உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் முகாமில் 120 மனுக்கள் மீது உடனடி தீர்வு

Published On 2023-05-18 14:49 IST   |   Update On 2023-05-18 14:49:00 IST
  • போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
  • மீதமுள்ள 9 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் தருமபுரியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நிலத்தகராறு, சொத்து தகராறு, பொது வழி பிரச்சனை, குடும்பத் தகராறு உள்ளிட்ட மொத்தம் 129 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின் போது மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் 120 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 9 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமச்சந்திரன், சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, நவாஸ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News