உள்ளூர் செய்திகள்

புழல் ஏரி நீர்மட்டம் 21 அடியை எட்டுகிறது

Published On 2025-02-09 12:14 IST   |   Update On 2025-02-09 12:14:00 IST
  • புழல் ஏரிக்கு சிறியகால்வாய் மற்றும் ஓடை, ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வந்து கொண்டு இருக்கிறது.
  • மழை குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர்:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக புழல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 21 அடி ஆகும். 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி முழு கொள்ளவை எட்டியது. பின்னர் மழை குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் புழல் ஏரிக்கு சிறியகால்வாய் மற்றும் ஓடை, ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை 196 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏற்கனவே புழல் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து இருந்த நிலையில் தற்போது முழு கொள்ளளவை எட்ட உள்ளது.

இன்று காலை நில வரப்படி புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 20.91 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3222மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக 209 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து முழுகொள்ளளவை எட்ட உள்ளது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமான 24 அடியில் 22.50 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3248 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது.

Tags:    

Similar News