இந்தியா

சென்னையை சேர்ந்த பாடகியை திருமணம் செய்தார் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா

Published On 2025-03-06 15:16 IST   |   Update On 2025-03-06 15:16:00 IST
  • தேஜஸ்வி சூர்யாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகினறன
  • பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் சிவஸ்ரீ ஒரு பாடல் பாடினார்.

பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, சென்னையை சேர்ந்த பாடகியும் பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பெங்களூரில் நடைபெற்ற தேஜஸ்வி சூர்யாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகினறன.

பாஜக தலைவர்கள் அண்ணாமலை, பிரதாப் சிம்ஹா, அமித் மாளவியா, பி.ஒய்.விஜயேந்திரா, மத்திய அமைச்சர் வி.சோமன்னா ஆகியோர் தேஜஸ்வி சூர்யாவின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ள சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் சென்னை சமஸ்கிருத கல்லுாரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டமும் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பயோ இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக். பட்டமும் முடித்துள்ளார்.

மேலும், சிவஸ்ரீ சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலை, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் இவர் ஒரு பாடலும் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News