search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மகாலட்சுமியின்  அருட் பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மகாலட்சுமியின் அருட் பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

    • எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும், தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ, அங்கு நான் இருப்பேன்" என்றாள்.
    • எங்கு கோபூஜை நடத்தப்படுகின்றதோ அங்கு நான் எப்போதும் இருப்பேன்" என்றாள்.

    மகாலட்சுமியை வணங்கிய பக்தர்கள் "அன்னையே, தங்களை சிரமமின்றி தரிசித்து தங்கள் அருளைப்பெற வழி என்ன?

    பொதுவாக தாங்கள் இருக்கும் இடம் எது," என கேட்டனர்.

    மகாலட்சுமி கூறுகையில், எந்த இல்லத்தில் அதிகாலையில் விழித்தெழுந்து, நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டு

    என்னுடைய நாமங்களைச் சொல்லி வழிபடுகின்றனரோ, எந்த இல்லத்தின் முன் அதிகாலையில் பசுஞ்சாணம் தெளித்து

    தரையை சுத்தம் செய்து கோலம் போட்டு திருவிளக்கு ஏற்றி வைக்கிறார்களோ, எந்த குடும்பத்தில் கணவனும் மனைவியும்

    நியம நிஷ்டைகளை முறைப்படி அனுஷ்டித்து தங்களுக்குள் சிறு மனவேறுபாடும் இல்லாமல் என்னை வழிபடுகிறார்களோ,

    எங்கு ஆசாரம் குறை இல்லாமல் கடைப்பிடிக்கப்படுகிறதோ, எங்கு தர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ,

    எங்கு பூஜை, நடக்கின்றனவோ, எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும், தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ,

    எங்கு கோபூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அங்கு நான் எப்போதும் இருப்பேன்" என்றாள்.

    Next Story
    ×