உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே வெங்கடேஷ்வரா சாமி கோவில் தேர் திருவிழா

Published On 2023-04-04 09:53 GMT   |   Update On 2023-04-04 09:53 GMT
  • வெங்கடேஷ்வரா சுவாமியை வீதி வீதியாக மக்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேர் இழுத்து சென்றனர்.
  • 5000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா காமன்தொட்டி ஊராட்சியை சேர்ந்த கோபசந்திரம் கிராமத்தில் தென்பன்ணை ஆற்றுகறையோரம் அமைந்த 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் திருவிழா நடை பெற்றது.

இதனையொட்டி 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகள், பல்லக்குகள், நாடகம், அன்னதானம் என பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது.

பல நாட்களாக வாசனை நிறைந்த வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட வெங்கடேஷ்வரா சுவாமியை வீதி வீதியாக மக்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேர் இழுத்து சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழக பகுதியில் கோபந்திரம், ஒசூர், காமன்தொட்டி, பாத்த கோட்டா, அகரம், தொரப்பள்ளி, பேரண்ட ப்பள்ளி, உத்தன ப்பள்ளி, பீர் ேஜப்பள்ளி, 5000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கோவில் நிர்வா கிகள், தொழில் அதிபர்கள், நாராயண சுவாமி, ராமமூர்த்தி, ேகாபால் மற்றும் முனிராஜ், பி, டி, ஒ, விமல் ரவிக்குமார் மற்றும் நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News