உள்ளூர் செய்திகள்
காரைக்கால் கடற்கரை சாலையில்படகில் மின்சாதன பொருள் திருடிய வாலிபர் கைது
- விமல்ராஜ் தனது பைபர் படகை நேற்று இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்
- படகிலிருந்து ஒரு மர்ம நபர், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருளை திருடிகொண்டு சென்றதை பார்த்து, கையும் களவுமாக பிடித்தார்,
புதுச்சேரி:
காரைக்கால் கடற்கரை சாலையில், கிளிஞ்சல் மேட்டைச்சேர்ந்த விமல்ராஜ் தனது பைபர் படகை நேற்று இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலை படகை பார்க்க வந்த போது, படகிலிருந்து ஒரு மர்ம நபர், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருளை திருடிகொண்டு சென்றதை பார்த்து, கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் காரைக்காலை அடுத்த பட்டி னச்சேரி பகுதி யைச்சேர்ந்த ரகுபதி (வயது38) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்த னர்.