உள்ளூர் செய்திகள் (District)

தஞ்சையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.

5 வாக்குச் சாவடிகள் மறு சீரமைப்பு

Published On 2022-09-22 10:52 GMT   |   Update On 2022-09-22 10:52 GMT
  • 5 வாக்குச் சாவடிகள் மறு சீரமைப்பு செய்யப்ப டுகின்றன.
  • இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாா் செய்து இந்திய தோ்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகள் பகுப்பாய்வு செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஊரகப்பகுதி மற்றும் நகா்ப்புறத்தில் 1,500 வாக்காளா்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு செய்து வாக்குச் சாவடிகள் பட்டியல் வெளியிட இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, வாக்குச்சாவடி மறுசீரமைப்புப் பணிமே ற்கொ ள்ளப்பட்டுதற்போது இறுதியாக வெளியி டப்பட்ட வரைவு மறுசீரமை க்கப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியலின் மீது அங்கீகரிக்க ப்பட்ட அரசியல் கட்சியினரிடமிருந்து கருத்துகள் கோரப்பட்டன. இதைத்தொடா்ந்து கலந்தா லோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

பாபநாசம் தொகுதியில் 59, 60, திருவையாறு தொகுதியில் 148, 149, தஞ்சாவூா் தொகுதியில் 292 ஆகிய பாகங்களில் உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கையின் அடிப்ப டையில் பிரிவுகள் சீரமைக்க ப்பட்டு ஒழுங்கமை க்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 வாக்குச் சாவடிகள் மறு சீரமைப்பு செய்யப்ப டுகின்றன.

இதேபோல, பாபநாசம் தொகுதியில் 1, 2, 168, 226, 229, தஞ்சாவூா் தொகுதியில் 103, 104, பேராவூரணி தொகுதியில் 111, 147 ஆகிய பாகங்களில் வாக்குச் சாவடிகளின் அமைவிடங்கள் மாற்றிய மைக்கப்பட்டுள்ளன.

மேலும், பாபநாசம் தொகுதியில் 3, 14, 29 ஆகிய பாகங்களில் கட்டடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் மறுசீரமை க்கப்பட்டு, தற்போது 8 தொகுதிகளிலும் 2,305 சாவடிகள் உள்ளன. மறுசீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகள் இறுதிப்படுத்தப்பட்டு, இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாா் செய்து இந்திய தோ்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், வட்டாட்சியர் (தேர்தல் )ராமலிங்கம், தி.மு.க. (மாவட்ட பொருளாளர்) அண்ணா, ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன், அ.தி.மு.க. காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் (பொருளாளர்) பழனியப்பன், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் ஜெய் சதீஷ், மாவட்ட செயலாளர் அமிர்த்அரசன், இந்திய கம்யூனிஸ்ட் (செயலாளர்) முத்து உத்துராபதி, முத்துக்குமரன், (செயலாளர்) மு.ஆ.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) குருசாமி, மக்கள் விடுதலை (மாவட்டச் செயலாளர்) அருணாச்சலம், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News