உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத உடல் அடக்கம்

Published On 2023-03-23 12:58 IST   |   Update On 2023-03-23 12:58:00 IST
  • அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது
  • கடம்பர் கோயிலில் அன்னதான உணவை உண்டு வாழ்ந்தவர்

கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர்கோவில் முன் பகுதியில், 10க்கும் மேற்பட்ட முதியவர்கள், கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் உணவை வாங்கி உட் கொண்டுவிட்டு, கோவில் அருகில் திறந்த வெளி மண்டபத்தில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த திறந்த வெளி அரங்கத்தில், அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் இறந்து கிடந்தார். பொது மக்கள் கொடுத்த தகவலின் படி, கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் குளித்தலை போலீசில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, போலீசார், மற்றும் கிராம உதவியாளர்கள் குமரேசன், ரத்தினசாமி, நகராட்சி சுகாதார பணியாளர்கள் முதியவரின் உடலை மீட்டு காவிரி ஆற்று படுகையில் அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News