உள்ளூர் செய்திகள்

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 2 பெண்கள் குழந்தைகளுடன் மாயம்

Published On 2023-05-15 06:47 GMT   |   Update On 2023-05-15 06:47 GMT
  • கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 2 பெண்கள் குழந்தைகளுடன் மாயமாகினர்.
  • மகளுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.

திருமங்கலம்

திருமங்கலம் கற்பகம் நகரை சேர்ந்தவர் மாயண்டி. இவரது மகள் ரோஜா (வயது33). இவர் தனது கணவர் மணி என்பவருடன் 10 ஆண்டுகளாக கோயம்புத்தூரில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரோஜா சில மாதங்களுக்கு முன்பு மகளுடன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் அவர் பூ வியாபாரம் செய்து வந்தார்.

இவரது தோழி காமராஜர் வடபகுதியை சேர்ந்த காயத்திரி(27) என்பவரும் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரும், கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த ரோஜா, மகளுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரோஜா மாயமான, அதே நாளில் காயத்திரியும் தனது 2 குழந்தைகளுடன் மாயமாகி இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News