி கொலை வழக்கில் தர்ஷன் தம்பதி கைது என கூறப்பட்டு வருகிறது.

    இது எதிர்காலத்தில் தனக்கும் தன்னுடைய மகன் வினீஷ் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பவித்ரா கவுடா சஞ்சய் சிங்கை திருமணம் செய்துள்ளார். அவர்களுடைய மகள் அவருடன் இருக்கிறார். இந்த உண்மைகள் போலீஸ் பதிவுகளில் துல்லியமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டம் அதன் கடமையை செய்யும் என நம்புகிறேன். பவித்ரா என்னுடைய கணவரின் தோழி என்பதுதான் உண்மை. அவர் மனைவி அல்ல. நான் மட்டும்தான் சட்டப்பூர்வமாக தர்ஷனை திருமணம் செய்து கொண்டேன். எங்களுடைய திருமணம் 2023-ம் ஆண்டு மே மாதம் தரம்சாலாவில் நடைபெற்றது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • நடிகையும், தோழியுமான பவித்ரா கவுடாவுக்கு அருவறுக்கத்தக்க வகையிலான மெசேஜ்.
    • கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு உடலை மறைவான இடத்தில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா. நடிகையான பவித்ரா கவுடா இவருக்கு தோழியாவார். இவருக்கு தர்ஷனின் ரசிகரான ரேணுகாசுவாமி அருவெறுப்பான வகையில் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ரேணுகாசுவாமியை திட்டமிட்டு தர்ஷன் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தர்ஷன் மற்றும் மேலும் பலரை கைது செய்துள்ளனர்.

    இது தொடர்பாக சிறப்பு பொது வழக்கறிஞரான (SPP) பிரசன்னா குமார் தர்ஷன் தொடர்பான வழக்கின் அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் தரப்பில் காவலில் எடுக்க வேண்டுகோள் வைக்கவில்லை. இதனால் தர்ஷன் உள்பட பிரதோஷ், வினய், தன்ராஜ் ஆகிய நான்கு பேரை பரப்பன அக்ராஹர மத்திய சிறையில் ஜூலை 4-ந்தேதி வரை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜூலை 4-ந்தேதி நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அதுவரை சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    தர்ஷன் கடந்த 11-ந்தேதி 33 வயதான ரேனுகாசுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். தர்ஷன் 30 லட்சம் ரூபாய் கொடுத்து ரேனுகாசுவாமியை கொலை செய்து, அவரது உடலை அப்புறப்படுத்தவும், ஆதாரங்களை அழிக்கவும் சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சில குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    ரேணுகாசுவாமி மரக்கட்டைகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக உடல்பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 17 பேரை கைது செய்துள்ளனர்.

    ×