உள்ளூர் செய்திகள்

நெல் சேமிப்பு கிடங்கினை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

அதியமான்கோட்டை திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கினை கலெக்டர் ஆய்வு

Published On 2022-09-04 13:55 IST   |   Update On 2022-09-04 13:55:00 IST
  • நெல் அரவை செய்ய அனுமதி பெற்றுள்ள அரிசி ஆலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, வெற்றிலைக்காரன் பாளையத்தில் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு டெல்டா மாவட்டங்களிலிருந்து வரபெற்றுள்ள நெல் மூட்டைகளை தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் அரவை செய்ய அனுமதி பெற்றுள்ள அரிசி ஆலைகளுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு டெல்டா மாவட்டங்களிலிருந்து நெல் மூட்டைகள் வரபெற்று தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் அரவை செய்ய அனுமதி பெற்றுள்ள அரிசி ஆலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, டெல்டா மாவட்டங்களிலிருந்து தருமபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு வரபெற்றுள்ள நெல் மூட்டைகள் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, வெற்றிலைக்காரன் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் சுமார் 13,200 மெட்ரிக் டன் நெல்லும் மற்றும் தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், கடகத்தூர் கிராமம், பச்சனம்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 5,300 மெட்ரிக் டன் நெல்லும் இருப்பு வைக்கப்பட்டு நவீன பாலித்தீன் தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த நெல் மூட்டைகள் நெல் அரவைக்காக தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் அரவை செய்ய அனுமதி பெற்றுள்ள அரிசி ஆலைகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் சாந்தி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, வெற்றிலைக்காரன் பாளையத்தில் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு டெல்டா மாவட்டங்களிலிருந்து வரபெற்றுள்ள நெல் மூட்டைகளை தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் அரவைக்கு அனுமதி பெற்றுள்ள அரிசி ஆலைகளுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இந்த நெல் மூட்டைகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் வைத்து தொடர்ந்து பாதுகாத்து, பராமரித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தருமபுரி மண்டல மேலாளர்சரவணன், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர்பெருமாள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News