கும்பமேளா: சுங்கக் கட்டணத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? அகிலேஷ் யாதவ்
- போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்.
- ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?
மகா கும்பமேளாவின் போது பயண இடையூறுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகளவிலான பக்தர்களின் வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பிரயாக்ராஜ்-க்கு செல்லும் சாலைகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இது குறித்த எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அகிலேஷ் யாதவ், "மகா கும்பமேளாவின் போது, உ.பி. மாநிலத்தில் வாகனங்களுக்கு கட்டணமில்லாச் சலுகை வழங்க வேண்டும். இது பயண தடைகளையும் போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்."
"திரைப்படங்களுக்கு பொழுதுபோக்கு வரி இலவசமாக்க முடியும் என்ற போது, மகா கும்பமேளா போன்ற பிரமாண்டமான விழாவில் வாகனங்களுக்கு ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?" என்று குறிப்பிட்டுள்ளார்.
உத்த பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம்ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கும்பமேளாவில் கலந்து கொள்ள மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.