உள்ளூர் செய்திகள் (District)

சின்னசேலம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

Published On 2023-09-04 08:02 GMT   |   Update On 2023-09-04 08:02 GMT
  • சண்முகப்பிரியனுடன் இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சின்ன சேலம் நோக்கி சென்றார்.
  • இளங்கோவனும், சண்முகப்ரியனும் பலத்த காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள சடையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு ரேவதி என்ற மனைவியும், சண்முகப்பிரியன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் இளங்கோவன், அவரது மகன் சண்முகப்பிரியனுடன் இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சின்ன சேலம் நோக்கி சென்றார். அப்போது பங்காரம் அருகே உள்ள சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த தனியார் சொகுசு பஸ் இணங்கோவன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இளங்கோவனும், சண்முகப்ரியனும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இளங்கோவன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News