உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் 7-ந்தேதி தொடங்குகிறார் - ராகுல்காந்தி பாதயாத்திரை ஏற்பாடு குறித்து மாநில நிர்வாகிகள் ஆய்வு

Published On 2022-08-10 10:10 GMT   |   Update On 2022-08-10 10:10 GMT
  • கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார்.
  • ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர்

நாகர்கோவில் :

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் வகையில் ராகுல் காந்தி 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார். செப்டம்பர் 7-ம் தேதி நடை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்குகிறார். கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு செல்லும் அவர் நாடு முழுவதும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார் கள். இதையடுத்து இன்று காலை அகில இந்திய செயலாளர் ஸ்ரீவள்ள பிரசாத், தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி., செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர். அதற்காக என்னென்ன முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News