உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

Published On 2023-10-18 11:47 IST   |   Update On 2023-10-18 11:47:00 IST
  • சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி புதுச்சேரி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது.
  • ஆத்திரம் அடைந்த கதிரேசன் மாமல்லபுரத்தில் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

மாமல்லபுரம்:

சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி புதுச்சேரி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது திருவான்மியூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் குடும்பத்துடன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதுவது போல் சென்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கதிரேசன் மாமல்லபுரத்தில் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் பஸ்சின் கண்ணாடியையும் கல்வீசி நொறுக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News