உள்ளூர் செய்திகள்

அத்திப்பட்டு புதுநகரில் புறக்காவல் நிலையத்தை ஆவடி கமிஷனர் திறந்து வைத்தார்

Published On 2023-02-25 20:16 IST   |   Update On 2023-02-25 20:16:00 IST
  • திறக்கப்படாமல் இருந்த காவலர்களின் குடியிருப்பை ஆவடி ஆணையர் திறந்து வைத்தார்.
  • பொதுமக்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என ஆணையர் பேச்சு

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடசென்னை அனல் மின் நிலையம் காமராஜர் துறைமுகம் அதானி துறைமுகம் மற்றும் எல் அண்ட் டி துறைமுகம் மற்றும் சுவாரி சிமெண்ட் உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இப்பகுதியில் அதிக குற்ற செயல்கள், போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் அவைகளை தடுக்கும் பொருட்டு அத்திப்பட்டு தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் கதிர்வேல், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் புறக்காவல் நிலையத்தை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் துணை ஆணையர் மணிவண்ணன் மற்றும் உதவி ஆணையர் முருகேசன் மலைச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் காட்டூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவலர்களுக்கு வெகு காலங்களுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த காவலர்களின் குடியிருப்பை ஆவடி ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் திறந்து வைத்து, 12 காவலர்களுக்கு வீடுகளுக்கான சாவிகளை ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'புறக்காவல் நிலையத்தின் மூலமாக போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். நெடுஞ்சாலைகளில் சில மாதங்களாக பொது மக்களுக்கு சாலை ஓரங்களில் நின்று பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர். இதனை சமூக அமைப்புகளின் மூலமாகத்தான் இணைந்து தடுக்க முடியும். கடந்த இரண்டு மாதத்தில் ஆவடி காவல் சரகத்தில் 90 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் ராஜேஷ், காவல் ஆய்வாளர்கள் டில்லி பாபு, சிரஞ்சீவி, பன்னீர்செல்வம் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News