ஆன்மிக களஞ்சியம்

குழப்ப நிலை மாறி வெற்றி உண்டாகும்

Published On 2024-08-11 09:31 GMT   |   Update On 2024-08-11 09:31 GMT
  • குரு பார்க்க கோடி நன்மை என் பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.
  • இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும்.

திட்டை குருபகவானை வியாழக் கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து தரிசியுங்கள்.

குருவின் பார்வை நம் மீது பட்டாலே போதும்... குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம்.

நல்ல படிப்பிருந்தும் வேலை இல்லை என்று வருந்துவோர், அதிக சம்பளம் இல்லையே என்று கலங்குவோர், உரிய வயது வந்தும் திருமணம் இன்னும் கைகூடவில்லையே என்று கண்ணீர் விடுபவர்கள், திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து, தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கும் குரு பகவானை வணங்கி வழிபடுங்கள்.

தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

குரு பார்க்க கோடி நன்மை என் பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும். மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருளுவார் குரு பகவான்.

Tags:    

Similar News