தமிழரசன்
பண்ருட்டி அருகே காதலியை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
கடலூர்:
பண்ருட்டி அடுத்த குழந்தைக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவரது மகன் தமிழரசன்(29).பி.காம் பட்டதாரி. இவர், குறிஞ்சிப்பாடியில் உள்ள திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் போது நெய்வேலி பெரியாக்குறிச்சி பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அப் பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் தமிழரசன் அப் பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து அப் பெண் பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தமிழரசனுக்கும் அவரது உறவினர் ெபண்ணுக்கும் திருவந்தி புரம் கோவிலில் திருமணம் நடைபெற்றதாகவும் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறி இருந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்துதமிழரசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.