search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹரிஸ் ராஃப்"

    • இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன்.
    • பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ரசிகர் ஒருவருடன் பாகிஸ்தான் வீரரான ஹரிஸ் ரவுப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ரசிகரை தாக்க முயல்வது போன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில் எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன் என ஹரிஸ் ராஃப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். ஆனால் இப்போது வீடியோ வெளியானதால், நிலைமையை நிவர்த்தி செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். பொது நபர்களாக, பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன். மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் தொழில்களைப் பொருட்படுத்தாமல் மரியாதை காட்டுவது முக்கியம்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    புளோரிடாவில் உள்ள ஒரு நகரத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் தனது மனைவியுடன் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒருவர் ஹரிஸ் ராஃப்பை பார்த்து ஏதோ சொல்ல உடனே கோபமடைந்த ராஃப், அந்த நபரை தாக்குவதற்காக செருப்பை கூட கழற்றி விட்டு ஓடினார்.

    இதனை பார்த்த அவரது மனைவி ஹரிசை சமாதானம் படுத்த முயற்சித்தார். ஆனால் ஹரிஸ் அந்த நபரிடம் சென்று வார்த்தை போரில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஹரிஸ், டிரோல் செய்தவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டு இருந்தார். உடனே அந்த நபர் நான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என பதிலளித்தார்.

    வாக்குவாதம் தொடர்ந்ததால் ரஃப்பின் மனைவி அவரை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் ஹரிஸ் அந்த நபருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    • இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
    • 4 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஓவல்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் 4-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான அசாம் கான் மீது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஸ் ராஃப் கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த போட்டியில் 9-வது ஓவரை ஹரிஸ் ராஃப் வீசினார். இதனை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜக்ஸ் எதிர் கொண்டு ஆடினார். முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் திணறினார். 3-வது பந்தை அதிரடியாக விளையாடினார். ஆனால் பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. இதனால் ஹரிஸ் ராஃப் விக்கெட் என கொண்டாடினார். ஆனால் விக்கெட் கீப்பராக நின்ற அசாம் கான் அந்த எளிதான கேட்ச்சை தவற விட்டார். இதனை சற்று எதிர்பார்காத ஹரிஸ் கோபத்தில் கத்தினார்.

    இதற்கு ரசிகர்கள் அசாம் கானை ஏன் அணியில் வைத்துள்ளீர்கள் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 2 போட்டியிலும் அசாம் கான் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×