உள்ளூர் செய்திகள் (District)

வேலூர் அண்ணாசாலையில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் மஞ்சப்பை பயன்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.

மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி

Published On 2023-04-20 09:03 GMT   |   Update On 2023-04-20 09:03 GMT
  • கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே நடந்தது

வேலூர்:

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் பூமி மாசடைந்து வருகிறது மேலும் ஆங்காங்கே வீசப்படும் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று காலை வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பாக தொடங்கியது.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியத்து தொடங்கி வைத்தார்.

காந்தி சிலை முன்பாக இருந்து மக்கான் சிக்னல் அண்ணா சாலை வழியாக சென்று பெரியார் பூங்கா அருகே நெடுவ நிறைவடைந்தது. பேரணியில் மாநகராட்சி ஊழியர்கள் தனியார் தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் தன்னார்வலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பதவிகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா கமிஷனர் ரத்தினசாமி மாவட்ட சுற்றுச்சூழல் இயக்குனர் ரவிச்சந்திரன் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினியர்கள் சுஷ்மிதா மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News