உள்ளூர் செய்திகள் (District)

ஜோணி

இரணியல் அருகே கேபிள் ஆபரேட்டர் விபத்தில் பலி

Published On 2023-01-17 09:19 GMT   |   Update On 2023-01-17 09:19 GMT
  • உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
  • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

இரணியல் அருகே காஞ்சிரவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோணி (வயது 48), கேபிள் தொழில் செய்து வருகிறார்.

இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பண்ணிக்கோடு ரேஷன் கடை பகுதியில் வீட்டிற்கு திரும்புவதற்காக சிக்னல் போட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிளை திரும்பினார்.அப்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ஜோணி நிலை தடுமாறி மோட்டார் சைக் கிளிலிருந்து தவறி கீழே விழுந்து படுகா யம் அடைந்தார். அவரை சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும் சிகிச்சை பலனின்றி ஜோணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இரணியல் போலீசில் அவரது தம்பி விஜயகுமார் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணி சாக்கியன்கோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (19) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பலியான ஜோணியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர்.

Tags:    

Similar News