உள்ளூர் செய்திகள்

கோதையாறு மலை பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த விஜய் வசந்த் எம்.பி.

Published On 2024-01-19 16:08 IST   |   Update On 2024-01-19 16:08:00 IST
  • பேருந்துகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
  • போக்குவரத்து துறை பொது மேலாளர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து இந்த இரண்டு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கோதையாறு மலை பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அங்குள்ள மக்களை சந்தித்தார். அவரிடம் பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்படுவதை எடுத்துரைத்தனர்.

அந்த மார்க்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் 313 மற்றும் 313 E எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

பின்னர் நாகர்கோவிலில் போக்குவரத்து துறை பொது மேலாளர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து இந்த இரண்டு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உடனடியாக இந்த பேருந்து வசதி மீண்டும் இயக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உறுதி அளித்தார்.

Tags:    

Similar News