உள்ளூர் செய்திகள்
புதுவண்ணாரப்பேட்டையில் மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பெண்கள் கைது
- மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற அண்ணா நகரை சேர்ந்த குகனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற அண்ணா நகரை சேர்ந்த குகனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.