ஆன்மிக களஞ்சியம்

திருத்தணியில் தங்கதேர் உலா

Published On 2024-06-06 11:32 GMT   |   Update On 2024-06-06 11:32 GMT
திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.

திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.

அன்று காலை சுமார் 5 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்துச் செல்வார்கள்.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.

தொடர்ந்து காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.

இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும், இரவு, 7.30 மணிக்கு தங்கத்தேரிலும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Tags:    

Similar News