இந்தியா (National)

கடைசி கட்ட தேர்தல்: 57 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

Published On 2024-05-30 13:17 GMT   |   Update On 2024-05-30 13:17 GMT
  • ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
  • இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதம், 2-ம் கட்ட தேர்தலில் 66.71 சதவீதம், 3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீதம், 4-ம் கட்ட தேர்தலில் 69.16 சதவீதம், 5-ம் கட்ட தேர்தலில் 62.20 சதவீதம், 6-ம் கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

கடைசி கட்ட தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களில் உள்ளன. சண்டிகார் யூனியன் பிரதேசத்துக்கும் அன்று தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

7-வது கட்ட தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் அவர் 3-ம் முறையாக போட்டியிடுகிறார் . மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார்.

இந்த 57 தொகுதிகளிலும் கடந்த 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த இரு வாரங்களாக அனல் பறக்கும் வகையில் பிரசாரம் நடைபெற்றது.

இந்நிலையில் 7-ம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடி 3 நாட்கள் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்ய போகிறார்.

ஜூன் 4-ம் தேதி வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகிறது.

Tags:    

Similar News