- மரவள்ளிக்கிழங்கில் உள்ள இரும்பு, தாமிரம் ரத்த சோகையை கட்டுப்படுத்தும்.
- மரவள்ளிக்கிழங்கின் தன்மையால் அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும்.
"மன்மதக் கிழங்கு" -ஆம் இது நமது மரவள்ளிக் கிழங்கிற்கு இன்னொரு பெயர்! மரவள்ளிக் கிழங்கில் தான் அவ்வளவு ரொமான்ஸ் இருக்கிறது! ஆண்மையை வலுவாக்கும் இந்த மன்மதக் கிழங்கைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.. மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இதனால் உடலில் வலுவோடு புத்துணர்வு தோன்றும்!
இன்பமான தாம்பத்ய வாழ்வு திகட்டத் திகட்ட கிட்டும்! மேலும் இக்கிழங்கு நம் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைப்பதால் வீரியம் அதிகரிக்கும்! நீண்டநேரம் கலவி கொள்ளும் ஆற்றலைத் தரும்!
மரவள்ளிக்கிழங்கில் உள்ள இரும்பு, தாமிரம் ரத்த சோகையை கட்டுப்படுத்தும். விந்தணுக்களை அதிகரிக்கும்! மேலும் இதில் அதிக நார்சத்து இருப்பதால் எளிதில் சீரணமாக உதவும். உடல் எப்போதும் சீராக இருக்கும்! இதில் இடம்பெற்றுள்ள புரதச் சத்தும், வைட்டமின் கேவும், எலும்பு மற்றும் திசுக்கள் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைப்பதால் ஆண்கள் எல்லா நிலையிலும் உடலுறவு கொள்ளலாம்!
இதிலிருந்து தயாரிக்கப்படும் முக்கிய மாவுப் பொருள் ஜவ்வரிசி. இது "கஞ்சி" செய்ய உதவும்! இக்கஞ்சி வயிற்று புண் ஆறுவதற்கும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு செக்ஸ் ஆற்றலை மட்டுமின்றி உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது.
வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத்தரும். இதில் கவனிக்க ஒரு முக்கியமான விஷயம் மரவள்ளிக் கிழங்கு சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்டபின்போ அன்றைய நாளில் இஞ்சி/ சுக்கு சாப்பிடக்கூடாது. மரவள்ளிக்கிழங்கின் தன்மையால் அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும்.
- வெங்கடேஷ் ஆறுமுகம்.