உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் அருகே கூலி தொழிலாளி தற்கொலை
- ஆறுமுகச்சாமியின் மனைவி இரு குழந்தைகளுடன் அவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
- ஆறுமுகசாமியை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் கீழ காலனி கீழ தெருவை சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி (வயது 48), கூலி தொழி லாளி. இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட தாகவும், அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் ஆறுமுகச் சாமியை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது அம்மாவுடன் வசித்து வந்த ஆறுமுகசாமியை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை அவரது உறவினர்கள் மீட்டு தென்காசி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.