உள்ளூர் செய்திகள் (District)

திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்களை எஸ்.பி. ஆய்வு

Published On 2023-10-08 08:27 GMT   |   Update On 2023-10-08 08:27 GMT
  • போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்
  • பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 7 மக ளிர் போலீஸ் நிலையங்கள், 1 குற்றவியல் போலீஸ் நிலை யம், 3 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், கலால் 4 போலீஸ் நிலையங்கள் என 55 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

இந்த நிலையில் போலீஸ் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்க ளின் பராமரிப்பு குறித்த மாதாந்திர ஆய்வு திருவண் ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலக வளா கத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

அப்போது போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு பராமரிப்பு கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசாருட னான ஆய்வு கூட்டம் நடை பெற்றது. இதில் போலீசார், பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என் பது குறித்து அவர் எடுத்து ரைத்தார். மேலும் போலீசா ரின் குறைகளையும் கேட்ட றிந்தார்.

தொடர்ந்து கடந்த மாதத் தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அவர் சான்றி தழ்களை வழங்கி பாராட்டி னார்.

அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண் டுகள், இன்ஸ்பெக்டர்கள் என போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News