உள்ளூர் செய்திகள் (District)

சாதனை படைத்த மாணவ, மாணவிகள்.

பள்ளிகளுக்கு இடையேலான போட்டி- டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-09-01 09:44 GMT   |   Update On 2022-09-01 09:44 GMT
  • போட்டிகளில் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் சிறப்பாக பங்கு கொண்டு பல பரிசுகளை வென்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
  • வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிவதிப்ஜினேஷ் ராம் பரிசுகளை வழங்கினர்.

தென்காசி:

செங்கோட்டை டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் சுரண்டை எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் நடத்திய தென்காசி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கலை இலக்கிய போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

கலை, இலக்கியம், நடனம், நாடகம், பேச்சுப்போட்டி (தமிழ், ஆங்கிலம்) போன்ற பல விதமான போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் சிறப்பாக பங்கு கொண்டு பல பரிசுகளை வென்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி, தென்காசி மாவட்ட அளவில் சாம்பியன் பட்டம் வென்று 2-ம் இடம் பெற்று சாதனை புரிந்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எஸ். ஆர் ஸ்கூல் ஆப் எக்செலன்ஸ் பள்ளி செயலாளர் சிவதிப்ஜினேஷ் ராம் பரிசுகளை வழங்கினர். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யதுஅலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் வாழ்த்துக்களை கூறி பாராட்டினர்.

Tags:    

Similar News