உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் திருமணமான 3 வருடத்தில் இளம்பெண் திடீர் சாவு

Published On 2022-07-11 09:58 GMT   |   Update On 2022-07-11 09:58 GMT
  • திருமணமான 3 வருடத்தில் கோமதி இறந்த தால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
  • கோமதி தனது குழந்தை க்கு கொடுப்பதற்காக உணவு தயார் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

கோவை:

திருச்சியை சேர்ந்தவர் சரவணன். டிரைவர். இவரது மனைவி கோமதி (வயது 22). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 11 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கோவை பீளமேடு அருகே உள்ள சின்னி யம்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

சம்பவத்தன்று கோமதி தனது குழந்தை க்கு கொடுப்பதற்காக உணவு தயார் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கோமதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 வருடத்தில் கோமதி இறந்த தால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News