உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டுப் பயிற்சி

Published On 2022-11-27 15:04 IST   |   Update On 2022-11-27 15:04:00 IST
  • தொல்லியல் மற்றும் கல்வெட்டுப் பயிற்சியை அளித்தனர்.
  • அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை பற்றியும், படங்களை காட்டி விளக்கம் அளித்தார்.

கிருஷ்ணகிரி,

உலக மரபு வாரத்தை யொட்டி, தமிழக தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் தொல்லியல் மற்றும் கல்வெட்டுப் பயிற்சியை அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வு குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி அனைவரையும் வர வேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், பழமையான பொருட்களை பாதுகாப்பது குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்து ரைக்க வேண்டும். மாணவர்களை நேரடியாக கள ஆய்வுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்க ளுக்கு வரலாற்றின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதையல் என்ற பெயரில் வரலாற்றுச் சின்னங்களை யாரும் சிதைக்கக்கூடாது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

இப்பயிற்சியில் ஆசிரியர்க ளுக்கு கல்வெட்டை எவ்வாறு படியெடுத்து படிப்பது என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பாறை ஓவியங்கள், தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பற்றி அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் விளக்கிக் கூறினார்.

தொல்லியல் துறை அலுவலர் பரந்தாமன், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொல்லியல் களங்கள் பற்றியும், கல்வட்டம், கற்திட்டை, கற்பதுகை பற்றியும், அகழ்வாய்வு பற்றியும், அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை பற்றியும், படங்களை காட்டி விளக்கம் அளித்தார்.

ஊரில் உள்ள பழங்கால மரபுசார் பொருட்களையும், நினைவுச் செல்வங்களையும், பாதுகாக்க வேண்டும் என்றும், அவற்றினை மூடநம்பிக்கையால் அளிக்கக் கூடாது எனவும் வரலாற்று ஆய்வு குழுத் தலைவர் நாராயணமூர்த்தி கூறினார். இந்த பயிற்சியின் போது நகர்மன்ற உறுப்பினர் பாலாஜி, அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News